சூதாட்டம் அதன் அதி உச்சத்தை எட்டுகிறது. பாஞ்சாலியைப் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். மகாகவி பாரதி பொங்குகிறார். அவருக்கு பாஞ்சாலியின் வீழ்ச்சி பாரத அன்னையின் வீழ்ச்சியாகத் தெரிகிறது. “செருப்புக்கு தோல் வேண்டியே - இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை?” என்று வினவும் அவர், “வேள்விப் பொருளினையே - புலை நாயின்முன் மென்றிட வைப்பவர்போல்”, ஆவியில் இனியவளை, வடிவுறு பேரழகை, புகழ்ப் பாஞ்சால நாட்டினர் தவப்பயனை, கொடியவர் அவைக்களத்தில் பணயம் வைத்து இழந்து விட்டான் கோமகன் தருமன்- என்கிறார்....
Category: பாரதி இலக்கியம்
பாஞ்சாலி சபதம் – 2.1.13
துரியோதனனின் ஆர்ப்பரிப்பைத் தடுக்கும் தாய்மாமன் சகுனி, மேலும் வஞ்சக நெஞ்சுடன் பேசுகிறான். களி விளையாட்டுக்காக ஆடிய சூதில் தோற்ற சகோதரர்களை ஏளனம் செய்தல் முறையல்ல என்று மருகனிடம் கூறும் அவன், பாண்டவரின் மனைவியான பாஞ்சாலியைப் பணயம் வைத்து ஆடினால், அவளது அதிர்ஷ்டத்தால் இழந்த அனைத்தையும் தருமன் திரும்பப் பெறலாம் என்கிறான். இது நல்ல ஆலோசனை என்கிறான் துரியன் - தேன் கலசத்தை நக்க விழையும் நாய் போல என்கிறார் மகாகவி பாரதி. இத்துடன் அடிமைச் சருக்கம் முற்றுப் பெறுகிறது...
பாஞ்சாலி சபதம் – 2.1.12
சூதாட்டத்தில் செல்வங்கள், நாடு, சகோதரர்களை இழந்த தருமன் இறுதியில் தன்னையும் பணயம் வைத்து இழக்கிறான். உடனே துரியன் ஆர்ப்பரிக்கிறான். “இதை எங்கும் பறையறை வாயடா- தம்பி!” என துச்சாதனனிடம் கூறுகிறான்...
பாஞ்சாலி சபதம்- 2.1.11
சூதாட்டம் உச்சத்தை எட்டிவிட்டது. நாட்டையும் செல்வங்களையும் சகோதரர்களையும் சூதில் இழந்த தருமன், இறுதியாக தன்னையே பணயம் வைக்கிறான்... தோற்கிறான். “இவன் தன்னை மறந்தவ னாதலால் - தன்னைத் தான் பணயமென வைத்தனன்” என்கிறார் மகாகவி பாரதி, தருமனின் கையறு நிலை கண்டு.
பாஞ்சாலி சபதம்- 2.1.10
பார்த்தனை இழந்த பிறகும் தருமன் தன்னிலை மீளவில்லை. இதுவே சூதின் இயல்பு. அதை மேலும் விசிறி விடுகிறான் சகுனி. வீமனை பந்தயம் வை என்கிறான். சூதே ஆயினும், எதிர்த்தரப்பில் இருப்பவர் பணயப் பொருளைக் கூறல் மரபல்ல. அதையும் மீறுகிறான் சகுனி. ஆனால், தருமன் ‘தக்கது செய்தல் மறந்தனன்’. “பெரும்புகழ் வீமனை, - உங்கள் பொய்வளர் சூதினில் வைத்திட்டேன் - வென்று போ!’ என்று உரைத்தனன்... விதி அவன் நாவில் வந்து அமர்ந்திருக்கிறதே!
பாஞ்சாலி சபதம் – 2.1.9
சகுனியின் எள்ளலைக் கேட்டு வெகுண்ட தருமன், தனது தம்பி பார்த்தனைப் பணயம் வைத்து இழக்கிறான். முன்னதாக, “‘எங்களில் ஒற்றுமை தீர்ந்திடோம்; - ஐவர் எண்ணத்தில், ஆவியில் ஒன்றுகாண்” என்கிறான்.
பாஞ்சாலி சபதம் – 2.1.8
சகாதேவனை அடுத்து அசுவ சாஸ்திர வல்லுநனான நகுலனையும் சூதில் பணயம் வைத்து இழக்கிறான் தருமன். அப்போது தனது பாதை தவறு என்று சிறு ஞானோதயம் தருமனுக்கு ஏற்படுகிறது. அதை உணர்ந்த சகுனி, “சிற்றன்னை மாத்ரிக்குப் பிறந்தவர்கள் என்பதால் சகாதேவனையும், நகுலனையும் வைத்து இழந்தாய் போலும். குந்தியின் பிள்ளைகளான உன் உடன் பிறந்தவர்களான பீமனையும் அர்ச்சுணனையும் சூதில் வைக்கத் தயங்கினை போலும்” என்று எள்ளி நகையாடுகிறான்.
பாஞ்சாலி சபதம் – 2.1.7
துரியனின் ஆசை வார்த்தையை ஏற்று, தம்பியரில் இளையவனான சகாதேவனைப் பணயம் வைத்து ஆடிய தருமன் மீண்டும் தோற்கிறான். “தீய சகுனி கெலித்திட்டான்”.
பாஞ்சாலி சபதம் – 2.1.6
சூதாட்டத்தில் நாட்டை வைத்திழந்த தருமனிடம் அவனது சகோதரரை வைத்து ஆடினால், அதில் வென்றால் நாட்டை மீட்கலாம் என ஆசை வார்த்தை கூறுகிறான் துரியன். அது கண்டு அவையினர் மருகுகின்றனர். ஆனால், யாருக்கும் துரியனை எதிர்த்துப் பேசும் துணிவில்லை. பீமனும், விஜயனும் நகுலனும் வேதனையில் வாட, அவர்களின் பின்னவனான சகாதேவன் ஊமை போலிருந்தான்; ஏனெனில் அவன் பின்னாளில் நடக்கப் போவதை முன் உணர்ந்தவன் (ஜோதிட வல்லுநன்) என்கிறார் மகாகவி பாரதி. “சிங்க மைந்தை நாய்கள் - கொல்லுஞ் செய்தி காண” சகிக்காமல் அவையோர் தவிக்கின்றனர்..
பாஞ்சாலி சபதம் – 2.1.5
அவையில் சூதாட்டத்தை விதுரனைத் தவிர எதிர்ப்பார் யாருமில்லாத சூழலில், மீண்டும் தொடர்கிறது, வம்சம் அழிக்க வந்த சூது. பாண்டவர் தலைவனான தருமன் அங்கு நாட்டை பணையம் வைத்து இழக்கிறான். மன்னனே ஆயினும் நாட்டை ஆள மட்டுமே உரிமை உடையவன்; அவன் நாட்டை தனது சொந்தச் சொத்தாகக் கருதக் கூடாது என்று பொருள்பட, கோயில் பூசாரி கடவுள் சிலை விற்பதுபோல, வாயில் காப்போன் காக்க வேண்டிய வீட்டை சூதில் வைத்து இழப்பது போலவும், தேசத்தை சூதில் பணையம் வைத்து இழக்கிறான் தருமன் என்று கூறிக் கண்டிக்கிறார் மகாகவி பாரதி. “சீச்சீ! சிறியர் செய்கை செய்தான்” என்றும் குமுறுகிறார். மகாகவியின் தேசபக்தி கனலென வெளிப்படும் கவிதைத் தருணம் இது ...
பாஞ்சாலி சபதம் – 2.1.4
அறவுரை கூறி குருகுல இளவரசனைத் திருத்த முயன்ற விதுரன் தன் மீது பொழியப்பட்ட துரியனின் சுடுசொற்களால் மனம் நொந்த விதுரன், “சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா?” என்று விரக்தியுடன் அவையில் அமைதியாவதாக எழுதுகிறார் மகாகவி பாரதி. மன்னர் திருதராஷ்டிரனும், பீஷ்மரும் இதனைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கையில் நான் நீதி சொல்லி என்ன பயன் என்றும் விதுரன் வருந்துகிறார்...
பாஞ்சாலி சபதம்- 2.1.3
முதல் பாக முடிவில், சூதில் பணையமாக நாட்டை வைத்து ஆடுமாறு சகுனி கூறியதைக் கண்டித்து அவையில் விதுரன் ஒருவரே பேசினார். இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில், விதுரனுக்கு துரியன் ஆவேச மொழியில் பதில் அளிக்கிறான். “ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்” வைத்து, தின்ற உப்பினுக்கே நாசம் தேடும் நனி கெட்ட விதுரன் என்று தனது சிறிய தந்தையும் அமைச்சருமான விதுரனை ஏசுகிறான் துரியன். இப்போதேனும் தருமன் சூதை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் விதி வலியதாயிற்றே?
பாஞ்சாலி சபதம் – 2.1.2
இரண்டாம் பாகம் எழுதத் தொடங்குவதற்கு முன் கலைமகளையும் மகாகவி பாரதி பிரார்த்திக்கிறார். கலைமகளின் பேரருள் இடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதே கவிஞரின் வேண்டுதல்...
பாஞ்சாலி சபதம்- 2.1.1
யாரை எங்கு வைக்க வேண்டும், எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என்பதெல்லாம் நமது முடிவல்ல; பராசக்தியின் லீலை. அதனைக் குறிப்பிட்டு, இரண்டாம் பாகம் எழுத ஆசி வேண்டுகிறார் மகாகவி பாரதி...
பாஞ்சாலி சபதம் – 1.2.11
நல்லமைச்சனுக்கு அழகு மன்னருக்கு வரும் இடர் உரைத்தல். அதன்படி, சூதாட்டத்தின் திசைவழி பாண்டவர்களை அழிப்பதே என்பதை உணர்ந்த அமைச்சரும் சித்தப்பனுமான விதுரன், மன்னர் திருதராஷ்டிரனுக்கு இதனை இத்துடன் நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறான். கெட்ட எண்ணம் கொண்ட துரியனால் குருகுலம் அழியப்போகிறது. அதைத் தடுக்காமல், “கேட்குங் காதும் இழந்துவிட்டாயோ?” என்கிறான். “நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம் - நேரு மென்று நினைத்திடல் வேண்டா” என்று அறுதியிட்டு உரைக்கிறான். இவை அனைத்தும் விழலுக்கு இறைந்த நீரென்று தெரிந்திருந்தும் கூட. சூதாட்டச் சருக்கம் இங்கே நிறைவெய்துகிறது....