திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் டிச. 3-இல் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு டிச. 1ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.
முதலில் இந்து. மற்றதெல்லாம் பிறகு…
இந்து மதம் அளவுக்கு அலங்காரமான, பற்பல வண்ணங்கள் கொண்ட, பன்மைத் தன்மை உடைய, நீடித்த காலத்துடன் நெருக்கமான மாற்ற இயலா உறவு கொண்ட, தத்துவ ஆழம் கொண்ட, எந்தப் போக்கையும் நிராகரிக்காத, வேருக்கும் மலருக்கும் தொடர்புடைய, சம கால விழிப்புணர்வு குன்றாத, ஏற்புணர்ச்சி அதிகம் கொண்ட மதம் வேறு கிடையாது.
சற்குருநாதரை துதி மனமே!
இரு சான்றோர் பெருமக்களின் குருபூஜை நன்னாள் விழா குறித்த பதிவு இது...
இந்த வியாதிக்கு இதுவே மருந்து!
இலங்கையில் தமிழர்களுக்கு அரசு வேலையில் அதிக பிரதிநிதித்துவம் முன்பு இருந்தது சரி என்று சொல்லும் அதே நபர்கள் தான், இங்கு (பிரிட்டிஷ் ஆட்சியில்) பிராமணர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் இருந்தது அநீதி என்றார்கள்... தமிழகத்தின் பிரத்யேகமான வியாதிக்கு சரியான மருத்து எதுவென்று சொல்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன்...
பரமபூஜனீய டாக்டர் ஹெட்கேவாரின் கடிதங்கள்: நூல் மதிப்புரை
ஆர்எஸ்எஸ் இயக்கத்தை ஆரம்பித்த டாக்டர் ஹெட்கேவாரின் 72 கடிதங்கள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவர் எழுதிய சுமார் 1000 கடிதங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் தேர்ந்தெடுத்த கடிதங்களின் தொகுப்பானது 1964 இல் தமிழில் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் நூற்றாண்டுக் காலத்தில் மறுபதிப்பு கண்டுள்ளது.
கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்: நூல் வெளியீட்டு விழா
வரலாற்று ஆசிரியரும், கல்வெட்டு நிபுணருமான டாக்டர் எம்.எல்.ராஜா எழுதிய, 'கலியுக தேதியிட்ட கல்வெட்டுகள்' என்ற ஆங்கில நூலின் வெளியீட்டு விழா, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நவ. 25 ஆம் தேதி நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி நூலை வெளியிட்டார். அதுகுறித்த செய்தி இது…
கவிதை எனது கர்மா
“உள்ளத்துள்ளது கவிதை- இன்பம் உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்று பாடுவார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ஆனால், கவிதை என்றாலே சிலருக்கு ஒவ்வாமை. இதுபற்றி தனது சுய பிரகடனத்துடன் அலசுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்….
உருவகங்களின் ஊர்வலம் – 81
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன், சமகால சமூகம், அரசியல், வரலாற்றை உருவகமாகவும் பகடியாகவும் எழுதுவதில் சிறப்பான படைப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார். அவரது முகநூல் கவிதைகள் இங்கே தொடராக இடம் பெறுகின்றன.... இது கவிதை #81..
நமனை அஞ்சோம்!
மரண பயம் போக்கும் அமிழ்தான பாடல்கள் நிறைந்தது நம் தமிழ் மொழி. அவற்றை சுட்டிக் காட்டும் இனிய கட்டுரை இது...
புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு: கொடுமணல்
கீழடி குறித்து அளவுக்கு அதிகமாகவே பேசப்பட்டுவிட்டது. ஆனால், மிகவும் பேசப்பட வேண்டிய, ஆனால் கவனம் பெறாமல் உள்ள ஒரு தொல்லியல் தலம் ‘கொடுமணல்’. அதுகுறித்த முக்கியமான கட்டுரை இது...
நீதிக் கட்சி திமுகவின் தாய் அமைப்பா?
அண்மையில் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின், “நீதிக்கட்சி திமுகவின் தாய் அமைப்பு” என்று பேசி இருக்கிறார். அவருக்காகவே, இந்தக் கேள்விக் கட்டுரையை எழுதி இருக்கிறார் திரு. முரளி சீதாராமன்.
என்கடன் பணிசெய்து கிடப்பதே – 3
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: சங்கரன்கோவில் டி.மாரியப்பன்.
ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு யாரும் காலக்கெடு விதிக்க முடியாது
'சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வழக்கில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்க முடியாது' என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது (நாள்: 20.11.2025); அதே சமயம், 'மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பான ஓர் ஆவணத் தொகுப்பு….
சமஸ்கிருதம் செத்துப் போன மொழியா?
துணை முதல்வர் உதயநிதி, ஒரு நிகழ்ச்சியில், சமஸ்கிருதம் செத்த மொழி என்று போக்கிற போக்கில் பேசி இருக்கிறார். அவருக்கான பதிலடியை மிகவும் நாகரிகமாக (இதுவும் சமஸ்கிருதச் சொல் தான்) அளித்திருக்கிறார் திரு. முரளி சீதாராமன்...
வருவாள் செண்பகவல்லித்தாய் – 4
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் செண்பகவல்லி அணை உடைந்து கிடக்கிறது. இரு மாநில சர்ர்ச்சையில் சிக்கியுள்ள இந்தத் தடுப்பணையை அரசு சீர் செய்ய வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நமது தளம் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த விஷயத்தில் மேலும் சில தகவல்களை இக்கட்டுரை தருகிறது...