தொடர்ந்து 35 நாட்களாக நடந்த இப்போராட்டம் முழுமையான மாணவர் போராட்டமா என்றால் இல்லை. மாணவர்கள் பெயரில் பல சமூக விரோதிகள் கூடாரமிட்டு கும்மாளம் போட்டதற்கான ஆதாரம் அவர்களின் செயலே. தேசத்திற்கு எதிரான கோஷங்களும், எல்லைமீறி நடந்து கொண்ட விதமும், தடைகளைத் தாண்டி அத்துமீறி நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற செயலும், தடுக்க வந்த போலீஸ்காரர்களையே தாறுமாறாக தாக்கிய வெறிச் செயலும், நம் தேசத்து சொத்துகளையே (வீதியில் காணப்படும் அனைத்தையும்) சேதப்படுத்தி அடித்து நொறுக்கி தீயிட்டு கொளுத்திச் செய்த நாசக்கார சம்பவங்களும்… என அவர்களின் அத்துமீறல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.