மகாகவி பாரதியாரின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அவர் புதுச்சேரிக்குக் குடிபெயர்ந்த நிகழ்ச்சி. அங்குதான் அவருக்கு அரவிந்தர், வ.வெ.சு.ஐயர் போன்ற பெரியோர்களின் தொடர்பு கிடைத்தது. அங்குதான் அவருடைய முப்பெரும் பாடல்கள் உள்ளிட்ட பல அமரத்துவம் வாய்ந்த பாடல்கள் உருவாயின. அங்குதான் பாரதியின் பெருமை உலகத்துக்குத் தெரியத் தொடங்கியது. அவர் உயிர் காத்த குவளைக் கண்ணனின் தொடர்பும் அங்குதான் கிடைத்தது.
சநாதன விவகாரம்: உதயநிதிக்கு நீதிமன்றங்கள் குட்டு
சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று முட்டாள்தனமாக உளறிய திமுகவின் இளவரசர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் குட்டு வைத்துள்ளன. இது தொடர்பான இரு செய்திகள் இங்கே…
கோபாலகிருஷ்ண பாரதி – ஓர் அறிமுகம்
இளமையிலேயே தமிழில் மேதைமை மிகுந்தவர்களுக்கு ‘பாரதி’ பட்டம் அளிக்கப்படுவது தமிழகத்தில் நிலவி இருக்கிறது. அந்த வகையில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு முன்னதாகவே ‘பாரதி’ பட்டம் பெற்றவர் கோபாலகிருஷ்ண பாரதி. அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் இது.
பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -2
பொது சிவில் சட்டத்தால் மக்கள் பிளவுபடுகிறார்கள் என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்கு பாஜக தலைவர்கள் அளிக்கும் பதில், "நமது அரசியல் சாசனத்திலேயே பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று சொல்லியிருக்கிறது" என்பதுதான். அவர்களது பதில் உறுதியானதாக இல்லை. அவர்கள் பொது சிவில் சட்டத்தின் வரலாற்று அடிப்படையை இன்னமும் ஆழமாகப் புரிந்துகொள்வது நல்லது. ..
பொது சிவில் சட்டம் ஏன் தேவை? -1
பொது சிவில் சட்டத்தை எளிதாகக் கொண்டுவந்து விட முடியாது என்பது யதார்த்தம். இச்சட்டம் நிறைவேற வேண்டுமானால், 1937ஆம் வருடத்திய ஷரீஅத் சட்டம் காலாவதியாக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய அரசியல் அரங்கில் உள்ள தலைவர்கள் பலரும் 1937இல் ஆங்கிலேயரால் கொண்டுவரப்பட்ட ஷரீஅத் சட்டம் குறித்த எந்த ஒரு அடிப்படையான புரிதலும் இல்லாதவர்களாக, காற்றில் கத்தி வீசுகிறார்கள்....
பட்டினத்தாரின் தனிப் பாடல்கள்
தம் தனிப்பாடல்களால் தனிப்பாடல் துறையில் ஒப்பற்ற தனியிடம் பிடித்தவர் பட்டினத்தார். அவரது தனிப்பாடல்களின் தனிச் சிறப்பு என்பது உணர்ச்சி வேகம். ஆழ்மனத்திலிருந்து பீறிட்டெழுந்த உணர்ச்சிகளின் குவியலாய் அவரது பாடல்கள் தமிழை அலங்கரிக்கின்றன. தம் சொந்த வாழ்க்கைச் சம்பவங்கள் சார்ந்து அதிக எண்ணிக்கையில் பாடல்கள் புனைந்தவர் என்ற பெருமையும் பட்டினத்தாருக்கு உண்டு.
முகநூலில் இரு நூல் பதிவுகள்
‘பொருள் புதிது’ தளத்தின் இனிய விளைவாக வெளியான இரு நூல்கள் குறித்து முகநூலில் அறிமுகம் செய்திருக்கிறார் அன்பு நண்பர் திரு. ஜடாயு. அவருக்கு நமது நன்றி!
அயோத்யா பயணம் – ஓர் இனிய அனுபவம்
சேலத்தில் வசிக்கும் திரு. முரளி சீதாராமன், ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது அயோத்தி பயண அனுபவம் இங்கே பதிவாகிறது...
இரு ஆண்டுகள் நிறைவு: ஒரு மீள்பார்வை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2022 மார்ச் 1) பொருள் புதிது இணையதளம் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இப்பணியை மீள் பார்வை செய்ய வேண்டியது நமது கடமை. கடந்த இரு ஆண்டுகளில், ஒருநாள் கூட இடைவெளியின்றி, புதிய பதிவுகளை வலையேற்றி உள்ளோம் என்பதே மிகவும் திருப்தி அளிக்கிறது. இது வரையிலான 730 நாட்களில் 1,673 பதிவுகளை (கட்டுரைகள், கவிதைகள், மொழியாக்கங்கள்) நமது தளத்தில் பதிவேற்றியுள்ளோம்.
பாரத சாவித்ரி
அற்புதமான சமஸ்கிருத சுலோகங்களை தமிழில் பதிவு செய்வதை ஒரு கடமையாகச் செய்து வருபவர் எழுத்தாளர் திரு. ஜடாயு. ‘பாரத சாவித்ரி’ என்ற தலைப்பிலான, மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஐந்து சுலோகங்கள் நாம் அறிய வேண்டியவை...
நாடகக் கலை -3 ஆ
‘கள்ளிப் புதர்களும் கற்றாழைக் காடுகளும் நிறைந்திருந்த கலைத் துறையை நாங்கள் கைப்பற்றி விட்டோம்; இனி இங்கே இதிகாசங்களும், புராணங்களும் இடம் பெற இயலாது’ என நண்பர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ‘இராமாயணம்’ திரைப் படத்தை வெற்றிப் படமாகக் கொண்டு வந்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரிலும் அப்படத்தை நூற்றுக் கணக்கான நாட்கள் ஓட்டிக் காட்ட முடிந்தது என்றால் அந்தக் காப்பியத்தின் அழியாத் தன்மைக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?
நாடகக் கலை – 3 அ
சமுதாயத்தை உயர்த்துவது எப்படி என்பதில்தான் கருத்து வேற்றுமைகள் ஏற்படுகின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். சமுதாயத்தை உயர்த்துவதாக நினைத்துக்கொண்டு அறிவுப் பிரசாரம் என்ற பெயரால் அழிவுப் பிரசாரம், அபத்தப் பிரசாரம் முதலியவற்றைச் செய்வதால் யாருக்கும் நன்மையேற்படாது. அப்படிச் செய்யத் தொடங்கும்போது கலை மறைந்து நாடக மேடை வெறும் பிரசார மேடையாகி விடுகிறது. அதற்காக நம் கலையில் பிரசாரக் கருத்துக்களே கூடாது என்ற முடிவுக்கு வந்து ‘கலை கலைக்காகவே’ என்னும் கோஷ்டியில் சேர்ந்துவிட முயல்வது தவறாகும்.
நாடகக் கலை – 2 – ஆ
இசைக் கலைஞன் ஒருவன் இல்லத்தில் தனித்திருந்து இசைபாடி இன்புறுவான். மெய்மறந்து இசைச்சுவையோடு அவன் ஒன்றிவிடவும் முடியும். ஓவியக் கலைஞன் இதற்கு விலக்கன்று. தனது சுவைக்காகவே, தனது உள்ளுணர்ச்சியின் அமைதிக்காகவே கூட ஓவியம் தீட்டத் தொடங்கி விடுவான்; உணர்விழந்து நிற்பான். சிற்பக் கலைஞனும் இப்படித்தான். ஆனால் நடிப்புக் கலை தனித்தன்மை வாய்ந்தது. நடிகன் தனித்திருந்து நடித்து இன்புற இயலாது. எதிரே வீற்றிருக்கும் ரசிகர் கூட்டம் அவ்வப்போது காட்டும் மெய்ப்பாட்டுணர்ச்சிகள் மேடையில் நடிக்கும் நடிகனின் உணர்ச்சிகளோடு ஒருமைப்படும் போது தான் நடிப்புக்கலை அதன் உச்சநிலைக்கு வருகிறது. இது அனுபவத்தின் வாயிலாக நான் கண்ட உண்மை.
நாடகக் கலை – 2 -அ
நடைமுறை வாழ்க்கையில் நம்மில் எத்தனையோ பேர் அபூர்வமாக நடிக்கிறார்களே; இந்த நடிப்பையெல்லாம் அவர்கள் எந்தப் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டார்கள்? வணிகர்கள், வழக்கறிஞர்கள், பேச்சாளர்கள், தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், இவர்களில் பலர் தம் சொந்த வாழ்க்கையில் எப்படியெல்லாம் திறமையாக நடிக்கிறார்கள்?
வறுமை ஒழிப்பு – அர்த்தமும் அனர்த்தமும்
இந்த இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் மேற்கத்திய நாடுகளில் இது பற்றிய விவாதம் தொடங்கியது. விளைவாக 2010இல் ஐ.நா.சபையில் வறுமைக் கோட்டை அளவிட புதிய, பல பரிமாணங்களைக் கொண்ட வறுமை கணக்கீட்டு முறை (Multi Dimensional Poverty Index) அறிமுகமானது. ஆனால் இந்தியாவில் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. குடியரசுத் தலைவரின் உரைக்குப் பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த நிதியமைச்சரின் உரையில் இந்த புதிய கணக்கெடுப்பின்படி சுமார் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு (Below Poverty Line- BPL) வெளியே வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.