சிவகளிப் பேரலை – 38

முற்பிறவிகளில் செய்த தவமாகிய மலையால் காட்சி தருகின்ற இறைவன் சிவபெருமான். அழிவில்லா அமுதமாக விளங்குபவர். புன்னகை தவழ்கின்ற வதனம் உடையவர். மங்களத்தைத் தருகின்றவர், சந்திரனைச் சூடியவர். நற்குணங்களுக்கு உறைவிடமாக இருப்பவர்.....

எனது முற்றத்தில் – 8

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு 25 வயது இளைஞர்  சென்னையிலிருந்து கொல்லம் சென்றார். மாணவர்களுக்கு புல்லாங்குழல் கற்றுக்கொடுப்பது அவர் முன் இருந்த பணி. ஒருநாள் இடைவேளையில் கண்ணப்ப நாயனார் கதையை உணர்ச்சிபூர்வமாக இந்த இளைஞர் சொன்னார்; அந்த கேரளப் பிள்ளைகள் இப்படியெல்லாம் சிவபக்தி உள்ளவர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டதாக அந்த இளைஞர் திரும்பி வந்தபின் என்னிடம் சொன்னார். எனக்குப்  பொறி தட்டியது.  நூலகங்களில் என்னதான் புத்தகங்கள் நிரம்பி வழியட்டுமே, மரத்தடியில் பிள்ளைகளை அமர வைத்து மனதார கதை சொன்னால் அதன் குணமே தனி. தமிழ் இளைஞர், மலையாளப் பிள்ளைகளை எப்படி அந்தக் கதையின் உணர்ச்சி வளாகத்திற்குள் கொண்டுவந்தார்? மெத்தப் படித்தவர்கள் தொட்டது வைத்ததற்கு எல்லாம் லாங்வேஜ் பிராப்ளம் என்று புலம்புவார்களே, அதெல்லாம் எங்கே போயிற்று இந்தச் சம்பவத்தில்? 

சிவகளிப் பேரலை – 37

பாற்கடலைக் கடந்தால் பல்வேறு பயன்களுக்காக பல்வேறு பொருட்கள் தோன்றுகின்றன. ஆனால், பக்தர்கள் வேதக்கடலைக் கடையும்போது இந்த அனைத்துப் பொருட்களின் பலன்களையும் உள்ளடக்கிய சிவபெருமானே காட்சி தந்து நம்மை ஆட்கொள்கிறார். ...

சிவகளிப் பேரலை – 36

இந்த உடலை வெறும் பஞ்சபூத சேர்க்கை என்று நினைக்கலாகாது.  இது, இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயம். “உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்” என்று திருமந்திரம் உரைப்பதை நினைத்துப் பார்ப்போம். ஆகையால், பேரிறையாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இந்த உடலைப் புனிதமாக்க வேண்டிய கடமையை இங்கே வலியுறுத்துகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். ....

சிவகளிப் பேரலை – 35

திருவாசகத்தில் மாணிக்கவாசகப் பெருமான், “வேண்டத்  தக்க தறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ, வேண்டும் அயன்மாற் கரியோய்நீ வேண்டி, என்னைப் பணிகொண்டாய், வேண்டி நீயாதருள் செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால், வேண்டும் பரிசொன்று உண்டென்னி லதுவும் உந்தன் விருப்பன்றே” என்று மொழிகிறார்....

சிவகளிப் பேரலை – 34

பிரபஞ்சம் அழிகின்ற பிரளய காலத்தில் அனைத்து ஜீவன்களும், பொருள்களும் அவற்றின் தோற்றுவாயான சிவ பரம்பொருளிடமே லயம் அடைகின்றன. மீண்டும் அவரிடமிருந்து ஒவ்வொன்றாய் வெளிப்படுகின்றன. இது ஒரு தொடர்கதை...

காற்றிடைச் சாளரம் – 9

கவிஞரின் எளிய கவிதை... அரிய பொருளுடன்...

சிவகளிப் பேரலை – 33

சிவபெருமானை பூஜிப்பது மிகவும் சுலபம். ஒரு வில்வ தளமோ அல்லது எருக்கம்பூவையோ எடுத்து சிவார்ப்பணம் என்று பூஜித்தாலே மிகப் பெரிய பலன்களைத் தரக்கூடியவர் சிவபெருமான். எல்லாம் வல்ல பெரியாண்டவன் எளிய வழிபாட்டுக்கே இறங்கிவரும்போது ஏன் வேறு பொய்த் தெய்வ வழிபாடுகளுக்காக அலட்டிக்கொள்ள வேண்டும்? என்று வினவுகிறார் ஆதிசங்கரர்...

சிவகளிப் பேரலை – 32

சிவபெருமான் நஞ்சுண்ட தியாக வரலாற்றை சுந்தரமூர்த்தி நாயனார், தனது தேவாரப் பாடல் ஒன்றில் இவ்விதம் புகழ்ந்துரைத்துள்ளார்: “கோல மால்வரை மத்தென நாட்டிக் கோளர வுசுற்றிக் கடைந்தெழுந்த, ஆல நஞ்சுண்டவர் மிக இரிய அமரர்கட் கருள்புரிவது கருதி, நீலம் ஆர்கடல் விடந்தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீசெய்த, சீலங் கண்டு நின்திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப்புன்கூர் உளானே”.

சிவகளிப் பேரலை- 31

உலகம் காக்க விடம் உண்ட சிவபெருமானின் தியாகத்தால் அவரைத் தமிழ்ச் சங்க இலக்கியங்கள், மணிமிடற்று அண்ணல் (குன்றம்பூதனாரின் பரிபாடல் பாட்டு), காரிஉண்டிக் கடவுள் (பெருங்கௌசிகனாரின் கூத்தராற்றுப்படை) என்று போற்றுகின்றன.

எனது முற்றத்தில் – 7

....வரலாற்றில் இடம் பெற்ற அந்த இருவரில் ஒருவர் பாரத மாதாவின் பரம பக்தர். மற்றவர் தமிழ்த் தாத்தா உ.வே.சா. தமிழ் பயிற்றுவித்த  தலை மாணாக்கர்; தேசியவாதியான தமிழறிஞர். வரலாற்றில் இடம்பெற்ற அந்த பெரியோர்களுடன்  சில நிமிடங்கள் பழகும் பேறு எனக்கு கிடைத்ததே!...

சிவகளிப் பேரலை- 30

சிவபெருமான் எங்கும் நிறைந்தவர். மிகச் சிறியோராகிய நாம் அவரை எவ்விதம் நிறைவாக பூஜிக்க முடியும்? சிவபெருமானுக்கு வஸ்திரம் உடுத்தி அழகுபார்க்க, கிரணங்களாகிய ஆயிரம் கரங்களைக் கொண்ட சூர்யபகவானா நாம்?....பிறைசூடிய பெருமானே, நான் மிகவும் எளியவனாயிற்றே? என்று பக்தன் மலைக்கிறான். ...

சிவகளிப் பேரலை – 29

சிவபெருமானின் பாதங்களைப் போற்றுகிறேன், அவரையே மனத்தில் நினைத்து தியானிக்கிறேன், அவரது திருவடியே கதியென்று சரணடைந்துவிட்டேன், அவரிடமே பிறவித் தளையில் இருந்து விடுதலையை வேண்டுகிறேன். அதற்கு வழிசெய்யும் வகையில், விண்ணில் உள்ள தேவர்கள் எல்லோரும் வியந்து போற்றுகின்ற தமது விழியருளை சிவபெருமான் என் மீது பாய்ச்சட்டும். அதன்மூலம் பேரின்பம் எனக்குள்ளே ஏற்படுமாறு செய்யட்டும்....

இன்றைய இந்தியாவின் முகங்கள் – 9

பாகிஸ்தான் எல்லையோரக் கிராமமொன்றில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த சோதி, போரின் காரணமாக தில்லிக்கு குடிபெயர்ந்தவர்களில் ஒருவர். வரட்டி அடுப்பில் சுண்ட சுண்டக் காய்ச்சிய பாலைக் குடித்த நிலை மாறி, டில்லிக்கு வந்தபிறகு எவர்சில்வர் பாத்திரத்தில் பால் வாங்கிய நிலையை நினைவுகூரும் இவர், பின்னர் அதுவும் மாறி இரண்டு கி.மீ. நடந்து போய் வரிசையில் நின்று பால் வாங்கியதையும் அதுவும் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்பதையும் நினைவு கூர்கிறார். இவர் இன்று உலக பால் உற்பத்தி ஃபெடரேஷனின்  இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். பால் உற்பத்தி, பாதுகாப்பு, விநியோகம், மதிப்புக் கூட்டுதல், விற்பனை என அடிமட்டத்திலிருந்து அனைத்தையும் அனுபவத்தில் அறிந்தவர் இவர்.....

சிவகளிப் பேரலை- 28

எங்கேயோ தேடி அலைந்து கொண்டிருக்காமல், உள்ளத்தை சிவபெருமானுக்குக் காணிக்கையாக்கி, அவரது நினைப்பிலே தோய்ந்து இங்கேயே ஜீவன் முக்தியை, அமர நிலையை எய்திவிடலாம். மகாகவி பாரதியார், “மண்ணில் வானம் காணலாம்”, “எல்லோரும் அமரநிலை எய்தலாம்” என்றெல்லாம் கூறியதன்  பொருள் இதுவே....