"தாயே உன்னை வணங்குகிறோம்.... இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் தென்திசைக் காற்றும் மரகதப்பச்சை வயல்களும் நறுமலர்களும் இனிமை ததும்பும் மொழிகளும் மாசற்ற பண்புகளின் இருப்பிடமும் எளிமை இலங்கும் ஏந்திழையும் புன்முறுவல் பூத்தவளும் பொன் மணிகள் பூண்டவளும் எங்களைப் பெற்று வளர்த்தவளுமாகிய தாயே உன்னை வணங்குகிறோம்"