தோன்றி மறையக் கூடிய இந்த வாழ்க்கையை நிலையானது என்றும் நிஜமானது என்றும் நினைத்துக்கொண்டு குருட்டுத்தனமாகச் செயல்படுவதால், பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட குருடர்களில் ஒருவனான என் மீது சிவபெருமானே உனது கருணையைப் பொழிந்துவிடு என்று நமக்காக வேண்டுகிறார் ஆதிசங்கரர்....
Category: தொடர்
சிவகளிப் பேரலை- 12
பக்தி செய்வதற்கு எது உகந்த இடம்? குகையா? வீடா? இல்லையேல் காடா? மலையா? எது சிறந்த இடம்? ஆழமான நீர்நிலையில் நின்று கொண்டோ, தன்னைச் சுற்றி தீயை வளர்த்துக்கொண்டோ கடுமையாகத் தவம் புரிவது சிறந்ததா? இல்லையில்லை. பக்தி இல்லாமல் இவ்வாறு செய்வதால் எந்தப் பயனுமில்லை.
சிவகளிப் பேரலை – 11
ஒரு பக்தன் எந்த நிலையில் இருந்தாலும், சிவன் மீதான பக்தி ஒன்று போதும், பிறவிச் சுமையில் இருந்து எளிதில் விடுபடுவான். பிறவித் தளையில் இருந்து விடுபட இந்த ஆசிரமம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை. உண்மையான பக்தி ஒன்று போதும்...
சிவகளிப் பேரலை- 10
மனிதப் பிறவியோ, அதனைவிட மேலான தேவப் பிறவியோ, அல்லது மலை மற்றும் காடுகளில் உழல்கின்ற மிருகப் பிறவியோ, மிகச் சிறிய கொசு வடிவோ, வீட்டு விலங்கோ, புழுவோ, பறவை முதலிய பிறவியோ எந்தப் பிறவி வேண்டுமானாலும் கிடைக்கட்டும். எப்படிப்பட்ட பிறவி எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல, எந்தப் பிறவியானாலும் எந்தை சிவபெருமானை மறவாத மதி வேண்டும் என்பதே முக்கியம்....
சிவகளிப் பேரலை- 9
சிவபெருமான் எவ்வளவு பெரியவரோ அந்த அளவுக்கு எளிமையானவர். தெளிந்த மனம் போதும் அவரை உபசரிக்க; அழகும், மணமும் நிறைந்த பூக்கள் அவசியமில்லை....
எனது முற்றத்தில்… 4
எல்.கே.அத்வானி மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சராக இருந்தபோது இந்தோனேஷியாவில் இருந்து வந்த ஒரு கலாச்சாரக் குழுவினர் அவரைச் சந்தித்தார்கள். அனைவரும் முஸ்லிம்கள். அதெப்படி ராமாயண நாட்டிய நாடகம் எல்லாம் நடத்துகிறீர்கள் என்று அத்வானி கேட்டபோது "நாங்கள் மதம் மாறியிருக்கலாம்; ஆனால் எங்கள் மூதாதையர்களை மாற்றிக் கொள்ளவில்லை. ராமர் எங்கள் மூதாதை" என்று விளக்கினார்கள். இந்தோனேசிய அரசே கரன்சி நோட்டில் கணபதி படம் அச்சிட்டு வருகிறது; கருடா ஏர்வேஸ் என்று தனது விமானக் கம்பெனிக்குப் பெயர் என ஹிந்து அடையாளங்களை விருப்பத்தோடு ஏற்கிறது. அந்த நாட்டு மக்கள் மனதில் ஹிந்து என்றால் முகத்தை திருப்பிக் கொள்ளும்படி சொல்லும் விஷம் எப்படி பரவும்?...
சிவகளிப் பேரலை- 8
சிவரூபம்தான் இறைத்தன்மையின் உச்சநிலை என்பதை இங்கே மிக அற்புதமாக எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.... முழுமையான ஞானம் இல்லாத காரணத்தால் ஏற்படுகின்ற மனமயக்கம் காரணமாக, மூடர்கள், அனைத்திலும் மேலான, ஒப்பும் உயர்வும் அற்ற இறை வடிவமான சிவத்தை நினைக்காமல், மற்ற தெய்வங்களை நாடுகிறார்கள் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
இன்றைய இந்தியாவின் முகங்கள் – 6
சொத்து என்பது இறைவன் கொடுத்தது. அதை அப்படியே தன் பிள்ளைகளிடம் கொடுத்துவிட்டு போவதற்காகக் கொடுக்கவில்லை. சொத்தின் வலிமையே அதை பிறருக்குக் கொடுப்பதில் தான் உள்ளது என்று கூறுகிறார் மோகன்தாஸ் பை. இவர் சேர்த்ததை விடவும் அதிகம் இவர் கொடுத்தது... 2000-ஆம் ஆண்டில் இஸ்கான் உடன் இணைந்து இவர் செயல்படுத்தியது ‘அக்ஷய பாத்திரம்’ திட்டம். இத்திட்டத்தின் மூலம் கர்நாடகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவு வழங்கப்படுகிறது.
சிவகளிப் பேரலை- 7
அனைத்தும் அவன் செயல் என்பதை அறிந்துகொண்டு, அனைத்துச் செயல்களையும் அவன்பாலே செய்துவிட்டால் பாவ - புண்ணியம் எவ்வாறு நம்மைப் பற்ற முடியும்? நினைப்புதான் நம்மை உயர்த்துகிறது. நினைப்புதான் நம்மைத் தாழ்த்துகிறது. அந்த நினைப்பேயே இறைமயம் ஆக்கிவிட்டால், உலகியல் செயல்களுக்கு நாம் இரையாக மாட்டோம்....
சிவகளிப் பேரலை- 6
தர்க்கவாதத்திற்குப் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிசங்கரர், பக்திக்கு முன்பு எந்த வாதமும் எடுபடாது, சிவபக்தி ஒன்றே போதும் என்று இங்கே கூறுகிறார். ஞானம் இறைவனோடு ஐக்கியத்தை ஏற்படுத்தினாலும், அது முழுமையடையும் வரையில், தான் என்ற நினைப்பு கூடவே இருக்கும். ஆனால், கனிந்த பக்தியில் தன்னைக் கரைத்துக்கொண்டு இறைவனே எல்லாம் என்பதால், தான் என்ற அகம்பாவம் அடிப்படையிலேயே காணாமல் போய்விடுகிறது.
சிவகளிப் பேரலை- 5
மிகப் பெரும் ஞானியாகிய ஸ்ரீ ஆதிசங்கரர், அவையடக்கமாய் தம்மை ஏதுமறியாதவர்போலக் காட்டிக்கொண்டு, சிவபெருமானிடத்தே கருணையை இறைஞ்சுகிறார். அவரது அவையடக்கம், பாமர பக்தர்களாகிய நம்மை நினைத்துத்தான். நமக்காக, நம்பொருட்டு, நாம் வேண்டுவதற்காகவே, தம்மை பாமரனாக உருவகித்துக்கொண்டு இந்தப் பாடலை அருளியிருக்கிறார் ஜகத்குரு....
எனது முற்றத்தில்… 3
‘எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்’ என்று பாரதி பாடிவிட்டுப் போயிருக்கலாம். பாரதி சொல்வது சரி என்று அத்தாட்சி தருபவர் யார் தெரியுமா, தமிழக சலவைத் தொழிலாளர். பல்வேறு தொழில்கள் செய்வோர் ஆயுத பூஜை அன்று தங்கள் தொழில் கருவியை பூஜித்து வருகிறார்கள். சலவைத் தொழில் செய்பவர்? ஆற்றங்கரை படித்துறை தான் அவரது தொழில் கருவி. எனவே அவர் வைக்கும் பொங்கல் ’துறைப் பொங்கல்’ என்கிறது தமிழ் லெக்சிகன் என்ற பேரகராதி...
சிவகளிப் பேரலை – 4
விஷ்ணுவும் தாமரையில் வீற்றிருக்கும் பிரும்மாவும் சிவபெருமானுக்கு மிக அருகிலே இருந்தும்கூட அவர்களாலும் அறியப்படாத திருவடித் தாமரைகள் சிவபெருமானுடையவை. அத்தகு சிறப்பு வாய்ந்த சிவபெருமானின் திருவடிகளை மனத்தால் நினைந்து தொழுவதையே யான் வேண்டுவேன். வேறு தெய்வங்களை நினைத்தும் பாரேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
சிவகளிப் பேரலை – 3
புறநானூற்றில், புலவர் மதுரை மருதன் இளநாகனார், பாண்டியன் நன்மாறனைப் புகழும் பாடலில், “ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ, ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி” என்று சிவபெருமானின் திரிபுர தகனத்தை வர்ணிக்கிறார். மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் ஆண் பாம்பை நாணாகக் கொண்டு கணை தொடுத்து முப்புரங்களை எரித்தவர் என்று இதற்குப் பொருள்....
சிவகளிப் பேரலை – 2
பல்லாயிரம் ஆண்டுகளாக பக்தகோடிகளால் உரைக்கப்பட்டு வருகின்ற சிவலீலை எனப்படும் சிவன் சரிதம் என்ற ஆற்றிலிருந்து பாய்ந்து வரக்கூடிய சிற்றோடையாக இந்த நூலை உருவகப்படுத்தியுள்ளார். மனிதர்களின் பாவங்களை அழிப்பதுடன், அவர்களைப் பிறவித் தளையில் இருந்து விடுவிக்கும் மாமருந்தாகவும், அதற்கான அறிவைத் தருவதாகவும் விளங்கும் இந்த நூல், இதனைப் படிப்போர் சிந்தையில் தங்கி, அவர்களுக்குப் பயன் தரும் என்பதையும் உணர்த்தியுள்ளார்....