பாரதியின் தனிப்பாடல்- 15

-மகாகவி பாரதி

15. சந்திரமதி

ராகம்: ஆனந்தபைரவி; தாளம்: ஆதி

பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;- என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே- நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே- நின்தன்
சோதி வளரு தடீ! 1

பேச்சுக் கிடமே தடி!- நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!- என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த- வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி- கொண்ட
தேவி!நினை விழந்தேனடி! 2

நீலக் கடலினிலே- நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே- நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே- நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே- நின்தன்
காதல் விளங்குதடி!    3                                             

(பச்சைக் குழந்தையடி!)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s