-மகாகவி பாரதி
சூதாட்டத்தில் செல்வங்கள், நாடு, சகோதரர்களை இழந்த தருமன் இறுதியில் தன்னையும் பணயம் வைத்து இழக்கிறான். உடனே துரியன் ஆர்ப்பரிக்கிறான். “இதை எங்கும் பறையறை வாயடா- தம்பி!” என துச்சாதனனிடம் கூறுகிறான்...

இரண்டாம் பாகம்
2.1. அடிமைச் சருக்கம்
2.1.12. துரியோதனன் சொல்வது
பொங்கி யெழுந்து சுயோதனன் – அங்கு
பூதல மன்னர்க்குச் சொல்லுவான்: – ‘ஒளி
மங்கி யழிந்தனர் பாண்டவர் – புவி
மண்டலம் நம்ம தினிக்கண்டீர். – இவர்
சங்கை யிலாத நிதியெலாம்- நம்மைச்
சார்ந்தது; வாழ்த்துதிர் மன்னர்காள்! – இதை
எங்கும் பறையறை வாயடா – தம்பி!’
என்றது கேட்டுச் சகுனிதான், 35
$$$