செத்தவரைப் பிழைப்பிக்கும் ஸஞ்சீவி

-மகாகவி பாரதி

மூன்றே பத்திகள் தான்; இதில் காணப்படும் ஆவேசம், மகாகவி பாரதியின் மற்றொரு முகமான அரசியலாளரை முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. மிதவாதிகள் மீதான காட்டமான விமர்சனத்தை முன்வைக்கும் திலகரின் சீடராக இங்கேபாரதி மிளிர்கிறார்....

அமெரிக்காவில் ஒரு பிரஸித்த மாது சிகாகோவிலுள்ள வைத்திய மஹான்கள் முன்னிலையில் ஒரு செத்த முயலை மின்ஸார வேகத்தால் உயிர்பித்தாள். எல்லாப் பண்டிதர்களும் ஆச்சரியப்பட்டனர். நமது பாரத நாட்டிலும் ஸ்வாபிமான மின்றி ஆங்கில மாயையால் கொல்லப்பட்ட பாரதர்களை “வந்தே மாதரம்” எனும் பஞ்சாக்ஷரமானது உயிர்ப்பித்துவிட்டது.

நாட்டின் பெருமையை விளக்க இந்நாட்டிலேயே பல அத்தாட்சிகள் பிரத்தியக்ஷமாய் இருக்கின்றன. வெளி நாட்டவர்களும் அநேக விதமாய் வெளியிட்டிருக்கின்றனர். ஸ்வதந்திர முயற்சியில் எண்ணிறந்த கஷ்டங்களை மஹான்களான பலர் மனஞ் சலியாமல் திடபக்தியுடன் அனுபவித்து வருகின்றனர்.

இதைக் கண்டு பிரிடிஷ் அரசாங்கம் மிரண்டு, பல சட்டங்கள் எனும் ஆயுதங்களை வீசுகின்றது. இத்தனை விதமான கிளர்ச்சிகளைக் கண்டும் இன்னும் சில ராஜ விச்வாஸ மிதவாதிகள் கண் விழியாமல், முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி, உடுப்ப உடுத்து, இடித்திடித்துண்ணா, செவிகேளா, கண்விழியா நெட்டுயிரிப்போடுற்ற பிணமாய் இருக்கின்றனர். இவர்களை எந்த மின்ஸார சக்தி வந்து உயிர்பிக்கப் போகிறதோ, அது கடவுளே யறிவார்.

  •  இந்தியா (19-2-1910)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s