பாரதியின் ஞானப்பாடல்- 21

மகாகவி பாரதி

ஞானப் பாடல்கள்

21. மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே!
      பேணா யென்சொல் இன்றுமுதல்
நீயா யொன்றும் நாடாதே
      நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
      தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடுவாய்
      உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.

$$$

Leave a comment