சிவகளிப் பேரலை- 86

  அனைத்திற்கும் அடித்தளமாகிய ஆதியாகவும், அனைத்தின் முடிவாகிய பூரணமாகவும் சிவபெருமான் இருக்கிறார்.  ஆதியும் அந்தமுமாய் உள்ள அந்தப் பரம்பொருளின் அடியையும், முடியையும் யார்தான் காண வல்லார்? அனைத்துமாய் விளங்கும் அந்தப் பிரும்மாண்டப் பரம்பொருளை, அதன் ஒரு துளியாய் இருக்கும் நாம் அளப்பது எங்ஙனம்?

சிவகளிப் பேரலை- 85

அனைத்திற்கும் உடையவராகிய, உடையான் சிவபெருமானே, எளிமையான கோலத்தில் இருக்கிறார். ஆனால், அவனருளால், ஏதோ ஒருசில உடைமைகளைப் பெற்றுவிட்ட மனிதர்கள் நாம் என்னமாய் குதிக்கிறோம்! நம்மிடம் இருக்கும் செல்வம், உண்மையில் நம்முடையது அல்ல, இந்தச் சமுதாயத்தின் பயனுக்காக நம்மிடம் இறைவன் அளித்தது என்ற எண்ணம் நம்மிடம் இருக்கிறதா?

சிவகளிப் பேரலை- 84

     எல்லாம் வல்ல சிவபிரானே அனைத்து ஜீவன்களுக்கும் பதியாய், பசுபதி நாதராய் வீற்றிருக்கிறார். பசுக்களாகிய நாம் அனைவரும் அவரையை சார்ந்திருக்கிறோம். இறைவனே நாயகன். நாம் எல்லோரும் அவனது நாயகியே. இந்த நாயக - நாயகி உருவகத்திலான பக்தியை இந்த ஸ்லோகத்தில் தெளிவாகப் படம்பிடிக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை- 83

ஒற்றைக் கடவுளைத்தான் நாம் பல்வேறு நாமரூபங்களில் அழைத்தாலும், அவற்றில் எல்லாம் சிறப்பானதாகவும், அனைத்திற்கும் மேலான தத்துவமாகவும் விளங்குவது சிவபரம்பொருள்தான். சிவ தத்துவத்தில்தான் இறைத்தன்மை முழுவதுமாக வெளிப்பட்டு நிற்கிறது. அதனால்தான் சிவபெருமான் மகாதேவர், பரமேஸ்வரர், சர்வேஸ்வரர் என்றெல்லாம் போற்றப்படுகிறார். இதே காரணத்தால்தான் பழந்தமிழ் இலக்கியங்கள் பழையோன், பிறவா யாக்கைப் பெரியோன், முக்கண் முதலோன் என்றெல்லாம் எந்தை சிவபிரானை ஏற்றித் துதிக்கின்றன....

சிவகளிப் பேரலை- 82

ஒரே ஆற்றல்தான் நிலைசக்தியாகவும், இயங்குசக்தியாகவும் திகழ்கிறது. (ஆயினும் நிலைசக்திதான் இயங்குசக்திக்கு ஆதாரம்.) இதுதான் ஹரிஹர தத்துவம். இதனையே சிவசக்தி என்று இணைத்துக் கூறுவார்கள். சக்தியைப் பெண்பாலாகக் கூறுவதற்குப் பதில், ஆண்பாலாகவே சுட்டும்போது அந்த சக்தி, ஹரி என்று கூறப்படுகிறது.  இதனால்தான் சக்தியின் சகோதரராக விஷ்ணு வர்ணிக்கப்படுகிறார்.

சிவகளிப் பேரலை- 81

நமது வாழ்க்கையே ஒரு கேள்விக்குறிதான். அதன் விடை என்ன? அதற்கு அர்த்தம் என்ன? பல தொல்லைகள் நிறைந்த இந்த சம்சார சாகரத்தை (வாழ்க்கைக் கடலை) கடப்பதற்கான விடையை, இந்தப் பிறவிப் பிணிக்கு விடை கொடுப்பதற்கான விடையை இந்தப் பிறவியிலேயே பெற்றுவிட வேண்டும் என்பதுதான் நமது வாழ்க்கையின் அர்த்தம். வாழ்வுப் பிணிக்கு விடை கொடுக்கும் அந்த வாழ்வுவிடையை (ஜீவன் முக்தியை) எப்படிப் பெறுவது? சிவபெருமான் மீதான ஆழ்ந்த பக்தியின் மூலம்தான் எந்த பக்தனும், ஜீவன் முக்தனாக முடியும் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....

சிவகளிப் பேரலை – 80

முந்தைய ஸ்லோகத்தில் மென்மையான சிவனின் திருப்பாதங்கள், எமனின் முரட்டு மார்பை எப்படி மிதித்தன? என்று வியந்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், பக்தனின் மனம் பல்வேறு எண்ணங்களாலும், அனுபவத்தாலும் கடினமாகத் திகழ்கிறதே, அதில் எப்படி அவர் நடனமிடுவார் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலையும் தருகிறார்....

சிவகளிப் பேரலை- 79

எமனின் முரட்டு மார்பை மிதித்ததனால் சிவனே, உனது மென்மையான பாதங்கள் வலிக்கின்றனவா? அவற்றை என் முன்னே காட்டிடுவாய், எங்கும் நிறைந்தவனே (விபோ), அவற்றை எனது கரங்களால் பிடித்து விடுகிறேன் என்று இந்தப் பாடலில் கொஞ்சுகிறார் ஆதிசங்கரர்.

சிவகளிப் பேரலை- 78

பக்தியினால் பக்தனின் மனது அல்லாடுவதை முந்தைய ஸ்லோகத்தில் விவரித்த ஆதிசங்கரர், இந்த ஸ்லோகத்தில், புதிதாகத் திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வரும் மணப்பெண்ணைப்போல பக்தனின் புத்தி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்....

சிவகளிப்பேரலை- 77

சங்க காலத் தமிழ் இலக்கியங்களிலே தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் ஏக்கம் மிகப் பாங்குடன் விவரிக்கப்பட்டிருக்கும். இத்தகு சங்கத் தமிழ் இலக்கிய நயத்துடன், சம்ஸ்கிருத செய்யுளை (ஸ்லோகத்தை) யாத்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர். ...

சிவகளிப் பேரலை- 76

உரிய காலத்தில் மழை பெய்தால்தான் பயிர்கள் செழித்து வளர்ந்து அதற்குரிய பயன்களைத் தரும். அதுபோல்தான் இறைவன் மீதான பக்தியும் நமது வாழ்க்கைப் பயிருக்குத் தேவையான மழையாகப் பொழிகிறது. மகேசனாகிய இறைவன் மீது அன்பு கொண்டு, அவரது திருவடிகளாகிய வானத்திலேயே உறைந்து, நிறைவு தருகின்ற வகையிலே சூழ்ந்து நின்று கொண்டிருக்கும் பக்தியாகிய மேகம், பரமானந்தத்தை வாரி வழங்குகின்ற இன்ப மழையைப் பொழிகின்றது.

சிவகளிப் பேரலை- 75

  நல்ல வாசனை நிரம்பிய பக்தனின் மனம், இறைவன் சவாரி செய்கின்ற குதிரையாக, வாகனமாக ஆகிவிடுகிறது. ஆகையால், அப்படிப்பட்ட பக்தனாகிய எனது மனத்தினிலே பயணம் மேற்கொள்ள வாருங்கள் என்று நம்மைப் போன்றவர்களுக்கா எம்பிரானிடம் அழைப்பு விடுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

சிவகளிப் பேரலை- 74

துர்நாற்றம் நமக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.  நல்வாசனை மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இதுபோல்தான் நமது செய்கைகளாலும் (கர்மங்களாலும்) தீய வாசனை, நல் வாசனை ஏற்படுகிறது. தீய வாசனைகளைக் களைந்து, நல் வாசனையைப் பெற சிவபெருமானின் திருவடிகளே நமக்கு வழிகாட்டுகின்றன. ...

சிவகளிப் பேரலை – 73

பரமசிவனின் திருவடிகளை, மனதே நீ பக்தியினால் பற்றிக் கொள்வாயாக. அப்படிப் பற்றிக்கொண்டால், வேறு என்னதான் வேண்டுவதற்கு இருக்கிறது? என்று வினவுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.         

சிவகளிப் பேரலை – 72

     பொற்குவியல்கள் கொட்டிக் கிடக்கும் புதையலைக் காண விரும்புவோர் மந்திர மை போட்டு அதனை அறிந்துகொண்டு, பலிச் சடங்குகளை நடத்தி அதனை அடைய முயல்வர். பக்தர்களுக்கு சிவபெருமானின் திருவடிகளே நற்புதையலாகும். அந்த நற்புதையலின் இருப்பிடத்தை சிவபெருமான் மீதான தியானம் என்கின்ற மையின் மூலமாக அறிந்துகொள்ள முடியும்