சிவகளிப் பேரலை- 96

முன்பு 20-வது ஸ்லோகத்தில், மனத்தை அலைபாயும் குரங்காக வர்ணித்து அதனைக் கட்டிவைக்கும் கயிறாக சிவபெருமான் மீதான பக்தியை உவமைப்படுத்திய ஸ்ரீ ஆதிசங்கரர், இந்தச் செய்யுளிலும் இதற்கு அடுத்த செய்யுளிலும் மனத்தைக் கட்டுக்கடங்காத மதயானைக்கு ஒப்புமைப்படுத்துகிறார். ....

சிவகளிப் பேரலை- 95

என் பாதங்களோ மிக மென்மையானவை, பக்தா உனது மனதோ மிகவும் கடினமானது என்று சிவபெருமானே உன்னகத்துள் எனது உய்வுக்கு முரணான சந்தேகம் எழுந்தால், அதனை உடனடியாக நீக்கிவிடு. பவானியின் மணாளனாகிய சிவபெருமானே, அவ்வாறு நீர் உண்மையிலேயே கருதுவீராயின், மிகவும் கரடுமுரடான இமயமலை உள்ளிட்ட மலைப் பிரதேசங்களிலே நீர் எப்படி உழன்று திரிகின்றீர்? என்று நமக்காகக் கேட்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

சிவகளிப்பேரலை- 94

முன்பு 7-ம் ஸ்லோகத்தில், சிந்தையெல்லாம் சிவமயமாகிவிட வேண்டும் என்பதை எடுத்துரைத்த பகவத்பாதர், இந்த ஸ்லோகத்தில் அதனையை மீண்டும் வலியுறுத்துகிறார். அனைத்துமாகி நிற்கும் பரம்பொருளான அந்தப் பரமசிவத்தைப் பற்றினால், பற்றுகள் தீர்ந்துபோய் வாழ்க்கைப் பயன் பூர்த்தியாகிவிடும் என்கிறார்.

சிவகளிப் பேரலை- 93

ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தர்களாகிய நமது இதயங்களில் அந்த நீலகண்டப் பெருமானே, நமக்குக் காப்பாக (ரட்சையாக) நீங்காது நிலைபெற்றிருக்க வேண்டும் என்று நமக்காக இறைஞ்சுகிறார்.....

சிவகளிப் பேரலை- 92

சிவபெருமானின் திருவடித் தாமரைகளை தியானிப்பதால் அறியாமை அகன்று, ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் மொழிந்த ஸ்ரீஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில் பரமஸே்வரரின் திருவிளையாடல் புராணங்களைக் கேட்பதால் பாவங்கள், தீமைகள் அனைத்தும் நம்மைவிட்டு விலகியோடும் என்பதை விண்டுரைக்கிறார்.  ...

சிவகளிப் பேரலை- 91

   சிவபெருமானை மனோ வாக்கு காயம் ஆகிய மூன்றினாலும் பக்தன் சிரத்தையுடன் வணங்க வேண்டும் என்பதை முந்தைய ஸ்லோகத்தில் வலியுறுத்திய ஜகத்குரு, இந்த ஸ்லோகத்தில் அதனால் பக்தனுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய நன்மை என்ன என்பதை உரைக்கின்றார்.....

சிவகளிப் பேரலை- 90

பரமேஸ்வரனாகிய சிவபெருமான் உலகின் நலனுக்காகவே பல்வேறு திருவிளையாடல்களைப் புரிகின்றார். அவரது அந்தத் திருவிளையாடல்களை, புராணச் சம்பவங்களை வாக்கினாலே பக்தன் உரைக்க வேண்டும்....

சிவகளிப் பேரலை- 89

     சிவபெருமான் விசித்திரமானவர். பெரிய பெரிய மகான்களும், தவசீலர்களும் அவரைக்  காண முடியாமல் தவிக்கின்ற நிலையில், எளிய பக்தனுக்கு அவர் இர(ற)ங்கி வந்து காட்சி தருகிறார். பக்தர்களோடு விளையாடுவதற்காக திருவிளையாடல் செய்யும் சிவபெருமான், அந்தத் தருணங்களிலே அறியாமையால் பக்தர்கள் அடித்தாலும், திட்டினாலும்கூட சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். இதனைத்தான் நிந்தாஸ்துதியாக (வஞ்சப்புகழ்ச்சியாக) இங்கே வர்ணிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.....

சிவகளிப் பேரலை- 88

  சிவபெருமானின் பெருமைகளை வியந்து கூறி, அவருக்கு எப்படி நிறைவான பூஜை செய்வது? என்று ஸ்ரீ ஆதிசங்கரர் மலைத்து நின்று வினவும் அற்புதம், இந்த ஸ்லோகத்திலும் தொடர்கிறது....

சிவகளிப்பேரலை- 87

இறைவனிடம் தன்னை ஒப்படைத்து, அவரையே பெற்றுவிடுகின்ற சாமர்த்தியம், மெய் பக்தி ஒன்றினால் மட்டுமே சாத்தியம். அதைத்தான் இந்த ஸ்லோகத்தில் சுட்டிக்காட்டுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

சிவகளிப் பேரலை- 86

  அனைத்திற்கும் அடித்தளமாகிய ஆதியாகவும், அனைத்தின் முடிவாகிய பூரணமாகவும் சிவபெருமான் இருக்கிறார்.  ஆதியும் அந்தமுமாய் உள்ள அந்தப் பரம்பொருளின் அடியையும், முடியையும் யார்தான் காண வல்லார்? அனைத்துமாய் விளங்கும் அந்தப் பிரும்மாண்டப் பரம்பொருளை, அதன் ஒரு துளியாய் இருக்கும் நாம் அளப்பது எங்ஙனம்?

சிவகளிப் பேரலை- 85

அனைத்திற்கும் உடையவராகிய, உடையான் சிவபெருமானே, எளிமையான கோலத்தில் இருக்கிறார். ஆனால், அவனருளால், ஏதோ ஒருசில உடைமைகளைப் பெற்றுவிட்ட மனிதர்கள் நாம் என்னமாய் குதிக்கிறோம்! நம்மிடம் இருக்கும் செல்வம், உண்மையில் நம்முடையது அல்ல, இந்தச் சமுதாயத்தின் பயனுக்காக நம்மிடம் இறைவன் அளித்தது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறதா?

சிவகளிப் பேரலை- 84

     எல்லாம் வல்ல சிவபிரானே அனைத்து ஜீவன்களுக்கும் பதியாய், பசுபதி நாதராய் வீற்றிருக்கிறார். பசுக்களாகிய நாம் அனைவரும் அவரையை சார்ந்திருக்கிறோம். இறைவனே நாயகன். நாம் எல்லோரும் அவனது நாயகியே. இந்த நாயக - நாயகி உருவகத்திலான பக்தியை இந்த ஸ்லோகத்தில் தெளிவாகப் படம்பிடிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை- 83

ஒற்றைக் கடவுளைத்தான் நாம் பல்வேறு நாமரூபங்களில் அழைத்தாலும், அவற்றில் எல்லாம் சிறப்பானதாகவும், அனைத்திற்கும் மேலான தத்துவமாகவும் விளங்குவது சிவபரம்பொருள்தான். சிவ தத்துவத்தில்தான் இறைத்தன்மை முழுவதுமாக வெளிப்பட்டு நிற்கிறது. அதனால்தான் சிவபெருமான் மகாதேவர், பரமேஸ்வரர், சர்வேஸ்வரர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இதே காரணத்தால்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பழையோன், பிறவா யாக்கைப் பெரியோன், முக்கண் முதலோன் என்றெல்லாம் எந்தை சிவபிரானை ஏற்றித் துதிக்கின்றன....

சிவகளிப் பேரலை- 82

ஒரே ஆற்றல்தான் நிலைசக்தியாகவும், இயங்குசக்தியாகவும் திகழ்கிறது. (ஆயினும் நிலைசக்திதான் இயங்குசக்திக்கு ஆதாரம்.) இதுதான் ஹரிஹர தத்துவம். இதனையே சிவசக்தி என்று இணைத்துக் கூறுவார்கள். சக்தியைப் பெண்பாலாகக் கூறுவதற்குப் பதில், ஆண்பாலாகவே சுட்டும்போது அந்த சக்தி, ஹரி என்று கூறப்படுகிறது.  இதனால்தான் சக்தியின் சகோதரராக விஷ்ணு வர்ணிக்கப்படுகிறார்.