ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

தினமணி நாளிதழில் பணியாற்றும் பத்திரிகையாளர் திரு. வ.மு.முரளி சுவாமி விவேகானந்தர் குறித்து எழுதிய கட்டுரை இது….

விவேகானந்தப் பேரொளி (கவிதை)

தவத்திரு குன்றக்குடி அடிகளார் (1925- 1995) என்று அழைக்கப்பட்ட அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், குன்றக்குடி திருமடத்தின் 45வது குருமகா சந்நிதானமாக விளங்கியவர். ‘அருள்நெறித் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை நிறுவி ஆன்மிகப் பயிர் வளர்த்தவர்; தமிழ் ஆர்வலர்; 25-க்கு மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். சுவாமி விவேகானந்தர் மீதான அடிகளாரின் கவிதை இது…

பாரதியும் பாரதிதாசனும்- 4ஆ

கவியரசர் தொடக்கத்திலிருந்து இறுதி வரையில் தூய்மையானதும், ஆழமானதும், பிறர் எளிதில் கண்டு கொள்ள முடியாததும் ஆகிய கடவுட் பற்றுக் கொண்டவராக இருந்திருக்கிறார் என்பதை அறுதியிட்டுக் கூறலாம். புரட்சிக் கவிஞரை 'நாத்திகர்' என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மை என்ற வாதத்திற்கு இந்த அளவுடன் ஒருவாறாக ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, இனி அவருடைய கவிதைகளில் புகுந்து மன நிலையைக் காண முற்படலாம்.....

விவேகானந்த பஞ்சகம்

வணக்கத்திற்குரிய சுவாமி விபுலானந்தர்  (1842- 1947) இலங்கையைச் சார்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவி; ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழின் முதல் சந்நியாச ஆசிரியர். தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த முன்னோடி  ஆராய்ச்சியாளர். சுவாமி விவேகானந்தர் மீதான அன்னாரது அரிய கவிதை இது…

மகாவித்துவான் சரித்திரம்- 2(14)

மகாவித்துவான் அவ்வப்போது எழுதிய தனிச் செய்யுட்கள், அன்பரைப் பாராட்டிய செய்யுள்கள், கடிதப் பாடல்கள், சிறப்புப் பாயிரப் பாடல்களில் கிடைத்தவற்றை அனுபந்தமாக பிற்சேர்க்கையில் இணைத்து வழங்கி இருக்கிறார் உ.வே.சா....

தாயகச் செல்வன் (கவிதை)

திரு. கவியரசு கண்ணதாசன் (1927- 1981), மகாகவி பாரதிக்குப் பிறகு வந்த, உத்வேகமூட்டும் தமிழ்க் கவிஞர்; திரைப்பாடல்களுக்கு இலக்கிய மரியாதையை ஏற்படுத்தியவர். சுவாமி விவேகானந்தர் மீதான கவியரசரின் இனிய கவிதை இது…

ஆச்சார்யர் நரேந்திரர்!

திரு. திருநின்றவூர் கே.ரவிகுமார், சென்னையில் வசிக்கிறார்; அசோக் லேலண்ட் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தர் 150வது ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கான ‘பிரபுத்த பாரத’ குழுவில் உறுப்பினராக இருந்தவர்; சிறந்த மொழிபெயர்ப்பாளர்; எழுத்தாளர். ‘பொருள் புதிது’ இணையதள ஆசிரியர் குழு உறுப்பினர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…

சுவாமி விவேகானந்தரின் உலகளாவிய கண்ணோட்டம்

பேராசிரியர் திரு. கே.குமாரசாமி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் வட தமிழகத் தலைவர். மாநிலக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்; சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா கல்வி மைய உறுப்பினராகவும், ராசிபுரம் வித்யாமந்திர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இங்கே…

விவேகானந்தம்

திரு. கவிக்கோ ஞானச்செல்வன், தமிழகம் அறிந்த புலவர், சென்னையில் வசிக்கிறார்; தமிழாசிரியராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர்; சிறந்த எழுத்தாளர். ‘பாரதி வாழ்கிறார், நீங்களும் கவிஞராகலாம், அர்த்தமுள்ள அரங்குகள்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். தினமணிக்கதிரில் வெளியான ‘பிழையின்றித் தமிழ் எழுதுவோம்’ தொடர் தமிழ்மொழி மீதான இவரது பற்றை வெளிப்படுத்தும். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது….

பாரதியும் பாரதிதாசனும்- 4அ

பாரதி, பாரதிதாசன் என்ற இருவருடைய கவிதைகளையும் ஆர அமர நினைந்து பார்ப்போமேயானால், இருவருடைய உணர்ச்சிக்கும் அதிக வேறுபாடு இல்லை என்பதை அறிய முடியும். இருவருடைய ஆற்றலும் பேராற்றல்கள் என்பதிலும் ஐயமில்லை. பலவிடங்களில் வாழும் மக்களிடம் பழகிய காரணத்தால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் குழாய் மூலம் நீர் சொரிவது போலப் பாரதியின் கவிதைகள் வெளிப்பட்டன. தமிழர்களை அல்லாமல் பிற மக்களோடு பழகும் வாய்ப்பைப் பெறாத காரணத்தாலும் பிற இடங்களுக்கு அதிகம் சென்று தங்கி உறவு கொள்ளாத காரணத்தாலும் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் குடத்தைக் கவிழ்த்து நீரைச் சொரிவது போல உணர்ச்சியை அப்படியே கொட்டி விடுகின்றன.

ஏழையே தெய்வம்!

பேரா. திரு. இரா.வன்னியராஜன், திருவேடகம் விவேகானந்த குருகுலக் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர். அன்னாரது சுவாமி விவேகானந்தர் உறித்த கட்டுரை இது…

மகாவித்துவான் சரித்திரம்- 2(13)

பிள்ளையவர்களுடைய இளம்பிராயத்தில் ஒருவர் பாடங்கேட்க வந்தார். "என்ன படிக்க வேண்டும்?" என்று இவர் அவரைக் கேட்கவே அவர், "இலக்கியம் படிக்க வேண்டும்" என்று கூறினார். அப்பால், "இலக்கணம் படிக்க வேண்டாமா ?" என்று இவர் கேட்டபொழுது, “நன்றாகப் படித்திருக்கிறேன்" என்று அவர் விடை கூறினார்; உடனே இப்புலவர்பிரான் அவரை ஒரு செய்யுள் சொல்லச் செய்து, "இந்தப் பாடலில் எழுவாய், பயனிலை என்ன?" என்று கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்தும் விளங்காமல் விழித்துக் கொண்டே யிருக்கையில் இவர், "எழுவாய், பயனிலை" என்று சொன்னார்...

விவேகானந்தர்: எண்ணத்தை இயக்கமாகிய ஆன்மிக வழிகாட்டி

முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது கட்டுரை இங்கே…

“கொடுப்பதைக் கொடுத்து விடுங்கள்”

திரு. படுதலம் சுகுமாரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர்; கார்ட்டூனிஸ்ட்; சிறுகதை ஆசிரியர். சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கட்டுரை இங்கே…

பாட்டும் நானே… பாவமும் நானே!

ஆணவம் கொண்ட பாடகர் ஒருவருக்கு பாடம் கற்பிக்க, விறகுவெட்டியாய் வந்து பாடி திருவிளையாடல் நிகழ்த்திய சிவனின் பெருமையை உணர்த்தும் பாடல் இது... திரைக்கதைக்கு ஏற்ப கவியரசர் நிகழ்த்தியுள்ள சொற்களின் ஜாலம், திரைப்படத்தின் தரத்தையே உயர்த்துகிறது...