ஒருநாள் நாங்கள் பாடங்கேட்டுக் கொண்டிருந்த பொழுது சென்னையிலிருந்த சுப்பராய செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், "நான் திருச்சிராப்பள்ளியில் தங்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் வெஸ்லியன் மிஷன் ஸ்கூலில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் மாதச் சம்பளமாகிய ரூபாய் பதினைந்தைத் தங்களிடம் கொடுத்து வந்தனம் செய்து பெற்றுக்கொண்ட பொழுது தாங்கள் இந்தப் பதினைந்தைத் திரும்பவைத்தால் என்ன தொகையோ அதனைப்பெற்று வாழ்ந்திருக்க வேண்டுமென்று அருளிச்செய்தீர்கள். அந்தப்படியே தங்களுடைய பெருங்கருணையினால் எனக்கு இன்று ரூ. 50 சம்பளம் ஏற்பட்டது" என்று தெரிவித்திருந்தார். இவருடைய நல்வாக்குப் பலிதமாகுமென்பதைச் சிலராற் கேட்டிருந்த நாங்கள் அக்கடிதத்தால் அச்செய்தி உண்மையென்று அறிந்து மகிழ்ந்தோம்....
Day: December 14, 2022
விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம்!
அமரர் மௌலானா வஹிதுதீன் கான் (1925- 2021), பாரதத்தின் இஸ்லாமியப் பேரறிஞர்களுள் முதன்மையானவர். உத்தரப்பிரதேசத்தின் அஸம்கார் பகுதியில் வாழ்ந்தவர். திருகுர்ஆனுக்கு நவீன நோக்கில் உரை எழுதியவர்; முஸ்லிம் மார்க்க சிந்தனையாளர்களால் மிகவும் போற்றி மதிக்கப்படுபவர். பாரதம் உயர வேண்டுமானால் இஸ்லாமியர்களும் ஹிந்துக்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற சமரசக் கருத்தை ஓயாமல் முன்வைத்தவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…
பாஞ்சாலி சபதம்- 1.2.8
சூதாட்டத்தின் தீமையைக் கூறும் தருமனிடம், ‘சாத்திரம் பேசாதே, மன்னர்களை சூதாட அழைத்தால் மறுப்பது மரபல்ல’ என்கிறான் சகுனி.