ஒரு சமயத்தில் ஆறுமுகத்தாபிள்ளை, தம்முடைய குடும்ப சம்பந்தமாகக் கும்பகோணத்தில் ஒருவருக்குப் பத்திரமொன்று எழுதிக் கொடுக்கும்படி நேர்ந்தது. அதிற் கையெழுத்துப்போடத் தொடங்குகையில் அவர், "ஆறுமுகம் பிள்ளை யென்று போடவா? ஆறுமுகத்தா பிள்ளை யென்று போடவா?" என்று கேட்டனர். இவர், "ஆறுமுகம் பிள்ளை யென்றால் அத்துக் கெட்டுவிடுமே; ஆறுமுகத்தா பிள்ளை யென்றே போடலாம்" என்றனர். கேட்டவர்கள் மகிழ்ந்தார்கள்.
Day: December 3, 2022
வீரத் துறவியும் வீரக் கவிஞரும்
-நல்லி குப்புசாமி செட்டியார் திரு நல்லி குப்புசாமி செட்டியார், சென்னையில் ‘நல்லி சில்க்ஸ்’ என்ற பிரமாண்டமான பட்டு வர்த்தக நிறுவனத்தை நடத்தி வருபவர். வெற்றிகரமான வணிகராக மட்டுமல்லாது, கலை இலக்கிய செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் கொண்டவராகவும் திகழ்பவர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி இருப்பவர்; பாரதி அன்பர்; மொழிபெயர்ப்புத் துறையை மேம்படுத்த ‘நல்லி திசை எட்டும்’ என்ற காலாண்டிதழை நடத்தி வருபவர்; பத்மஸ்ரீ, கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே... சிகாகோவில் நடைபெற்ற … Continue reading வீரத் துறவியும் வீரக் கவிஞரும்
பாஞ்சாலி சபதம் – 1.1.24
பீமனைத் தொடர்ந்து விஜயனும், நகுல சகாதேவரும் தங்கள் தனையனை எதிர்த்து வாதிடுகின்றனர். இதுகாறும் அண்ணனை எதிர்த்துப் பேசியிராத அவர்கள் இவ்வாறு பேசுவது நெஞ்சம் கொதித்ததால் என்கிறார் மகாகவி பாரதி. அவற்றுக்குப் பதில் அளிக்கும் தருமன், கைப்பிடி கொண்டு சுழற்றுவோனின் லாவகத்துகேற்பச் சுழலும் சக்கரம் போன்றது மானுட வாழ்க்கை என்கிறான். “தோன்றி அziவது வாழ்க்கை” என்ற தத்துவத்தை முன்வைக்கும் தருமன், தந்தை சொல் கேட்பது ராமன் காட்டிய வழி என்கிறான்....