-மகாகவி பாரதி
இரண்டாம் பாகம் எழுதத் தொடங்குவதற்கு முன் கலைமகளையும் மகாகவி பாரதி பிரார்த்திக்கிறார். கலைமகளின் பேரருள் இடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதே கவிஞரின் வேண்டுதல்...

இரண்டாம் பாகம்
2.1. அடிமைச் சருக்கம்
2.1.2. சரஸ்வதி வணக்கம்
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றிக் கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார்இயம்பு கின்றார்.
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம்இயற்கை யாயின்,
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொ ணாதோ? 2
$$$