பாரதியின் ஞானப்பாடல்- 14

-மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

14. சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
      தீபவொளி யுண்டாம்;-பெண்ணே!
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
      மூண்டதிருச் சுடராம்;-பெண்ணே!       1

உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
      ஒட்டவருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
      காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!       2

தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
      தோற்ற முறுஞ் சுடராம்;-பெண்ணே!
மூன்று வகைப்படும் காலநன் றென்பதை
      முன்ன ரிடுஞ் சுடராம்;-பெண்ணே!       3

பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்
      பார்க்க வொளிர்ச்சுடராம்-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக்
      காண வொளிர்ச் சுடராம்;-பெண்ணே!       4

$$$

Leave a comment