புறவழி பேச்சுவார்த்தை: உண்மை என்ன?

உளவியல் போர் நடவடிக்கை என்பது ராணுவம் மற்றும் உளவுத் துறை தந்திரங்களில் ஒன்று. பல நாடுகள் இதை சிறப்பாகப் பயன்படுத்துவதில் தேர்ந்தவை. தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம், எதிரி நாடுகளில் உள்ளவர்களைக் குழப்பி சந்தேகப்பட வைப்பது அதில் அடங்கும். அதற்கு சிறந்த உதாரணம் இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகார பூர்வமற்ற, அரசு முறை சாராத, இரண்டாவது வழித்தட பேச்சு வார்த்தை கொழும்புவில் நடந்தது என்ற பொய்யான செய்தி. இது உள்நோக்கம் கொண்டவர்களால் பரப்பப்பட்டு வருகிறது.