-மகாகவி பாரதி

6. பிழைத்த தென்னந் தோப்பு
வயலிடை யினிலே- செழுநீர், மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை- தனியே, ஆறுதல் கொள்ள வந்தேன். 1
காற்றடித் ததிலே- மரங்கள், கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே- சிதறி, நாடெங்கும் வீழ்ந்தனவே. 2
சிறிய திட்டையிலே- உளதோர், தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை- அதனை, வாயு பொடிக்க வில்லை. 3
வீழ்ந்தன சிலவாம்- மரங்கள், மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே- அதனை, வாயு பொறுத்து விட்டான். 4
தனிமை கண்டதுண்டு;- அதிலே, சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில்,- அது தேம் பாகு மதுர மன்றோ? 5
இரவி நின்றது காண்- விண்ணிலே, இன்ப வொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே- கதிர்கள், பாடிக் களித்தனவே. 6
நின்ற மரத்திடையே- சிறிதோர், நிழலினில் இருந்தேன்;
என்றும் கவிதையிலே- நிலையாம், இன்பம் அறிந்து கொண்டேன். 7
வாழ்க பராசக்தி!- நினையே வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!- இதையென், வாக்கு மறவாதே.
$$$