புதுக்கோட்டை மன்னராகிய கெளரவம் பொருந்திய இராமசந்திர தொண்டைமானவர்களுடைய மூத்த தேவியாரான ஸ்ரீ பிரகதம்பா பாய் சாகேபவர்கள் அங்கே இவர் வந்திருத்தலைக் கேள்வியுற்றுத் தக்கவர்களை அனுப்பி இவரை அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து நாடோறும் பல அரிய விஷயங்களைக் கேட்டார்கள். தேவாரங்கள் சிலவற்றிற்கும் பெரிய புராணத்திலுள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் பொருள் கேட்டு அறிந்து தக்க ஸம்மானங்கள் பல செய்வித்து இவருடைய பூஜைக்கு வேண்டிய பாத்திரங்களை வெள்ளியினாலே செய்வித்து அளித்தார்கள்.
Day: December 21, 2022
மகரிஷி விவேகானந்தர்
ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்து…
பாஞ்சாலி சபதம் – 2.1.4
அறவுரை கூறி குருகுல இளவரசனைத் திருத்த முயன்ற விதுரன் தன் மீது பொழியப்பட்ட துரியனின் சுடுசொற்களால் மனம் நொந்த விதுரன், “சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா?” என்று விரக்தியுடன் அவையில் அமைதியாவதாக எழுதுகிறார் மகாகவி பாரதி. மன்னர் திருதராஷ்டிரனும், பீஷ்மரும் இதனைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கையில் நான் நீதி சொல்லி என்ன பயன் என்றும் விதுரன் வருந்துகிறார்...