இந்திய நாட்டில் பழம்பெரும் ஸ்தாபனமாக விளங்குவது காங்கிரஸ். அதன் வயது இப்போது ஐம்பது. இந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் பல நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், எத்தனையோ பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தபோதும், ஆண்டுதோறும் நடத்துகின்ற மாநாட்டை மட்டும் நடத்தத் தவறியதே இல்லை. அது எங்கள் தேசிய கடமையாக இருந்து வந்திருக்கிறது. ‘காங்கிரஸ்’ எந்த ஜாதியாருக்கோ, மதத்தாருக்கோ அல்லது வேறு எந்த பிரிவினருக்கோ பிரதிநிதியாக இல்லை. இந்திய மக்கள் அனைவருக்கும், நிலவும் அத்தனை கொள்கைகளுக்கும், எல்லா உரிமைகளுக்கும் பிரதிநிதியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.....
Day: December 15, 2022
பாஞ்சாலி சபதம் – 1.2.9
சகுனியின் ஏளனத்தை அடுத்து சூதாட தருமன் சம்மதிக்கிறான். அப்போது முந்தைய வழக்கத்தை தொடர்வது மரபு என்ற வாதத்தை மகாகவி பாரதி கண்டிக்கிறார். ”முன்பி ருந்ததொர் காரணத் தாலே, மூடரே,பொய்யை மெய்என லாமோ?” என்கிறார். இறுதியில் “மதியி னும்விதி தான் பெரி தன்றோ?” என்று புலம்பலுடன் இக்கவிதையை நிறைவு செய்கிறார்...
தமிழகத்திற்கு எழுச்சி தரும் ரத யாத்திரை
இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் திரு. மயில்சாமி அண்ணாதுரை, கோவை மாவட்டம், கோதவாடி என்ற கிராமத்தில் ஆசிரியர் குடும்பத்தில் பிறந்தவர். தனது கடும் உழைப்பால் முன்னேறி, பெங்களூரிலுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (ISRO) ‘சந்திரயான்’ திட்ட இயக்குனராகச் செயலாற்றியவர். 2013-இல் கோவையில், சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்க விழாவில் பேசிய அன்னாரது கருத்துகள் இங்கே....