கீதையைப் படித்தது, மற்ற நண்பர்களிடையே என்ன மாறுதலை உண்டாக்கியது என்பதை அவர்களே கூற முடியும். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், எனக்கு வழிகாட்டும் தவறாத் துணையாக கீதை ஆகிவிட்டது. சந்தேகம் தோன்றும் போதெல்லாம் புரட்டிப் பார்த்துக்கொள்ளும் அகராதியைப் போல அது எனக்கு ஆயிற்று. தெரியாத ஆங்கிலச் சொற்களின் பொருளை அறிவதற்கு நான் ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பதுபோல், எனக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கும் சோதனைகளுக்கும் உடனே பரிகாரங்களைக் கண்டுகொள்ள இந்த ஒழுக்க நெறி அகராதியைப் புரட்டுவேன். ....
Author: vamumurali
எனது முற்றத்தில்- 18
அரசியல்/ விளையாட்டு/ சினிமா பிரபலங்களுக்கு ராணுவ கௌரவம் அளிப்பது ஒரு நோக்கத்துடன் தான். டெண்டுல்கர், மோகன்லால், சச்சின் பைலட் போன்றவர்கள் பாரத இளைஞர்கள் மனதில் பதிந்த நட்சத்திரங்கள். எனவே அவர்களுக்கு அளிக்கப்படும் ராணுவ கௌரவம் இளைஞர்கள் மத்தியில் ராணுவம் பற்றிய மதிப்பை உயர்த்தும்.....
திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்
மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின நிறவெறிக்கும் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடினார் என்று தெரியும். நமது இதே தளத்திலேயே ‘சத்திய சோதனை’ வெளியாகிறது. அதில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் பட்ட கஷ்டங்கள் பதிவாகி இருக்கின்றன. அந்தக் கொடுமைகளை ஓர் இதழாளராக வாசகர் முன்பு செய்தியாக வைத்து அவர்களுக்கு உணர்வூட்டுகிறார் மகாகவி பாரதி...
விடுதலைப் போரில் அரவிந்தர்- 5
”வீழ்ச்சி அடைந்த இந்த இனத்தை தூக்கி நிறுத்தும் வல்லமை எனக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அது உடல் வலிமை அல்ல, அறிவு வல்லமை. ஷத்திரிய சக்தி மட்டுமே வல்லமை அல்ல. பிராமண சக்தியும் உள்ளது. அது அறிவை அடிப்படையாகக் கொண்டது. இது எனக்கு புதியதாக ஏற்பட்ட உணர்வு அல்ல. இது நான் பிறக்கும்போதே என் எலும்பு மஜ்ஜையில் உள்ள உணர்வு. இறைவன் இந்த மாபெரும் விஷயத்தை சாதிப்பதற்காகவே என்னை உலகிற்கு அனுப்பியுள்ளார். எனக்கு பதினான்கு வயதிருக்கும்போது இந்த விதை முளைக்கத் தொடங்கியது. பதினெட்டு வயதில் அடித்தளம் அசைக்க முடியாதபடி உறுதிப்பட்டது”... அரவிந்தர் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தின் வாசகங்கள் இவை....
பாலும் பழமும் கைகளிலேந்தி…
கட்டிய மனைவி உடல்நலம் குன்றி இருக்கும்போது அவளைக் கண்ணும் கருத்துமாக காக்கும் மருத்துவர் கணவனாக சிவாஜி கணேசன் நடித்த அற்புதமான திரைப்படம் ‘பாலும் பழமும்’. இன்றைய தமிழ்த் திரையுலகம் பலநூறு முறை பார்க்க வேண்டிய (இம்போசிஷன்) திரைப்படம் அது. அப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கவியரசரின் காவிய வரிகள் இவை...
மகாவித்துவான் சரித்திரம்- 1(13)
சூதசங்கிதையென்பது ஸ்கந்த புராணத்திலுள்ள ஆறு சங்கிதைகளில் ஒன்று. சிவமான்மிய காண்டம், ஞானயோக காண்டம், முக்தி காண்டம், எக்கியவைபவ காண்டமென்னும் நான்கு பிரிவுகளை உடையது; சிவபெருமானுடைய பலவகைப் பெருமைகளையும், பல தலவரலாறுகளையும், தீர்த்த வரலாறுகளையும், பல உபநிஷத்துக்களின் கருத்தையும் விளக்கிக் கூறுவது. சிவபிரான் புகழைப் பாடிப் பாடிச் சுவைகண்ட பிள்ளையவர்களுடைய அன்புப் பெருக்கு, சூதசங்கிதையில் நன்கு வெளிப்படும். தலவரலாறுகளைக் கூறுவதிலும், அவற்றைப் பலவகையாகச் செய்யுட்களிற் பொருத்தி அணி செய்வதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். ஆதலின் இந்நூலில் தலவரலாறுகள் கூறப்படும் இடங்களில் அத்தலப் பெயர்களைத் திரிபிலமைத்தல், அத்தலவிசேடங்களைச் சுருக்கி ஒரு செய்யுளிற் கூறல், அத் தலப்பெயர்க்கு ஏற்ற சந்தத்தை எடுத்தாளல் முதலியன காணப்படும்.....
ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்
அமெரிக்க நாட்டில் என்ன நடக்கிறது? அங்குள்ள அதிபர் ரூஸ்வெல்ட் (1906) அந்நாட்டு மக்களுக்கு செய்யும் கடமை என்ன? (அவர் தேச ஜனங்களின் மனதிற்கு வருத்த முண்டாகுமென்பதற்காக பயந்து உண்மைகளை மறைத்துக் கூறும் வழக்கமுடையவரல்ல). அந்நாட்டில் சில மாகாணங்களில் ஜப்பான் தேசத்தாருக்கு எதிரான மனநிலை இருப்பது கூடாது என்னும் அதிபரின் மனநிலை,... என உலக அரசியலை நம்மப்வர்க்கு வழங்கத் துடிக்கும் மகாகவி பாரதியின் இதழியல் ஆர்வம் இக்கட்டுரையில் வெளிப்படுகிறது...
பாரதி- அறுபத்தாறு- (46-48)
முந்தைய பாடலில் பெண் விடுதலை குறித்துப் பாடிய மகாகவி பாரதி, இந்த மூன்று பாடல்களில், பெண் என்பவள் தாய், தாரம், தமக்கை, தங்கை, மகள் எனப் பல வடிவில் உடனுறைபவள் என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஆண்களால் பெண்மை அடிமை யுற்றால் மக்களெலாம் அடிமையுறல் வியப்படைய வேண்டியதில்லை என்றும் சொல்கிறார்....
சென்னை ஹைகோர்ட்
சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி பதவிக்கான காலியிடம் ஒன்றில் தகுதி வாய்ந்த இந்தியர் ஒருவரை (ஸ்ரீ சங்கரன் நாயர்) நியமிக்க மறுக்கும் ஆங்கிலேய அரசின் பட்சபாதத்தை தனது தர்க்கத் திறனால் கேள்விக்கு உள்ளாக்கும் மகாகவி பாரதியின் இதழியல் கடமையுணர்வு இக்கட்டுரையில் வெளிப்படுகிறது...
மகாவித்துவான் சரித்திரம்- 1(12)
ஒருநாள் சுந்தரம்பிள்ளை பிள்ளையவர்களிடம் வந்து, “இது சிவதருமோத்திரம்” என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். இவர், “இப்புத்தகம் எங்கே கிடைத்ததப்பா?” என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவரை நோக்கி, “உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? வீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாது போயிற்றே! ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?” என்று வினவினர். சுந்தரம்பிள்ளை, “அந்த விஷயத்தைப் பின்பு சொல்லுவேன். இந்தப் புஸ்தக முழுவதையும் ஒரு வாரத்திற்குள் பிரதிசெய்துகொண்டு என்னிடம் கொடுத்து விடக்கூடுமானால் மிகவும் நலமாயிருக்கும்; பிரதி செய்வது ஒருவருக்கும் தெரிய வேண்டாம்” என்றார். ...
புல்லர் செய்யும் மோசம்
புல்லர் என்ற ஆங்கிலேய அதிகாரி தனது நியாயமற்ற நடவடிக்கைகளால் பெங்கால் மாகாண மக்களிடம் கெட்ட பெயர் பெற்றிருந்த நிலையில், அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி செய்தி வெளியிட்டார். அது நடைபெறாமல் போன நிலையில், மறுவாரம் வெளியான செய்தி இது. இச்செய்தியில் உள்ள கேலியைக் கவனியுங்கள்!
விடுதலைப் போரில் அரவிந்தர்- 4
சமஸ்கிருதத்தை அவரே சுயமாக கற்கத் தொடங்கினார். அவர் இங்கிலாந்தில் இருந்தபோது ஐசிஎஸ் படிப்புக்காக கிரேக்க, லத்தீன் மொழிகளை அப்படித்தானே கற்றார்? அதேபோல மற்றொரு செம்மொழியான சம்ஸ்கிருதத்தையும் தானே முயன்று கற்றார். எந்த அளவுக்கு என்றால், வேதத்தைப் படிப்பதுடன், அந்த புராதன பிரதியை தனது யோக கண்ணோட்டத்தில் புதுவிதமாக விளக்குமளவுக்கு அதில் வல்லமை பெற்றார். மொழிகளைக் கற்றுக் கொள்வதில் அரவிந்தருக்கு இருந்த ஆர்வம் காரணமாக குஜராத்தி, மராட்டி, வங்க மொழி ஆகியவற்றில் திறம் பெற்றவரானார்....
சிவகளிப் பேரலை- நிறைவு
இந்த ‘சிவானந்தலஹரீ’ நூல், நமக்கு இம்மையிலும் மறுமையிலும் ஏற்படும் அனைத்துவித சங்கடங்களையும் போக்குகின்ற மேலான சத்தியத்தை, நன்மையைப் போதிக்கின்ற பொக்கிஷமாகும். இதனை என்னால் இயன்றவரையில் தித்திக்கும் தீந்தமிழில் செய்யுளாக, கவிதையாக மொழிமாற்றித் தந்துள்ளேன். இதனைப் படிப்பவர்க்கும், கேட்பவர்க்கும், அனைவருக்குமே தீமைகள் எல்லாம் நீங்கிடுமாறு அந்தப் பரமேஸ்வரன் அருளட்டும்.....
பாரதி- அறுபத்தாறு -45
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால், மனையாளும் தெய்வமன்றோ?- என்ற தார்மிகக் கேள்வியை முன்வைக்கும் பாடல் இது....
சிவகளிப் பேரலை- 100
எல்லாம் வல்ல இறைவனாகிய சிவபெருமானின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அதனை முழுமையாகச் சொல்வதற்கு ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனாலும் இயலாது என்பது ஆன்றோர் வாக்கு. ஆகையினால், எம்மால் முழுமையாகக்கூற இயலாது காரணத்தால், இந்த நூலுக்கு ஒரு நிறைவு வேண்டி, சிவபெருமானே, இதனோடு உம்மைப் பற்றிய துதிகளை நிறைவு செய்து கொள்கிறேன் என்று கூறுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.....