-மகாகவி பாரதி
சூதாட அழைத்த சகுனிக்கு, ‘அது அறமன்று’ என தருமன் அவையில் மறுப்புரை கூறுவதாக மகாகவி பாரதி எழுதுகிறார்...

முதல் பாகம்
1.2. சூதாட்டச் சருக்கம்
1.2. 5. தருமன் மறுத்தல்
தருமனங் கிவைசொல் வான்;- ‘ஐய!
சதியுறு சூதினுக் கெனைஅழைத் தாய்;
பெருமைஇங் கிதிலுண்டோ?- அறப்
பெற்றி உண்டோ?மறப் பீடுளதோ?
வருமம்நின் மனத்துடை யாய்!- எங்கள்
வாழ்வினை உகந்திலை என லறிவேன்;
இருமையுங் கெடுப் பது வாம்- இந்த
இழிதொழி லாலெமை அழித்த லுற்றாய்.’ 167
$$$