திரு. ஆர்.பி.சாரதி ஆசிரியராகப் பணியாற்றியவர்; கல்வித்துறை துணை இயக்குனராக ஓய்வு பெற்றவர்; 1953 முதல் எழுத்தாளர். சிறந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். திரு.ராமச்சந்திர குஹாவின் ‘காந்திக்குப் பிறகு இந்தியா’, இலங்கையின் வரலாறு கூறும் ‘மஹாவம்சம்’, முகலாய மன்னர் பாபரின் சரித்திரமான ‘பாபர் நாமா’ ஆகியவற்றை தெள்ளுதமிழில் வழங்கியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
Month: February 2023
மக்கள் கவி பாரதி
தமிழக முன்னாள் முதல்வர் திரு. சி.என்.அண்ணாதுரை, பிற திராவிட அறிஞர்களைப் போல மகாகவி பாரதியை மூடி மறைக்க விரும்பாதவர். பாரதியை தேசியகவி என்று சொல்வதில் அவருக்கு சற்றே சங்கடம் இருந்தாலும், மக்களுக்கான கவிஞர் என்று அவரைக் கொண்டாடினார். இது திரு. அண்ணாதுரை அவர்களின் கட்டுரை.
சுவாமி விவேகானந்தரின் பொருளாதாரச் சித்தாந்தம்
திரு. வானமாமலை, சுதேசி விழிப்புணர்வு இயக்கம் சார்பில் வெளிவந்த ‘சுதேசி செய்தி’ மாத இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்ன்னாரது கட்டுரை இங்கே…
வெய்ய இடி
இந்தியா 27.09.1909 இதழில் வெளியான ‘ஞானரதம்’ கதையில் இடம் பெறும் காதலைப் பற்றிய கவிதை இது.
புகழையும் துறந்த துறவி
மூத்த பத்திரிகையாளர் திரு. திருப்பூர் கிருஷ்ணன் ‘தினமணி’ நாளிதழில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கு நன்றியுடன் மீள்பதிவாகிறது...
மகாகவிகள் வாழ்த்திய தமிழ்ப் பேராசான்
இன்று நாம் காணும் தொன்மையான தமிழ் இலக்கியங்களில் பலவற்றை கரையானுக்கு இரையாகாகாமல் பனையேடுகளிலிருந்து நூலாக மாற்றிக் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர். அவரது கடும் முயற்சியும் உழைப்பும் இல்லாதிருப்பின், பல பழந்தமிழ் இலகியங்களை நாம் அறிந்திருக்கவே இயலாது. அவரது சிறப்பை அறிந்து அந்நாளிலேயே மகாகவிகள் இருவர் வாழ்த்துக் கவிதை பாடி மகிழ்ந்துள்ளனர். அது பற்றி இங்கே காண்போம்…
பாரதியாரும் கோவில் யானையும்
பாரதியியல் ஆய்வாளரும், சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவருமான பேரா. திரு. ய.மணிகண்டன், ‘தினமணி’ நாளிதழில் எழுதிய ஆய்வுக் கட்டுரை இது. நன்றியுடன் மீள்பதிவாகிறது...
தமிழ் வளர்ப்பு – பாரதி விடுத்த கோரிக்கை
மகாகவி பாரதி தாம் எழுதிய கவிதை, கட்டுரை, கதைகளை நூலாக்க வேண்டுமென்ற அதீத தாபம் கொண்டிருந்தார். ஆனால், அடிமை இந்தியாவில் அதற்கான சூழல் அவருக்கு வாய்க்கவில்லை. அவரது நிலையோ அன்றாடச் செலவுகளுக்கே திண்டாடும் நிலை. எனவே, தமிழ் வளர்ப்புப் பண்ணை என்ற பெயரில் தமது நூல்களை வெளியிட முன்பதிவுத் திட்டம் போன்ற ஒரு நிதி முதலீட்டுத் திட்டத்தை நடத்த விழைந்தார். அந்த தமிழ் வளர்ப்புப் பண்ணை சார்பில் வெளியான விளம்பரம் இது. இந்த விளம்பரச் செய்தியை மகாகவி பாரதியே எழுதினாரா என்பது உறுதியாகாத தகவல். அதேசமயம், அக்காலத்தில் பாரதியின் துடிப்பு மிகு எழுத்தார்வத்துக்கு அற்புதமான ஆதார ஆவணம் இது…
ஆரிய – திராவிட இனவாதம் குறித்து விவேகானந்தர்
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மூத்த தலைவர் திரு. ஆர்.பி.வி.எஸ்.மணியன், சுவாமி விவேகானந்தரின் கருத்துகளின் அடிப்படையில் எழுதிய அற்புதமான கட்டுரை இது....
படபடப்பு
போர்க்களச் சூழலை ஓர் எழுத்தாளர் எப்படிப் பார்க்கிறார்? 1946-இல் புதுமைப்பித்தன் எழுதிய இந்த சிறுகதையே இக்கேள்விக்கு விடை....
சுவாமிஜியின் பெருந்தன்மை!
திருமதி கே.பத்மாவதி, தொலைதொடர்புத் துறையில் முதுநிலை கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சென்னையில் வசிக்கிறார்; தகவல் தொழில்நுட்ப வல்லுனரான காம்கேர் கே. புவனேஸ்வரியின் அன்னை; மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் சென்னை ‘ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை’யின் நிர்வாகி. சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே….
வந்திலரேல்…
11.09.1909 ‘இந்தியா’ இதழில், ‘வி.ஓ.சிதம்பரமும் கோயமுத்தூர் ஜெயிலும்’ என்ற கட்டுரையின் துவக்கத்தில் காணப்படும் பாடல் இது. தலைப்பு, தமிழ்ப்பல்கலைக் கழகப் பதிப்பில் கண்டவண்ணம் தரப்பட்டுள்ளது.
அறியாமை, வறுமை அகல வழிகாட்டியவர் சுவாமிஜி
திரு. கே.முத்துராமகிருஷ்ணன், திருச்சி அருகே லால்குடியில் வசிக்கிறார். சிறுவயது முதற்கொண்டே ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தின் தொண்டர்; ராமகிருஷ்ண மடத்தின் மந்திர தீட்சை பெற்றவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டுக் கொண்டாட்டத்தின்போது (2013) சுவாமிஜி குறித்த இவர் எழுதிய கட்டுரை இங்கே…
சுதந்திரம்
1.11.1908ம் தேதி ‘இந்தியா’ பத்திரிகையில் தாம் எழுதிய ‘முதற்பிரயத்தனம்’ என்ற கட்டுரையின் இடையே ‘பைரன்’ என்ற ஆங்கிலக் கவிஞரின் பாடலை மொழிபெயர்த்துப் பாரதி அளித்துள்ளார்.அதுவே இக்கவிதை...
விவேகாநந்த வெண்பா (கவிதை)
திரு. ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், ஆன்மிக நாட்டம் கொண்ட எழுத்தாளர், கவிஞர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் மீதான வெண்பாக்கள் இவை….