மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்த் தாய்க்குக் கிடைத்த இளையமகன் கவியரசு கண்ணதாசன். திரைப் பாடல்களிலும் இலக்கியம் படைக்க முடியும் என்று நிரூபித்த, அமுதத் தமிழ்ச் சொல்லாற்றலுக்கு சொந்தக்காரர். கவிஞர் மட்டுமல்ல, நாடறிந்த எழுத்தாளர்; அரிய மானுடர். அன்னாரது நூற்றாண்டு இன்று (ஜூன் 24) தொடங்குகிறது. அதனையொட்டி அவரது சுய பிரகடனக் கவிதை இங்கே…
Tag: கவியரசு கண்ணதாசன்
பூந்தேனில் கலந்து… பொன் வண்டு எழுந்து…
இசையமைப்பாளர் திரு. கே.வி.மகாதேவன் அவர்களின் இறுதிக் காலத்தில் இசை அமைத்த பாடம் ‘ஏணிப்படிகள்’. அதில் இடம் பெறும், ஒரே மெட்டில் அமைந்த, ஒரே பல்லவியுடன், இரு வகையான சரணங்களுடன் கூடிய இரு பாடல்கள் இங்கே…திரைக்கதையின் போக்கிற்கு ஏற்பவும், கதாபாத்திரங்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையிலும், ஆண்- பெண் ஆகியோரின் இருவேறு மனக் கற்பனைகளில் கவியரசர் எழுதிய வண்ண வரிகள் இதோ…
பத்துமலைத் திரு முத்துக்குமரன்…
‘வருவான் வடிவேலன்’ (1978) என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற அற்புதமான பக்திப் பரவசமூட்டும் பாடல் இது. இனிய சொற்களும், இனிய இசையும், இனிய குரல்களும் பக்தியுடன் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் இது…
நினைவாலே சிலை செய்து…
‘அந்தமான் காதலி’ படத்தின் பாடல்கள் அன்று முதல் இன்று வரை, செவிக்கு இதமாகவும் மனதைப் பக்குவப்படுத்தும் மருந்தாகவும் இருக்கின்றன. காதலியைப் பிரிந்து அவள் நினைவாகவே வாடும் நாயகன் அவளை தனது இதயத்திலிருந்து ஒருநாளும் அகற்றவில்லை. அதன் அடையாளமாகவே, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்” என்று கூறும் நாயகன், தனது காதலியை “திருக்கோயிலே ஓடி வா?” என்று அழைக்கிறான். எவ்வளவு இனிய உவமை! கவியரசரின் சிந்தையில் மலர்ந்த திரைக்கவிதை இன்று மட்டுமல்ல, என்றும் மணம் வீசும்.
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு!
சினிமா மூலமாக மக்களிடையே செல்வாக்குப் பெற்று தமிழக அரசியல் களத்தையே மாற்றியவர் திரு. எம்.ஜி.ஆர். அதற்கு அவரது திரைப்படங்களில் அமைந்த பாடல்களும் பெருமளவில் உதவியுள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாடல் இது. கவியரசரின் சிந்தனை வரிகள் ஒரு கதாநாயகனின் சொற்களாக அமைந்தபோது, அவர் மக்களின் தலைவன் ஆனது வியப்பில்லை தான்….
செந்தமிழ்த் தேன்மொழியாள்…
திரையுலகை ஆக்கிரமித்த திராவிட இயக்கத்தின் தொடக்கக் காலத்தில், அந்த இயக்கத்தின் இளம் நாற்றாக வெளிப்பட்ட கவியரசர் கண்ணதாசன் இயற்றிய அற்புதமான பாடல் இது. ‘மாலையிட்ட மங்கை’ (1958) என்ற இந்தத் திரைப்படமும், இந்தப் பாடலும் அக்காலத்தில் தமிழகமெங்கும் பிரபலமாகின. இத்திரைப்படத்தின் 15 பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டன. படத்தின் தயாரிப்பாளரும் அவரே. கவியரசரை தமிழகத்திற்கு முழுமையாக அறிமுகம் செய்வித்த திரைப்படம் இது எனில் மிகையில்லை.
புதியன பிறக்கட்டும்! (கவிதை)
இந்த ‘சோபகிருது’ புத்தாண்டு எல்லோருக்கும் முக்கனிச் சுவை போல இனிதாகட்டும்! கவியரசரின் புத்தாண்டு வாழ்த்துடன் இந்த ஆண்டு இனிதே தொடங்கட்டும்!!
உலகம் பிறந்தது எனக்காக!
உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் இப்படத்தின் நாயகன்; சிறுவயதில் அறியாமல் செய்த தவறால் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டவன்; விடுதலையாகி, ஆதரவற்றவனாக வெளிவரும்போது, சிறைப்பட்ட பறவையின் விடுதலை உணர்வுடன் அவன் பாடும் பாடல் இது. பாசத்துக்கு ஏங்கும் தவிப்பையும், உலகை ரசிக்கத் தயாராகும் துடிப்பையும், ‘உலகம் பிறந்தது எனக்காக’ என்ற முதல் வரியிலேயே சொல்கிறான். திரைப்படத்துக்கேற்ற காவிய வரிகளை வார்த்திருக்கிறார் கவியரசர்...
ராமன்… எத்தனை ராமனடி?
இங்கே திரைப்பாடலில் ராமனை எப்படி வர்ணிக்கிறார் கவியரசர் என்று பாருங்கள். இதுதான், நாட்டின் நாடியுணர்ந்த எழுத்தாளனின் கடமை. திரைக்கலையும் பண்பாட்டுப் பெருவெளியுடன் உறவு கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கவிஞரின் தாபம் இப்பாடலில் இழையோடுகிறது. இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம்: லட்சுமி கல்யாணம்.
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
திரைக்கதையையே கவிதையாக்கி, சோககீதம் இசைக்கிறார் கவியரசர். நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்தத் திரைக்கவிதையின் பரிமாணம் புரியும்.
மயக்கமா, கலக்கமா?
‘சுமைதாங்கி’ திரைப்படத்தில் இடம்பெற்ற கவியரசரின் இப்பாடல், காலத்தை வென்று ரீங்கரிக்கும் இனிய தத்துவப் பாடல்; வாழ்வில் கலக்கம் சூழும் தருணங்களில் மனம் தெளிவு பெறக் கேட்க வேண்டிய அற்புதமான திரைப்பாடல்….
மருதமலை மாமணியே முருகய்யா!
அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள். தைப்பூச சிறப்புப் பதிவாக கவியரசர் தெய்வீகப் பாடல் இங்கே....
தீபம் போதும்! (கவிதை)
மகாத்மா காந்திக்கு கவியரசரின் அஞ்சலிக் கவிதை இது...(இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்)
தாயகச் செல்வன் (கவிதை)
திரு. கவியரசு கண்ணதாசன் (1927- 1981), மகாகவி பாரதிக்குப் பிறகு வந்த, உத்வேகமூட்டும் தமிழ்க் கவிஞர்; திரைப்பாடல்களுக்கு இலக்கிய மரியாதையை ஏற்படுத்தியவர். சுவாமி விவேகானந்தர் மீதான கவியரசரின் இனிய கவிதை இது…
பாட்டும் நானே… பாவமும் நானே!
ஆணவம் கொண்ட பாடகர் ஒருவருக்கு பாடம் கற்பிக்க, விறகுவெட்டியாய் வந்து பாடி திருவிளையாடல் நிகழ்த்திய சிவனின் பெருமையை உணர்த்தும் பாடல் இது... திரைக்கதைக்கு ஏற்ப கவியரசர் நிகழ்த்தியுள்ள சொற்களின் ஜாலம், திரைப்படத்தின் தரத்தையே உயர்த்துகிறது...