சிவகளிப் பேரலை- 81

நமது வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதான். அதன் விடை என்ன? அதற்கு அர்த்தம் என்ன? பல தொல்லைகள் நிறைந்த இந்த சம்சார சாகரத்தை (வாழ்க்கைக் கடலை) கடப்பதற்கான விடையை, இந்தப் பிறவிப் பிணிக்கு விடை கொடுப்பதற்கான விடையை இந்தப் பிறவியிலேயே பெற்றுவிட வேண்டும் என்பதுதான் நமது வாழ்க்கையின் அர்த்தம். வாழ்வுப் பிணிக்கு விடை கொடுக்கும் அந்த வாழ்வுவிடையை (ஜீவன் முக்தியை) எப்படிப் பெறுவது? சிவபெருமான் மீதான ஆழ்ந்த பக்தியின் மூலம்தான் எந்த பக்தனும், ஜீவன் முக்தனாக முடியும் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை – 80

முந்தைய ஸ்லோகத்தில் மென்மையான சிவனின் திருப்பாதங்கள், எமனின் முரட்டு மார்பை எப்படி மிதித்தன? என்று வியந்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தனின் மனம் பல்வேறு எண்ணங்களாலும், அனுபவத்தாலும் கடினமாகத் திகழ்கிறதே, அதில் எப்படி அவர் நடனமிடுவார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலையும் தருகிறார்....

சிவகளிப் பேரலை- 79

எமனின் முரட்டு மார்பை மிதித்ததனால் சிவனே, உனது மென்மையான பாதங்கள் வலிக்கின்றனவா? அவற்றை என் முன்னே காட்டிடுவாய், எங்கும் நிறைந்தவனே (விபோ), அவற்றை எனது கரங்களால் பிடித்து விடுகிறேன் என்று இந்தப் பாடலில் கொஞ்சுகிறார் ஆதிசங்கரர்.

சிவகளிப் பேரலை- 78

பக்தியினால் பக்தனின் மனது அல்லாடுவதை முந்தைய ஸ்லோகத்தில் விவரித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், புதிதாகத் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வரும் மணப்பெண்ணைப்போல பக்தனின் புத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்....

சிவகளிப்பேரலை- 77

சங்க காலத் தமிழ் இலக்கியங்களிலே தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் ஏக்கம் மிகப் பாங்குடன் விவரிக்கப்பட்டிருக்கும். இத்தகு சங்கத் தமிழ் இலக்கிய நயத்துடன், சம்ஸ்கிருத செய்யுளை (ஸ்லோகத்தை) யாத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

சிவகளிப் பேரலை- 76

உரிய காலத்தில் மழை பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளர்ந்து அதற்குரிய பயன்களைத் தரும். அதுபோல்தான் இறைவன் மீதான பக்தியும் நமது வாழ்க்கைப் பயிருக்குத் தேவையான மழையாகப் பொழிகிறது. மகேசனாகிய இறைவன் மீது அன்பு கொண்டு, அவரது திருவடிகளாகிய வானத்திலேயே உறைந்து, நிறைவு தருகின்ற வகையிலே சூழ்ந்து நின்று கொண்டிருக்கும் பக்தியாகிய மேகம், பரமானந்தத்தை வாரி வழங்குகின்ற இன்ப மழையைப் பொழிகின்றது.

சிவகளிப் பேரலை- 75

  நல்ல வாசனை நிரம்பிய பக்தனின் மனம், இறைவன் சவாரி செய்கின்ற குதிரையாக, வாகனமாக ஆகிவிடுகிறது. ஆகையால், அப்படிப்பட்ட பக்தனாகிய எனது மனத்தினிலே பயணம் மேற்கொள்ள வாருங்கள் என்று நம்மைப் போன்றவர்களுக்கா எம்பிரானிடம் அழைப்பு விடுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

சிவகளிப் பேரலை- 74

துர்நாற்றம் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.  நல்வாசனை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதுபோல்தான் நமது செய்கைகளாலும் (கர்மங்களாலும்) தீய வாசனை, நல் வாசனை ஏற்படுகிறது. தீய வாசனைகளைக் களைந்து, நல் வாசனையைப் பெற சிவபெருமானின் திருவடிகளே நமக்கு வழிகாட்டுகின்றன. ...

சிவகளிப் பேரலை – 73

பரமசிவனின் திருவடிகளை, மனதே நீ பக்தியினால் பற்றிக் கொள்வாயாக. அப்படிப் பற்றிக்கொண்டால், வேறு என்னதான் வேண்டுவதற்கு இருக்கிறது? என்று வினவுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.         

சிவகளிப் பேரலை – 72

     பொற்குவியல்கள் கொட்டிக் கிடக்கும் புதையலைக் காண விரும்புவோர் மந்திர மை போட்டு அதனை அறிந்துகொண்டு, பலிச் சடங்குகளை நடத்தி அதனை அடைய முயல்வர். பக்தர்களுக்கு சிவபெருமானின் திருவடிகளே நற்புதையலாகும். அந்த நற்புதையலின் இருப்பிடத்தை சிவபெருமான் மீதான தியானம் என்கின்ற மையின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்

சிவகளிப் பேரலை – 71

எவ்வளவு சிறப்பான பேரரசுகளும் ஒருகாலத்தில் அழிந்துவிடும், மண்ணோடு மறைந்துவிடும். ஆனால், சிவபெருமான் மீதான பக்தி சாம்ராஜ்யம், அவரது பாதார விந்தங்களில் உறைகின்ற முக்தி சாம்ராஜ்யம் அழிவற்றது. இதனை இந்த ஸ்லோகத்தில் அருமையாக விளக்குகிறார் பகவத்பாதர். ....

சிவகளிப் பேரலை- 70

எங்கும் நிறைந்துள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் பூஜை செய்வதற்கு எளியவர்.  அவரை இப்படித்தான் வணங்க வேண்டும் என்றில்லை. பக்தி நம் மனத்தில் இருந்து, அது அவரது நினைப்பில் ஊறியிருந்தால் சடங்கு, சம்பிரதாயங்கள் அவசியமில்லை. அதேநேரத்தில் எங்கும் நிறைந்திருக்கும் அவரை நமது விருப்பத்திற்கேற்ற  பலவித ஆசார சடங்குகள் மூலமும் வெளியே அவரை ஆராதிக்கலாம். ....

சிவகளிப் பேரலை – 69

ஒரு தாய் எப்படி தனக்குப் பிறந்த குழந்தைகளைப் படித்தவர், படிக்காதவர், அழகுள்ளவர், அழகற்றவர், பலவான், பலவீனன்,   நல்லவர், கெட்டவர் என பேதம் பார்க்காமல் அன்பு செலுத்துகிறாளோ, அதனைப்போல உயிர்களின் தோற்றத்திற்கும், வாழ்வுக்கும், ஒடுக்கத்திற்கும் காரணமான சிவபெருமான் தாயுமானவனாக இருந்து பன்மடங்கு அன்பு பாராட்டி பக்தரை அரவணைக்கிறார். ....

சிவகளிப் பேரலை – 68

முன்பொரு ஸ்லோகத்தில் பக்தியைத் தாயாக வர்ணித்த ஸ்ரீ ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பக்தியை பால் சுரக்கும் பசுவாக வர்ணிக்கிறார். பசு பால் தருவதைப் போல பக்தியாகிய பசு, எல்லையில்லாத மகிழ்ச்சி என்ற அமுதத்தை மென்மேலும் சுரந்து, பெருக்கெடுத்து ஓடவிடுகிறது.

சிவகளிப் பேரலை- 67

     மனம் பிறழாமல் இன்ப துன்பத்தை சமநிலையில் எடுத்துக்கொள்வது மிகச் சிறந்த மனநிலை. அது வாய்க்கப் பெற்றவர்கள், இம்மையிலேயே விடுதலை (முக்தி) பெற்றவர்கள். அவ்வாறான உயர்ந்த மனப்பக்குவம் கிடைக்க நம்மைத் தயார்படுத்துவது இறைவன் சிவபெருமான் குறித்த தியானமே