கடிதம்

நல்ல எழுத்துகளைப் பாராட்டுவது அதனை மேலும் வளர்க்கும். இல்லாவிடில், இக்கதையில் வரும் எழுத்தாளர் சிங்காரவேலு போல வெறுமையில் தான் வாட வேண்டி இருக்கும். இக்கதையில் வரும் எழுத்தாளர் யார், புதுமைப்பித்தனே தானா, அல்லது இதனை இங்கு பதிவேற்றும் நானா?

அகமும் புறமும் – 6அ

பழந்தமிழகத்தில் அரசன் எனப்பட்டவன் எவ்வாறு உருவானான்? அவன் ஏன் போர்களை நாடினான்? அவனே உலகின் அனைத்து இன்பங்களையும் சுவைக்கும் சுவைஞனாக எவ்வாறு ஆனான்? அரசனது தகுதிகள் என்ன? முடியாட்சி வழிவழியாக கைமாறியது எப்படி? அவனது அரண்மனை எவ்வாறு சிறப்புறக் கட்டப்பட்டது? அவனது தந்தக் கால் கட்டிலின் சிறப்புகள் என்ன? மன்னரைப் புலவர் பாடியதும் பாடாமல் ஒழிந்ததும் ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் புறநானூற்றுப் பாடல்களின் உதவியுடன் பதி அளிக்கிறார் பேரா. அ.ச.ஞா.

நமது கல்விமுறையில் ஒரு பெருங்குறை

தாயுமானவரைப் போன்ற ஞானி ஒருவர் இங்கிலாந்திலே இருந்திருப்பாரானால் அவரைப் பற்றி அறியாத பாடசாலை மாணாக்கன் எந்த இடத்திலும் இருக்க மாட்டான். அவரது இனிய இசை நிரம்பிய அமிர்த கவிகளைக் கற்றேனும், அவரது சரித்திரம் முதலியவற்றைக் கேட்டேனும் அறியாத ஆயிரக் கணக்கான மூடர்கள் தம்மைக் கல்விமான்களென்றும், பட்டதாரிகளென்றும் கூறிக்கொண்டு இந்நாட்டிலே திரிகின்றார்கள்- மகாகவி பாரதி

புதுக்கவிஞர்களால் வளம் பெற்ற தமிழ்

யார் வேண்டுமானாலும் எதை எழுதினாலும் புதுக்கவிதை என்று சொல்லும் காலமாகிவிட்டது. ஆனால், கவிதை என்பதற்கு ஒரு தகுதி இருக்கிறது. அது என்ன? அதன் வரலாற்றை அறிந்தால், யாரும் கண்டபடி கிறுக்கி, தன்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.... இதோ பத்திரிகையாளர் திரு. சேக்கிழானின் கட்டுரை.....

மன்னுயிர்  எல்லாம் தொழும்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகம் அடைந்து வரும் சிரமங்களையும், உக்ரைன் மக்கள் அடைந்துள்ள வேதனைகளையும் சுட்டி, அதன் பின்புலத்தில் உள்ள சுயநல உலக அரசியலையும், எளிய தீர்வையும் முன்வைக்கிறார், எழுத்தாளர் திரு. டி.எஸ்.தியாகராஜன்....

அகமும் புறமும் – 5

பாரியை ஒத்த வள்ளல்கள் தோன்றி வளர்ந்த நாடாகும் இது. இத்தகைய வள்ளல்கள் செல்வத்தின் பயன் எது என்பதை வாழ்ந்து காட்டினர். இரண்டு பிரிவாரும் மன அமைதியோடு வாழ்ந்தமையால் நாடு நல்ல நிலையில் இருந்தது. முதலாளி வர்க்கம் - தொழிலாளி வர்க்கம் என்ற பிரிவினையும், அப்பிரிவினையால் ஏற்படும் துன்பங்களும் இருக்கவில்லை.

கபட கேஸரி

எந்த வகையிலும் தனக்கு மரணம் நேரக் கூடாதென்று, கடுந்தவமிருந்து கபடமாக வரம் வாங்கிவந்த அசுர வேந்தன் இரணியனை, அதே கபட வேடம் கொண்டு சம்ஹரித்தார் நரசிம்மர். இதனை வேதாந்த தேசிகரின் ‘காமாஸிகாஷ்டகம்’ சுலோகங்களைக் கொண்டு இங்கே விவரிக்கிறார் திருநின்றவூர் ரவிகுமார்...

பாரதி வழங்கிய படிப்பினை!

1956 செப்டம்பர் 11-இல் சென்னை பாரதி சங்கத்தின் சார்பில் சென்னை, தியாகராயநகர், வாணி மகாலில் நடைபெற்ற பாரதியார் விழாவில் தமிழ்நாடு அரசவைக் கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தலைமை உரை இது...

புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா

வெளிநாட்டு உதவியுடன் ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவுக்கு விடுதலை பெறத் துடித்த புரட்சியாளர் எம்.பி.டி.ஆச்சார்யா. அவரைப் பற்றிய அமரர் தஞ்சை வெ.கோபாலன் அவர்களின் கட்டுரை இது....

தீண்டாமை என்னும் பாதகம்

சுதேசமித்திரனில் 1920-களில் மகாகவி பாரதி எழுதிய பதிவு இது... தீண்டாமை ஒழியாமல் தேச விடுதலை வசப்படாது என்ற தெளிவான பார்வையை பாரதி- காந்தி ஆகிய இரு மகான்களிடமும் கண்டு மகிழ்கிறோம்...

முன்னோடிப் போராளி கஸலு லட்சுமிநரசு செட்டி

தமிழக ஹிந்துத்துவ சிந்தனையரங்கில் முதன்மையான எழுத்தாளரான திரு. அரவிந்தன் நீலகண்டன், பாரதத்தின் முன்னோடி விடுதலைப் போராளியான கஸலு லட்சுமிநரசு செட்டி குறித்து எழுதியுள்ள அரிய கட்டுரை இது...

அபூர்வ மனிதர்  தரம்பால்

பண்டைய இந்தியாவின் கல்வி, அறிவியல் வளர்ச்சி ஆகியவை குறித்து அற்புதமான ஆய்வுநூல்களை அளித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர் தரம்பால். அவரைப் பற்றி திரு. டி.எஸ்.தியாகராஜன் எழுதிய அறிமுகக் கட்டுரை இது....

உணர்வுகளை உன்னதமாக்கிய நம் துறவியர்  

மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்‌ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…

பாரதத்தின் பெருமை: பாருக்கே அணிகலன்!

ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் 125-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் எழுதிய இனிய கட்டுரை இது…

இலக்கணத் தமிழ் சமைத்தவர்கள்

நமது வாழ்க்கையை எவ்வாறு நாமே உருவாக்கிய சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றனவோ, அதேபோல மொழியைக் கையாள்வதில் தேவையான கட்டுப்பாடுகள் அவசியம். அதற்காக சான்றோரால் எழுதப்பட்டவையே இலக்கண நூல்கள்.