காற்றிடைச் சாளரம் – 5

மனம் என்னும் துணி- காற்றிடைச் சாளரத்தில் அலைபாய்கிறது இந்தக் கந்தல் துணி....

இன்றைய இந்தியாவின் முகங்கள்-1

உலகம் முழுவதும் கொரானா தொற்றுப் பரவி பாதிப்பை ஏற்படுத்திய போது அதற்கு தடுப்பூசியை ஓராண்டுக்குள் கண்டுபிடித்து, நம்மவருக்கு மட்டுமல்ல - உலகெங்கும் இலவசமாகவும் மிகக் குறைந்த விலையிலும் கொடுத்து சாதனை படைத்தது மோடி அரசு. அந்தச் சாதனைக்குப் பின்னால் இருந்தது பாரத் பயோடெக் நிறுவனம். அதைத் துவங்கியவர் டாக்டர் கிருஷ்ண எல்லா-வும் அவரது மனைவி டாக்டர் சுசித்ரா எல்லா-வும்.

அம்பேத்கரும் தேசியமும்

தீண்டத்தகாதவர்களைப் பாதுகாக்கும் தன் நடவடிக்கையை தனது தேசபக்தி நிலைப்பாட்டிலிருந்தே அம்பேத்கர் அணுகினார். அதேபோல, விடுதலைப் போராட்டத்தையும் தலித் கண்ணோட்டத்துடன் அணுகினார் அவர். விடுதலைப் போராட்டக் களத்தில் சமூகநீதியும் தீண்டாமை ஒழிப்பும் முக்கிய அம்சங்களாக மாறக் காரணம் ஆனவர் அவரே....குடிமக்களே தேசம் என்பதை முழுமையாக உணர்ந்தால் மட்டுமே, குடிமக்களின் ஒரு பகுதியான தீண்டப்படாதாரின் உரிமைகள் மீட்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் வேட்கை புரியும். இந்தத் தேசம் வலுப்பெற வேண்டுமானால், அம்பேத்கரின் அடியொற்றி சமூக ஒருமைப்பாட்டை நாம் வலுப்படுத்தியாக வேண்டும். அதுவே இன்றைய தேவை. (நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த 5வது கட்டுரை இது... பத்திரிகையாளர் சேக்கிழான் எழுதியது)....

விவேகானந்தரும் அம்பேத்கரும்

சுவாமி விவேகானந்தரும் அண்ணல் அம்பேத்கரும் மானுடத் துன்பத்தைக் கண்டு ரத்தம் சிந்தும் இதயம் உடையவர்களாக இருந்தனர். மானுடத் துன்பத்தைத் துடைக்க பாரத மரபிலிருந்து தீர்வுகளை நாடினர். அதற்காகவே தமது வாழ்க்கைகளை அர்ப்பணித்தனர். தங்கள் சுய விடுதலையைத் துறந்து அதற்காக உழைத்தனர்...ன்றானது அதிசயமல்லவே.... (நமது தளத்தில் அம்பேத்கர் குறித்த 4வது கட்டுரை இது... ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன் எழுதியது)...

அம்பேத்கரின் நூல்கள்

‘கல்வி, பொது சுகாதாரம், சமூக ஆரோக்கியம், வீடு ஆகியவை அடிப்படைத் தேவைகள்’ என்கிறார் அம்பேத்கர். குடும்பக் கட்டுப்பாடு, தேச வளர்ச்சிக்கு அவசியம். பெண்களுக்கு சமஉரிமை அளிப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழிலாளர்கள், ஜாதி ரீதியாகப் பிரிந்திருப்பது பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. சுதந்திரப் பொருளாதார முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இது இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

(நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த 3வது கட்டுரை- திருநின்றவூர் ரவிகுமார் எழுதியது)...

அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு

சமஸ்கிருத மொழியின்மேல் அண்ணல் அம்பேத்கருக்கு என்றைக்குமே வெறுப்பில்லை. சமஸ்கிருத மொழி இந்த பாரத தேசத்தின்  மொழியாக, தேசிய மொழியாக வர வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தார். தனக்கு வாய்ப்புக் கிடைத்த போது அதை நிரூபித்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அரசியல் சட்ட நிர்ணய சபை விவாதத்தில் கலந்துகொண்ட அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் வர வேண்டும் என்ற தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். இதுபற்றி பிடிஐ நிருபர், நீங்கள் சமஸ்கிருதத்திற்கு ஆதரவு தெரிவித்தீர்களாமே என்று அம்பேத்கரிடம் கேட்டபோது, ஆம், அதில் என்ன தவறு இருக்கிறது? என்று அந்த நிருபரைப் பார்த்து கேள்வி கேட்டார். (நமது தளத்தில் டாக்டர் அம்பேத்கர் குறித்த இரண்டாவது கட்டுரை இது... தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் ம.வெங்கடேசன் எழுதியது)....

அம்பேத்கர் பார்வையில் சமுதாயம்

அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு, சட்டமேதை, சமூக சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் உள்ளிட்ட வெவ்வேறு விதமான பரிணாமங்கள் இருந்தபோதும், அடிப்படையில் அவர் ஒரு பொருளாதார நிபுணர்....வறுமையை ஒழிக்க வேண்டும், ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, சுரண்டலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதைப் பொருளாதாரத்தின் முக்கியமான நோக்கங்களாகக் கருதினார். அவரது சிந்தனைகள் சாமானிய மக்களின் சிரமங்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது பற்றியதாகவுமே இருந்தது... (நமது தளத்தில் அம்பேத்கரை அறிமுகம் செய்யும் முதல் கட்டுரை இது- பேரா.ப.கனகசபாபதி எழுதியது)...

காற்றிடைச் சாளரம்- 4

கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் எழுதியுள்ள சிறு கவிதை- பாரதியின் ‘அக்கினிக் குஞ்சு’ போல.

காற்றிடைச் சாளரம் -3

பயணிகளின்

கனிவான கவனத்திற்கு…

தயாராக இருக்கவும்.

தலையில் பறவையிடும் எச்சமாய்,

கிளையில் வந்தமரும் பறவையாய்,

கூட்டத்தில் வெடிக்கும் வன்முறையாய்,

வழியில் எதிர்ப்படும் கந்துக்காரனாய்,

உங்களுக்கான தடத்தில்

உங்களுக்கான வண்டி

எப்போதும் வரலாம்.

காற்றிடைச் சாளரம் -2

-கவிஞர் ஸ்ரீ.பக்தவத்சலம் பிறந்த போதே தொப்புள் தழும்பு போல ஒட்டிக்கொண்டது காலம்.  . துயிலெழவும் துயில்கொள்ளவும் உணவுண்ணவும் கழிவு நீக்கவும் கற்றறியவும் கலை புரியவும் என ஒவ்வொன்றுக்கும்  உடனிருந்தது காலம். . காலம் பார்த்து கல்வி  காலம் பார்த்து காரியம்  காலம் பார்த்து உணவு காலம் பார்த்து உறவு காலம் பார்த்து பிரிவு  கலவியிலும் நுழையும் காலம்.  காலம்... காலம்... காலம். . பரமனின் கரத்திலொட்டிய  பிரம்மனின் கபாலமாய்  மனதிலொட்டிய காலத்தை  சுமந்தலைகிறது வாழ்வு. . வேறு … Continue reading காற்றிடைச் சாளரம் -2

அழகிய போராட்டம் (பகுதி- 8)

ஒத்துழையாமையும் சட்டமறுப்பும், ஜனநாயகமும் சுதந்தர நாடும் நன்கு செயல்பட உதவும் விஷயங்களே. இன்னும் சொல்லப்போனால் அவை இறுக்கமான சட்ட அமைப்புகளைவிட மிகவும் முக்கியமானவை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநில அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் அல்லது இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்குள் நடக்கும் மட்டுப்பட்ட விவாதங்கள், பரிசீலனைகள் ஆகியவற்றைவிட அமைதிப் போராட்டங்கள் மிகவும் அவசியமானவையே. சர்வாதிகாரம், அநீதி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இப்படியான அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் உண்மையில் அரசையும் மக்கள் சமூகங்களையும் காப்பாற்றக் கூடியவர்களே. அவர்கள் மட்டும் இல்லையென்றால், சமூகமானது வெறும் இயதிரம் போன்ற ஒன்றாகவே முடங்கிப் போகும். அல்லது சர்வாதிகாரப் போக்கினால் முழுமையான அராஜகம் மற்றும் ஆயுதப் போராட்டம் போல முடியும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம் 4-இன் நிறைவுப் பகுதி)....

அழகிய போராட்டம் (பகுதி- 7)

தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒத்துழையாமை,  சட்ட மறுப்பு போன்ற அமைதியான வழிகளில் போராடுவது என்பது இந்தியப் பாரம்பரியத்தின்  ஓர் அங்கமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.  ....“இந்திய தேசம் முழுவதிலும் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்  அமைதி வழியிலான எதிர்ப்பைக் காட்டுவது தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது.   நமது ஆட்சியாளர்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினால் நாம் அவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பது உண்டு” என்ற காந்திஜியின் கூற்றையும் அது உறுதிப்படுத்துகிறது.  (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் 4வது அத்தியாயத்தின் துவக்கப் பகுதி)...

அழகிய போராட்டம் (பகுதி- 6)

பகுதிகளிலும் நடந்ததாகத் தெரியவரும்  போராட்டங்கள் எல்லாம் 1920-  1930களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கச் செயல்பாடுகளைப் போலவே  இருப்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். 1810-11 வாக்கில் பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்த விஷயங்களை சுருக்கமாக இங்கு மறு பார்வை பார்ப்பது மிகவும் அவசியமாக இருக்கும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் மூன்றாவது அத்தியாயம்...)

அழகிய போராட்டம் (பகுதி- 5)

“30 செப்டம்பர், முந்தா நாள் திங்கட்கிழமையாக இருந்ததால் வரி வசூலிப்பு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தாசில்தாரின் வருகையைக் கண்டதுமே மக்கள் தமது கடைகளையும் வீடுகளையும் மூடிக் கொண்டுவிட்டனர். நேற்றும் அரசாங்க அதிகாரிகளினால் எதுவும் செய்யமுடியவில்லை. மாலையில் நான் வண்டியில் வெளியே போனபோது சாலையில் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், தங்களுடைய நிராதரவான நிலைமை குறித்து புகார் மழை பொழிந்தனர். வரியைச் செலுத்த முடியாது என்று கூச்சலிட்டுச் சொன்னார்கள்.”... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம்- 2இன் தொடர்ச்சி)....

அழகிய போராட்டம் (பகுதி- 4)

பொதுவாக நம்பப்பட்டு வருவதற்கு மாறாக, 1784  வாக்கிலிருந்து (அதற்கு முன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும்)  இந்தியா தொடர்பாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரிய பங்கு எதுவுமே இருக்கவில்லை.  தீர்மானங்கள் மட்டுமல்ல, பல நேரங்களில் ஆரம்பகட்ட செயல்திட்ட வரைவுகள் கூட 1784களுக்குப்  பின்னர் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் கமிஷனர்கள் குழுவிடம்  தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  அந்தக் குழுவானது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  ஒரு சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது.  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உறுப்பினர்கள்தான்  அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1858  வரையிலும் அந்தக் குழுவே இந்தியா தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுத்தது. ... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் இரண்டாம் அத்தியாயத்தின் துவக்கப் பகுதியில் இருந்து)....