பாரதியின் ஞானப்பாடல்- 20

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

20. சென்றது மீளாது

சென்றதினி மீளாது மூடரே! நீர்
      எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
      குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
      எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
      தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.

$$$

Leave a comment