‘வாழும் பாரதி’ திரு. இசைக்கவி ரமணன் தனது முகநூலில் எழுதும் ‘மார்கழிப் பனித்துளி’ இசைக் கவிதைகளை இங்கே மீள்பதிவு செய்கிறோம். இங்கே உள்ளவை இரு கவிதைகள்....
Day: December 27, 2022
ஸ்வதந்திர கர்ஜனை- 2(18)
ஜெர்மனியின் வெற்றி படிப்படியாகக் கிடைத்துக் கொண்டிருந்த நிலையில் 1941, ஜூன் மாதத்தில் ஜெர்மனி ரஷ்யாவின் மீது படையெடுத்துச் சென்றது. அதுவரை ரஷ்யா ஜெர்மனியோடு ஒரு யுத்தமில்லா அமைதி ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டிருந்தது. ரஷ்யா எதைச் செய்தாலும் ‘ஆமாம்’ சாமி போடும் இந்திய கம்யூனிஸ்டுகளும் இந்த யுத்தத்தை ஏகாதிபத்திய யுத்தம் என்று பறைசாற்றிக் கொண்டிருந்தனர். எந்த நேரத்தில் ஜெர்மனி ரஷ்யா மீது படையெடுத்துச் சென்று தாக்கத் தொடங்கியதோ அப்போது நமது இந்திய கம்யூனிஸ்டுகள் தாங்கள் பாடிவந்த ராகத்தை மாற்றி, யுத்தத்துக்கு “மக்கள் யுத்தம்” என்று செல்லப் பெயரிட்டு அழைக்கலாயினர். ரஷ்யாவின் எதிரியான ஜெர்மனி பிரிட்டனுக்கும் எதிரி என்பதால், ரஷ்யாவுடன் ஜெர்மனியை எதிர்க்கும் பிரிட்டனுக்கு கம்யூனிஸ்டுகள் யுத்த ஆதரவு பிரசாரம் செய்யத் தொடங்கினர்...
அரசியலுக்கு வர சுவாமி விவேகானந்தர் தான் தூண்டுகோல்
சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி, தமிழகம் முழுவதுமான ஓராண்டு கால தொடர் கொண்டாட்டத்தை 27.2.2013-இல் சென்னையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அமரர் செல்வி ஜெ.ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அந்த விழாவில் அவர் பேசியதன் சுருக்கம் இது.
பாஞ்சாலி சபதம்- 2.1.10
பார்த்தனை இழந்த பிறகும் தருமன் தன்னிலை மீளவில்லை. இதுவே சூதின் இயல்பு. அதை மேலும் விசிறி விடுகிறான் சகுனி. வீமனை பந்தயம் வை என்கிறான். சூதே ஆயினும், எதிர்த்தரப்பில் இருப்பவர் பணயப் பொருளைக் கூறல் மரபல்ல. அதையும் மீறுகிறான் சகுனி. ஆனால், தருமன் ‘தக்கது செய்தல் மறந்தனன்’. “பெரும்புகழ் வீமனை, - உங்கள் பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் - வென்று போ!’ என்று உரைத்தனன்... விதி அவன் நாவில் வந்து அமர்ந்திருக்கிறதே!