பாரதி-அறுபத்தாறு- (57-66)

“எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா” என்று துவங்கும் பாரதி- அறுபத்தாறு சுயசரிதைக் கவிதையில், புதுவையில் தனக்கு வழிகாட்டிய ஆன்மிகப் பெருமக்களைப் பதிவு செய்திருக்கிறார் மகாகவி பாரதி. குரு கோவிந்தசாமியின் புகழை ஏற்கனவே மூன்று பாடல்களில் (37-39) பாடிய அவர், கோவிந்தசாமியுடன் உரையாடல் என்ற தலைப்பில் கூறி இருக்கும் பாடல்கள் (57-66) அடங்கிய இக்கவிதை, ஆன்மநேய ஒருமைப்பாட்டை விரும்புவோர்க்கு லட்சியக் கவிதையாகும். “பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!” என்ற வரியில் அவரது சிந்தனை தெள்ளென வெளிப்படுகிறது. அதேசமயம், “சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்” என்ற நிறைவு வரிகளில் பாரத ஆன்மிக ஞானத்தின் செறிவை பாரதியிடம் காண்கிறோம்....

தென்றலுடன் பிறந்த பாஷை

நமது தாய்மொழியாம் தமிழின் மகிமை அறியாமல் இதைத் தூற்றும் கூட்டம் இன்றும் உண்டு; அன்றும் இருந்தது. அப்போது, அத்தகையோரை எள்ளி நகையாடி, தமிழ் மீது பற்றுக் கொண்ட ஜி.யு.போப்பை உதாரணமாகக் காட்டி, மகாகவி பாரதி தந்த செய்தி இது. கூடவே, சுதேசமித்திரன் இதழில் வெளியான செய்தியின் நறுக்கையும் இணைத்துள்ள அவரது பாங்கு மெச்சத் தக்கது...

மகாவித்துவான் சரித்திரம்-1(15)

கல்விப் பெருமை மிக்குடைய இவர் கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பணிவுடன் பாடங்கேட்டதை நினைக்கும்பொழுது, துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், சிறந்த கல்விமானென்று பெயர் பெற்ற பின்பு, திருநெல்வேலியிற் சிந்துபூந்துறையிலிருந்த தருமை வெள்ளியம்பலத் தம்பிரானவர்கள்பால் தொல்காப்பியம் பாடங்கேட்ட செய்தி ஞாபகத்திற்கு வருகின்றது.....

லார்டு கர்ஸனும் ஹிந்துக்களின் ஒழுக்கமும்

வங்கப் பிரிவினையால் இந்திய மக்களின் ஒட்டுமொத்த விரோதத்தை சம்பாதித்தவர் கர்சன் பிரபு. அவர் கொல்கத்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ‘இந்தியர்கள் உண்மைக்கு மாறானவர்கள்’ என்ற பொருளில் பேசியதை மகாகவி பாரதி இச்செய்தியில் கண்டிக்கிறார். தனது செய்திக்கு ஆதாரமாக, ஆங்கிலேயர் ஒருவரே கர்சனின் மோசடித்தனத்தைக் கண்டித்ததையும் எடுத்தாண்டிருக்கிறார். ஓர் இதழாளரின் கடமை என்பது நாட்டு மக்களுக்கு உண்மையை உரைப்பதும் தெளிவான சான்றுகளை முன்வைப்பதும் தான் என்பதை இதழாளர் பாரதி இதன்மூலம் செய்து காட்டி இருக்கிறார்...

பாரதி- அறுபத்தாறு- (54-56)

காதலின் புகழை சென்ற கவிதையில் பாடிய மகாகவி பாரதி, இக்கவிதையில், காதல் என்ற பெயரில் ஏமாற்றி பெண்மைநலம் உண்ணும் காமுகர்களின் தீய நெஞ்சை சுட்டிக்காட்டி, பொய்மைக்காதலைச் சாடுகிறார். ”ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,  அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?” என்ற அவரது கேள்வி, “கற்புநிலை என்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்ற முந்தைய ஒரு கவிதையின் (பெண்கள் விடுதலைக் கும்மி) நீட்சியே.

பிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான வில்லியம் ஜென்னிங் ப்ரெயன் (1860- 1925), சிறந்த நாடாளுமன்றவாதியும் வழக்கறிஞரும் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்று முறை (1896, 1900, 1908) போட்டியிட்டு தோல்வியுற்றவர். எனினும் அந்நாட்டின் அரசியலில் ஒரு நிலையான அரசியல் சக்தியாகத் திகழ்ந்தவர். அதிபர் வுட்ரோ வில்சனின் அரசில் அமைச்சரவை செயலராக (1913) பணிபுரிந்தவர். இவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி எழுதிய கட்டுரை குறித்து இதழாளர் பாரதி இங்கு சிலாகிக்கிறார்...

விடுதலைப் போரில் அரவிந்தர்- 6

அரவிந்தர் வன்முறையற்ற அகிம்சை முறையை மட்டுமே விரும்பினார் என்று கூற முடியாது. "சமூகப் போராட்டம் சில சந்தர்ப்பங்களில் போராக மாறிவிடும். போர்க்காலத்தின் தார்மீகமும், அமைதியான நேரத்திற்கான தார்மீகமும் வெவ்வேறானவை. சில சந்தர்ப்பங்களில் ரத்தம் சிந்தவோ வன்முறையில் ஈடுபடவோ தயங்குவது பலவீனமே. குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனன் பெரும் அழிவு ஏற்படுமெனத் தயங்கியபோது ஸ்ரீ கிருஷ்ணர் அவரை இடித்துரைத்துக் கூறியது இதைதான்" என்று அரவிந்தர் எழுதியிருந்தார்....

பாரதியும் கணபதியும்

பிள்ளையார் என்ற பெயரே கள்ளமிள்ளாத குழந்தைத்தனமான வெள்ளை மனதைத்தான் குறிக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமையிலும் ஞானத்திலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எவ்வளவு பெரியவரானாலும் அவரிடம் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் பெரியவர் எல்லாருக்குமே பிள்ளையாரைப் பிடித்திருக்கிறது.

ஸ்வாமி அபேதாநந்தர்

சுவாமி அபேதாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். அவரது சென்னை விஜயத்தால் மகிழ்ந்து இதழாளர் பாரதி தீட்டிய செய்தி இது... சுவாமி அபேதாநந்தா குறித்து ஒரு கவிதையும் எழுதி இருக்கிறார் மகாகவி பாரதி.

மகாவித்துவான் சரித்திரம்- 1(14)

இவருடைய சிறந்த கல்வியாற்றலையறிந்த பல வித்துவான்களும் பிரபுக்களும் இவருக்கு ஏதேனும் ஒரு பட்டம் அளிக்க வேண்டுமென்று தம்முள்ளே நிச்சயித்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்கு அந்த அபிப்பிராயம் நெடுநாளாக இருந்ததாகவும் யாரேனும் ஒருவர் தொடங்கினால் தாமும் அக்கருத்தை ஆதரிக்க வேண்டுமென்று எண்ணியதாகவும் கூறித் தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தனர். பின்பு நல்ல நாளொன்றில் ஒரு மகாசபை கூட்டி இவருடைய கல்வித் திறமையைப் பற்றிப் பேசி இவருக்கு வித்துவானென்ற பட்டத்தை அளித்து அதற்கு அறிகுறியாகச் சால்வை முதலிய மரியாதைகளையும் செய்தார்கள். அதுமுதல் இவரை வித்துவான் பிள்ளையவர்களென்றே குறிப்பித்து வரலானார்கள். அதன் பின்பு பதிப்பிக்கப்பெற்ற குசேலோபாக்கியானத்தில் இவர் பெயருக்கு முன்பு 'வித்துவான்' என்பது காணப்படும்.....

நமது மகமதிய சகோதரர்கள்

ஹிந்து- முஸ்லிம் மத வேற்றுமைப் பிரச்னை இன்று தோன்றியதல்ல என்பதை மகாகவி பாரதியின் இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்த வேற்றுமையை இல்லை என்று ஒளித்துவைத்துப் பிரயோசனமில்லை என்று கூறும் இதழாளர் பாரதி, ”மேற்கண்டவாறு இருக்கும் நிலைமையை உத்தேசிக்குமிடத்து அநேகர் மனதில் பரதகண்டத்தின் வருங்காலத்தைப் பற்றி பயமேற்படுகின்றது“ என்று விசனப்படுகிறார். நமது மகமதிய சகோதரர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையிலான வேற்றுமை உணர்ச்சியை எவ்வாறாகிலும் சரிப்படுத்த வேண்டும் என்ற அவரது ஆத்மார்த்த விருப்பமும் இச்செய்தியில் தெரிகிறது......

பாரதி-அறுபத்தாறு- (49-53)

காதலின் புகழைப் பாடும் மகாகவி பாரதியின் இக்கவிதை தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. ஆணும் பெண்ணும் கூடிக் களித்து வாழும் இல்லறமே உலகை வாழ வைக்கிறது. அதற்கு அடிநாதம் காதலே. “காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்! கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்” என்ற பாரதியின் பிரகடனம், காதலர்களுக்கு அமுத வாக்கு. இறைவனே காதலிக்கையில் மானுடர் காதலின் சுவையை இழக்கலாகுமா? என்பதே கவியின் கேள்வி. அதேசமயம், காதல் என்ற பெயரில் நிகழும் முறைகேடுகளை தனது அடுத்த (54-56) கவிதைகளில் கண்டிக்கவும் அவர் தவறவில்லை.

சத்திய சோதனை- 4(1-5)

கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூற முடியும். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் துணையாக கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அகராதியைப் போல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன். ....

எனது  முற்றத்தில்- 18

அரசியல்/ விளையாட்டு/ சினிமா பிரபலங்களுக்கு ராணுவ கௌரவம் அளிப்பது ஒரு நோக்கத்துடன் தான்.  டெண்டுல்கர், மோகன்லால், சச்சின் பைலட் போன்றவர்கள் பாரத இளைஞர்கள்  மனதில் பதிந்த நட்சத்திரங்கள். எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் ராணுவ கௌரவம் இளைஞர்கள் மத்தியில் ராணுவம் பற்றிய மதிப்பை உயர்த்தும்.....

திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின நிறவெறிக்கும் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடினார் என்று தெரியும். நமது இதே தளத்திலேயே ‘சத்திய சோதனை’ வெளியாகிறது. அதில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் பட்ட கஷ்டங்கள் பதிவாகி இருக்கின்றன. அந்தக் கொடுமைகளை ஓர் இதழாளராக வாசகர் முன்பு செய்தியாக வைத்து அவர்களுக்கு உணர்வூட்டுகிறார் மகாகவி பாரதி...