சத்திய சோதனை – 5(16-20)

தோட்ட முதலாளிகளுக்கு எரிச்சலை உண்டாக்க நான் விரும்பவில்லை. ஆனால், கௌரவமாக நடந்துகொள்ளுவதன் மூலம் அவர்கள் மனத்தைக் கவர நான் விரும்பினேன். ஆகையால், எந்தத் தோட்ட முதலாளிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டனவோ அவர்களுக்கு எழுதுவது, அவர்களைச் சந்தித்துப் பேசுவது என்று வைத்துக் கொண்டேன். தோட்டக்காரர்கள் சங்கத்தினரையும் சந்தித்தேன். விவசாயிகளின் குறைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறியதோடு தோட்ட முதலாளிகளின் கருத்தையும் தெரிந்துகொண்டேன். இந்தத் தோட்ட முதலாளிகளில் சிலர் என்னை வெறுத்தார்கள்; சிலர் என்னை அலட்சியம் செய்தனர்; மற்றும் சிலரோ, என்னை மரியாதையுடன் நடத்தினார்கள்.....

ஆரியரும் தமிழரும்: சுவாமி விவேகானந்தரின் சில குறிப்புகள்

கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு மாபெரும் மாயை, ‘ஆரிய- திராவிட இனவாதம்’. இந்த மாபெரும் பொய் தொடங்கிய காலத்திலேயே இதன் அபாயத்தை உணர்ந்து எச்சரித்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர். இது தொடர்பாக பாரதி ஆய்வாளர் அமரர் திரு. பெ.சு.மணி அவர்களின் கட்டுரை இங்கே....

இசைவல்லுநர் விவேகானந்தர்

மறைந்த திரு. பெ.சு.மணி, தமிழின் மூத்த ஆய்வாளர்; பாரதியியல் எழுத்தாளர். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…

இந்தியர்களுக்கு உயிர் இருக்கிறதா?

மறைந்த திரு. தென்கச்சி கோ.சுவாமிநாதன், புகழ்பெற்ற பேச்சாளரும்  எழுத்தாளரும் ஆவார். ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கியவர். அகில இந்திய வானொலியில்  உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த இஅவரது கட்டுரை இங்கே…

ஞான ஜெயந்தி

அமரர் திரு.  ரா.கணபதி, ஆன்மிக  எழுத்தாளர்;  காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்;  மறைந்த காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் உபதேசங்களை 7 பாகங்களாக, அற்புதக் கருவூலமாக  ‘தெய்வத்தின் குரல்’ என்ற நூலாகத் தொகுத்தவர்;  ‘அறிவுக் கனலே அருட்புனலே’ (ராமகிருஷ்ணர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு), ’சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு’, ’காற்றினிலே வரும் கீதம்’ உள்ளிட்ட பல  ஆன்மிக நூல்களை எழுதியவர். சுவாமி விவேகானந்தர் குறித்து இவர் எழுதிய இக்கட்டுரை, சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு (1963) விழாவை முன்னிட்டு, கல்கி வார இதழில் (மலர்- 22, இதழ்- 25) இடம்பெற்றதாகும்.

மகாவித்துவான் சரித்திரம்- 2(6ஆ)

நல்ல திறமையுள்ள விகடகவியொருவர் அப்பொழுது பல வகைப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்களைப் பேசி யாவரையும் சிரிக்கும்படி செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கே வந்திருந்த வேதநாயகம் பிள்ளை இப்புலவர்கோமானை நோக்கி, "விகடகவிகள் வித்துவான்களுக்கு நேர் விரோதிகள்; வித்துவான்கள் இழிந்தவற்றையும் உயர்ந்தனவாகக் கூறுபவர்கள்; விகடகவிகள் உயர்ந்தவற்றை இழிந்தனவாக நினைக்கும்படி பேசுபவர்கள்" என்றார். புத்திமான்கள் பேசும் எந்தப் பேச்சும் நயமாக இருக்குமென்பதை அவருடைய வார்த்தை புலப்படுத்தியது.

மகாவித்துவான் சரித்திரம்- 2 (6அ)

கவிஞர்களுடைய பேராற்றல் இத்தகையதென்பதைச் சரித்திரங்களின் மூலமாக அறிந்தவனேயன்றி அன்று போல நான் நேரிற் பார்த்ததில்லை. ஆதலின் ஒரு மகாகவியின் வாக்கிலிருந்து ஆற்றொழுக்கைப் போலக் கவிதாப்பிரவாகம் பெருகிக்கொண்டிருப்ப அதனைக் காதினாற்கேட்டும் கையினாலெழுதியும் மனத்தினாலறிந்தும் இன்புற்ற எனது நிலை இங்கே எழுதற்கரியது....

விவேகானந்த பரமஹம்சமூர்த்தி

தமிழகத்தின் தவப்புதல்வர் மகாகவி பாரதி, பாரதத்தின் ஞான ஒளியாம் சுவாமி விவேகானந்தருக்குச் சூட்டிய அற்புதமான புகழாரம் இக்கட்டுரை.‘விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர்’ என்பதை உலகம் அறியும்- என்கிறார் இக்கட்டுரையில்...

ஸ்வாமி விவேகாநந்தரின் தேசபக்தி

மகாகவி பாரதி,  தான் நடத்திய இந்தியா பத்திரிகையில் எழுதி வெளியிட்ட செய்தி இது. இந்தியா – 28.08.1906  இதழில் 5-ஆம் பக்கத்தில் இச்செய்தி வெளியாகி உள்ளது.

மகாவித்துவான் சரித்திரம்- 2(5)

அப்பொழுது தேசிகர் புன்னகை கொண்டு, "என்ன பிள்ளையவர்கள்! இராத்திரி வெகு வேடிக்கைகள் பண்ணிவிட்டீர்களே; மிகவும் சிரமமாக இருந்திருக்குமென்றும் தூக்கம் கெட்டிருக்குமென்றும் எண்ணுகிறோம்" என்று பாராட்டிக் கூறி அழைத்து நெற்றியில் திருநீறிட்டுப் பக்கத்திலிருக்கும்படி செய்தார். பின்பு அங்கேயிருந்த பிரபுக்களையும் வித்துவான்களையும் நோக்கி, "இவர்கள் இருப்பது ஆதீனத்திற்கு மிகவும் கெளரவமாகவே இருக்கின்றது. என்ன பாக்கியமிருந்தாலும் இதற்கு ஈடாகாது. குறைந்த கல்வியுடையோரையும் கெளரவிக்க வேண்டுமென்று எண்ணியிருக்கிற இவர்கள் குணம் யாருக்கு வரும்! ஆதீனத்தின் அதிர்ஷ்டமென்றே சொல்ல வேண்டும்" என்று முதல்நாள் நிகழ்ந்தவற்றைச் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்தனர்.....

அரவிந்தரின் புதிய தேசியம்

மகரிஷி அரவிந்தரின் 150வது ஆண்டை ஒட்டி, ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் வெளியான பேராசிரியர் மகரந்த். ஆர். பராஞ்சபே அவர்களின் ஆங்கிலக் கட்டுரை இங்கு தமிழில் மீள்பதிவாகிறது.

சான்றோர் பார்வையில் சுவாமி விவேகானந்தர்

திலகர் முதல் தாகூர் வரையிலான தேசத் தலைவர்கள் பலரின் சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்துகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...

சத்திய சோதனை – 5(6-10)

சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக்கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மாத்திரம் அதைப் போட்டுக்கொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக்கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால், அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்த வரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதை அணிய வேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை.....

சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய மதம்

பாரதத்தின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த திரு. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888- 1975), சிறந்த தத்துவ மேதை. சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது கட்டுரை இங்கே…

விழித்தெழு பாரதமே!

பூஜ்யஸ்ரீ சுவாமி ஆசுதோஷானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி. சென்னை- மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மேலாளராக இருந்தவர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி கொண்டாட்டத்தின்போது இவர் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது…