தெய்வத்திற்கும் தமிழுக்கும் செய்யுள் இயற்றி தொண்டு செய்வது மட்டுமல்ல... இந்த தேசத்தின் விடுதலைக்கும் எங்களது பங்கு உண்டு என்கிறார்கள் பெரும் புலவர்கள் சேற்றுார் முகவூர் கந்தசாமிக் கவிராயரும், மதுரை சோழவந்தான் அரசஞ்சண்முகனாரும். இக்கவிராயர்களின் ‘வந்தே மாதரம்’ பாடல்களை பெருமையுடன் வெளியிடுகிறது ‘பொருள் புதிது’ இணையதளம்….
Tag: இலக்கியம்
கடன் பெற்றார் நெஞ்சம் வேண்டாம்!
‘கடன்பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று ராவணனின் வீழ்ச்சியைப் பற்றுப் பாடுவார் கம்பர். எனவே, கடன் ஒரு பெரும் சுமை. அதுகுறித்த இலக்கியச் சிந்தனை இது…
கவிதை எனது கர்மா
“உள்ளத்துள்ளது கவிதை- இன்பம் உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில்- உண்மை தெரிந்துரைப்பது கவிதை” என்று பாடுவார் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. ஆனால், கவிதை என்றாலே சிலருக்கு ஒவ்வாமை. இதுபற்றி தனது சுய பிரகடனத்துடன் அலசுகிறார் கவிஞர் லக்ஷ்மி மணிவண்ணன்….
நமனை அஞ்சோம்!
மரண பயம் போக்கும் அமிழ்தான பாடல்கள் நிறைந்தது நம் தமிழ் மொழி. அவற்றை சுட்டிக் காட்டும் இனிய கட்டுரை இது...
என்கடன் பணிசெய்து கிடப்பதே – 3
அப்பர் சுவாமிகள் கூறியபடி, ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: சங்கரன்கோவில் டி.மாரியப்பன்.
நீலகண்ட சிவம் போற்றிய கோமதியம்பிகை
அருணகிரிநாதரும், தமிழிசை மூவரும், சங்கீத மும்மூர்த்திகளும் இசை வழிபாடு செய்தனர். இந்தத் திருநெறியை 19ஆம் நூற்றாண்டில் மக்களிடம் பரப்பியவர்களில் முக்கியமான பிரம்மஸ்ரீ நீலகண்ட சிவன் என்னும் மகானைப்பற்றி கோடிட்டுக் கட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.
ஆரியம் – திராவிடம்: சில இலக்கிய ஆதாரங்கள்
‘திராவிடமாயை’ என்ற நூலின் மூலம், நூறாண்டு காலமாக தமிழ்ச் சூழலில் புகுத்தப்பட்ட இனவாத மாயையை சுக்குநூறாக்கியவர் திரு சுப்பு. வரும் நவ. 21இல் அவரது 75 ஆம் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, 2012-இல் அவர் ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
மாமனும் மருமகனும்
ஸ்ரீராமர் திருமாலின் அவதாரம். முருகப் பெருமான் சிவனின் புதல்வன். இவர்கள் இருவரிடையிலான ஒப்புமையை இருபெரும் இலக்கிய நூல்களைக் கொண்டு இங்கு தொகுத்திருக்கிறார் திரு. கருவாபுரிச் சிறுவன்…
வரமுதவச்சடையான்
திரு. கருவாபுரிச் சிறுவன், கருவலம்வந்த நல்லூரின் சிறப்புகளை எழுதுவதில் மகிழ்பவர். அவரது திருக்கருவை தல புராணம் குறித்த இன்னொரு கட்டுரை இது...
சிபியைப் போற்றும் புறநானூறு
தஞ்சமடைந்த புறாவைக் காக்க தனது உடலின் தசையை அரிந்து தரத் துணிந்தவர் சிபி சக்கரவர்த்தி. புராணங்கள் பாராட்டும் இவரை ‘சிபி சோழன்’ என்று போற்றும் மரபு தமிழகத்தில் உண்டு. இவரைப் பற்றிய இலக்கிய குறிப்பு இங்கே…
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
‘இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற வரிகளை மையக்கருத்தாக வைத்து பல அருளாளர்கள் பாடல்கள் பல புனைந்து நம் பரம்பொருளின் திருவடிக்கு சாற்றி மகிழ்ந்துள்ளார்கள். அத்தகைய பாடல்கள் ஒரு சிலவற்றை கோடிட்டுக் காட்டுவதாக இச்சிந்தனை அமைகிறது.
எத்தனை இராமாயணங்கள்!
ராமாயணம் பாரத மண்ணின் காவியம். ஆதிகவி வால்மீகி இதனை இயற்றியிருந்தாலும், நாட்டின் ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கவிஞரும் தமது பாணியில் இதனை இயற்றி நமது பண்பாட்டை வளர்த்திருக்கிறார்கள். அதுகுறித்து இங்கே காண்போம்…
சீதையைப் பிரிந்த ராமன், தன்நிலை மறந்தானா?
கம்பன் விழாவில் ஒரு வம்பன் பேசிய பேச்சுக்கு உணர்வாளர்கள் பலரும் தங்களுக்கு உகந்த வகையில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதோ, எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் அவர்களின் தெளிவான விளக்கம்…
கம்பன் பிறந்த தமிழ்நாடா இது?
எனது கவலை ‘நானும் கூட’ பெருமைக்குரிய கவிஞரின் பண்பாடு பற்றியதல்ல. நமது பண்பாட்டின் மீது நடத்தப்பட்டிருக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்று தெரிந்தும் மௌனமாகக் கடந்து போகும் தமிழறிஞர்கள், கம்பனின் அன்பர்களின் இயலாமை தான் என்னை வேதனை கொள்ளச் செய்கிறது.
வைரமுத்துவுக்கு கம்பவாரிதியின் கடிதம்
சென்னை கம்பன் கழக பொன்விழாவில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு கம்பனின் தமிழன்பர்களையும் உலகம் முழுவதிலுமுள்ள ராமபக்தர்களையும் ஒருசேரப் புண்படுத்தி இருக்கிறது. அதுதொடர்பான வைரமுத்துவைக் கண்டிக்கும் பதிவுகளை நமது தளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கம்பன் விழாவிலேயே நிறைவுநாளில் வைரமுத்துவின் பேச்சைக் கண்டித்த கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள், இன்று முகநூலில், கவிஞர் வைரமுத்துவுக்கு பகிரங்க கடிதம் ஒன்றை வரைந்திருக்கிறார். இக்கடிதம் தன்னை பெரும் ஞானியென்று நினைத்துக் கொண்டிருக்கும் வைரமுத்துவின் ஊனக் கண்களைத் திறக்கட்டும். இதோ அவரது கடிதம்….