விஜயபாரதம் ஆசிரியரானார் நம்பி அண்ணா!

சிலரைப் பார்த்தவுடன் நமக்குப் பிடித்துப் போகிறது. அது ஏன் என்று தெரிவதில்லை. பூர்வஜன்ம நினைவாக இருக்கலாம். அப்படி என்னை முதல் முறை சந்திப்பிலேயே ஆகர்ஷித்தவர் நம்பி அண்ணா. தற்போது  ‘விஜயபாரதம்’ வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் அவரை ஒரு சஹ்ருதயராக வாழ்த்தி மகிழ்கிறேன். எனது இதழியல் பணியில் சில திசைகாட்டிகள் உண்டு. அவர்களுள் முதன்மையானவர் நம்பிஜி.