-மகாகவி பாரதி
மறுநாள் காலை அரச ஆடை புனைந்து, திருதராஷ்டிரன் அவைக்களத்தை ஏகுகின்றனர் பாணடவர்கள். அங்கு வீற்றிருப்போரைக் குறிப்பிடுகையில் ‘கேட்டினுக் கிரையாவான் -மதி கெடுந் துரியோதனன் கிளையினரும்’ சூழ்ந்திருப்பதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி...

முதல் பாகம்
1.2. சூதாட்டச் சருக்கம்
1.2.3. பாண்டவர் சபைக்கு வருதல்
பாணர்கள் துதிகூற-இளம்
பகலவன் எழுமுனர்த் துயிலெழுந் தார்;
தோணலத் திணையில்லார்- தெய்வந்
துதித்தனர் செய்யபொற் பட்டணிந்து
பூணணிந் தாயுதங் கள்- பல
பூண்டுபொற் சபையிடைப் போந்தனரால்;
நாணமில் கவுரவரும்- தங்கள்
நாயக னொடுமங் வீற்றிருந்தார். 162
வீட்டுமன் தானிருந் தான்;-அற
விதுரனும், பார்ப்ப்பனக் குரவர்களும்,
நாட்டுமந் திரிமாரும்,-பிற
நாட்டினர் பலபல மன்னர்களும்
கேட்டினுக் கிரையாவான்- மதி
கெடுந்துரி யோதனன் கிளையின ரும்,
மாட்டுறு நண்பர்களும்- அந்த
வான்பெருஞ் சவையிடை வயங்கிநின்றார். 163
$$$