தாயின் பாதங்களே கோபுரங்கள். சீவனைச் சுமக்கும் தாயின் கருவறையே தெய்வம் குடியிருக்கும் கர்ப்பக்ருஹம். கோயில்கள் ஆன்மிகத்தோடு பாரம்பரியக்கலைகளையும் பாதுகாக்கும் பொக்கிஷங்கள். தாயும் அதுபோல நமக்கு ஜீவன் கொடுப்பதோடு பாரம்பரியக் கலைகள், அறிவையும் நமக்கு ஊட்டுகிறார்.
Category: தொடர்
ஸ்வதந்திர கர்ஜனை- 2(1)
ஆங்கிலேய ஆட்சிக்கும் ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் 18-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பியவர் பூலித்தேவன். 1757-இல் இவர் கிழக்கிந்திய கம்பெனியாரை எதிர்த்துப் போராடி உயிரை விட்டார்....
கொன்றைவேந்தன் (31-35)
சேமம் என்றால் பாதுகாவல், காவல், அரண், சிறைச்சாலை, சேமிப்பு, நலம் எனப் பலபொருள் உள்ளது. அபாயங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் அரண், கோட்டை அல்லது கட்டுக்காவல் மிகுதியான இடத்தில் சென்று இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோதிலும் தூக்கத்துக்குரிய நள்ளிரவு நேரத்தில் கவலைகளை மறந்து அல்லது சற்றுநேரம் ஒத்திவைத்துவிட்டு நிம்மதியாக உறங்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு வழங்கும் உறக்கம் என்பது ஊக்கம் தரும் மருந்து போன்றது. உரியநேரம் உறங்காவிடில் உடலியல், உளவியல் பிரச்னைகள் தோன்றும். கவலைகளை மறக்க தூக்கம் சரியாக இருக்க வேண்டும்.
கொன்றைவேந்தன் (26-30)
பத்து மாதம் வயிற்றிலே சுமந்து வலிதாங்கி பிள்ளைகளைப் பெற்றெடுப்பதோடு அதன்பின் பல மாதங்கள் பாராட்டிச் சீராட்டியும் இன்னல்களைத் தாங்கிக்கொண்டும் வளர்த்து ஆளாக்குபவள் தாய் தானே! ஆகையால் தம் மக்களைச் சான்றோர் எனக் கேட்பதில் தாய்க்கே பெருமை அதிகம்.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(10)
1857-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி வங்காளத்தைச் சேர்ந்த பாரக்பூரில் இந்திய சிப்பாய் மங்கள் பாண்டேயால் தொடங்கி வைக்கப்பட்ட புரட்சித் தீ, அங்கிருந்து அம்பாலாவுக்கும், அங்கிருந்து தில்லிக்கும் பரவி, மீரட்டில் சிப்பாய்கள் ஒரு மாபெரும் புரட்சியைத் தொடங்க, அந்த மாவீரர்கள் அங்கிருந்து தில்லிக்குச் சென்று அங்கு வெள்ளைக்காரர்களால் ஒதுக்கப்பட்டு செங்கோட்டையின் ஒரு ஓரமாக வசித்து வந்த கடைசி முகலாய மன்னரான பகதூர் ஷாவை இந்தியாவின் மன்னராகப் பிரகடனப்படுத்தினார்கள்....
கொன்றைவேந்தன் (21-25)
குரு என்றால் வழிகாட்டி. ஆச்சார்யர் என்றால் வழிநடத்துபவர். ஆசிரியர் என்றால் ஆசுகளை அதாவது குறைகளைக் களைபவர். ஆகவே தகுந்த ஆசான் மூலம் பெறுகின்ற அறிவும், பயிற்சியுமே கல்வி ஆகும். அந்தக் கல்வியே நம்மை வழிநடத்துகின்ற மெய்ப்பொருளாகும் என்று திட்டவட்டமாகக் கூறுகிறார் ஔவையார்.....
கொன்றைவேந்தன் (16-20)
கடுகளவுகூட குறைஇல்லாதவர் என உலகிலே யாருமே இருக்க முடியாது. ஒருகோணத்தில் நிறையாகவோ, சரியாகவோ படுவதுகூட மறுகோணத்தில் குறையாகத் தெரியும். நிறைகுறைகளை அலசுவது முறையானது. ஆயினும் குறைகளை மட்டுமே நோண்டி, நுணுகிப் பார்த்துக் கொண்டிருப்பது முறையன்று. அப்படிப் பார்க்கத் தொடங்கினால் எல்லோருமே குற்றவாளிகளாகத் தென்படுவார்கள். அந்த நினைப்போடு பழகுவோரை யாரும் நெருங்கத் தயங்குவார்கள். அத்தகையோருக்கு நட்பு, சுற்றம் என எதுவும் அமையாது.
கொன்றைவேந்தன் (11-15)
கற்பு என்றால் கல்போல உறுதியாக விளங்குதல் எனப் பொருள். கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து உருவான கல்வியானது கற்ற ஒருவரை அறிவுத் தடுமாற்றமின்றி உறுதியாக விளங்கச் செய்கிறது. அதேபோல கல் என்ற வேர்ச்சொல்லில் இருந்து கிளைத்த கற்பு என்ற இன்னொரு சொல், ஒழுக்கத்தால் ஒருவர் நெறிமுறையில் உறுதியாக நிற்றலைக் குறிக்கிறது.
ஸ்வதந்திர கர்ஜனை- 1(9)
இந்தியாவின் மானத்தைக் காக்க அயோத்தியின் ராணியான ஹஸ்ரத் மஹல் பேஹம் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் ஹஸ்ரத் மஹல் இங்கிலாந்தின் பிரகடனத்தை ஏற்க மறுத்தார். கிழக்கிந்திய கம்பெனியார் அநியாயமாகவும் அக்கிரமமாகவும் செய்துகொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும், பிரிட்டிஷ் அரசு அப்படியே தொடரும் என்றால், இந்த மாற்றம் எதற்காக?
கொன்றைவேந்தன் (6-10)
எண்கள் எனப்படும் கணிதமும், எழுத்து எனப்படும் இலக்கண, இலக்கியங்களும் கண்களைப்போல முக்கியமானவை; நமது அறிவுக்கண்களாக விளங்குபவை. மேலும், அறிவியலுக்கு ஆதாரமான எண்களும், அறிந்துகொண்டவற்றைப் பிறர் அறியப் பயன்படும் எழுத்துகளும் கண்களைப்போல மதிக்கவும் காப்பாற்றவும் தகுந்தவை என்றும் கொள்ளலாம்.
கொன்றைவேந்தன் (1-5)
தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை இந்த நூல்களே. எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. இந்நூலுக்கு மூத்த பத்திரிகையாளர் திரு. பத்மன் எழுதிய விளக்கவுரை நமது தளத்தில் வெளியாகிறது...
எனது முற்றத்தில்- 25
இதை வாசிக்கும்போதே, 'கோயில் வாசல் பிரசாத விநியோக விஷயத்தில் மட்டுமல்ல, பொதுவாகவே ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கட்டுக்கோப்பு நிலவினால் எப்படி இருக்கும்!' என்று உங்கள் மனதில் கற்பனை அரும்பாமல் இருந்தால் தான் ஆச்சரியம். ஒழுங்கும் கட்டுப்பாடும் எல்லோருக்கும் வேண்டியிருக்கிறது. யாராவது ஒருத்தர் வந்து அதில் பயிற்சி கொடுக்க வேண்டியிருப்பது இன்றைய நிலை. சமுதாயம் சதா சுயமாக ஒருங்கிணைந்து இயங்கும் பொற்காலம் வராமலா போகப் போகிறது?
கொன்றைவேந்தன் – மூலம்
தமிழில் எழுந்த பிற்கால (சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்) நீதிநூல்கள், சமுதாயத்தின் தகவமைப்பில் பேரிடம் வகித்துள்ளன. கடந்த நூற்றாண்டின் இறுதி வரை தமிழ்ப் பாடத்தில் இவை கற்பிக்கப்பட்டன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் அடிப்படைப் பாடமாக இருந்தவை இந்த நூல்களே. எளிய ஒற்றை வரிகளில் வாழ்க்கைக்கு அடிப்படையான நீதிபோதனையைச் சொல்லிச் செல்வது இந்த நூல்களின் குணம். பிற்காலப் பெண்பாற் புலவரான (சங்க கால ஔவை வேறு) ஔவையார் இயற்றிய ‘கொன்றைவேந்தன்’ அவற்றில் குறிப்பிடத் தக்கது. 91 வரிகளால் ஆன சிறு நூல் இது.
ஸ்வதந்திர கர்ஜனை-1(8)
லக்னோ நகரம் முழுவதும் தேசபக்தர்கள் எல்லாவிடங்களிலும் பரவி நின்று கடுமையானதொரு போருக்கு ஆயத்தமானார்கள். ஆங்காங்கே எதிரிப் படைகள் சுலபமாக முன்னேற விடாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வீட்டினுள்ளிருந்து துப்பாக்கியால் சுடுவதற்கு சுவர்களில் துவாரங்கள் போடப்பட்டு அங்கெல்லாம் சிப்பாய்கள் தயாராய் துப்பாக்கியோடு நின்றிருந்தார்கள்....
ஸ்வதந்திர கர்ஜனை- 1(7)
தன்னிடம் பெரும் படையெதுவும் இல்லை, ஆயுதங்களும் சொல்லும்படியாக எதுவும் இல்லை, இருந்தும் அவரிடமிருந்த சாமர்த்தியமும் வீரமும் கைகொடுக்க, பிரிட்டிஷாருக்கு தாந்தியா தோபே சிம்ம சொப்பனமாக இருந்தார். தாந்தியா என்ன மந்திரம் செய்தாரோ தெரியாது, எதிரிகளான சுதேச மன்னர்கள்கூட இவரைக் கண்டதும் கேட்ட உதவிகளைச் செய்து கொடுத்தார்கள்.