நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…

-கவியரசு கண்ணதாசன்

திரைக்கதையையே கவிதையாக்கி, சோககீதம் இசைக்கிறார் கவியரசர். நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்தத் திரைக்கவிதையின் பரிமாணம் புரியும்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை!
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!
தொடர்ந்த கதை முடிவதில்லை, மனிதன் வீட்டினிலே!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை!

ஆயிரம் வாசல் இதயம்…
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்!
யாரோ வருவார் யாரோ இருப்பார்,
வருவதும் போவதும் தெரியாது!
ஆயிரம் வாசல் இதயம்…
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்!
யாரோ வருவார் யாரோ இருப்பார்,
வருவதும் போவதும் தெரியாது!
ஒருவர் மட்டும் குடியிருந்தால்
துன்பம் ஏதுமில்லை!
ஒன்றிருக்க ஒன்று வந்தால்
என்றும் அமைதியில்லை!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை!

எங்கே வாழ்க்கை தொடங்கும்,
அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்,
என்பது யாருக்கும் தெரியாது!
எங்கே வாழ்க்கை தொடங்கும்,
அது எங்கே எவ்விதம் முடியும்?
இதுதான் பாதை இதுதான் பயணம்,
என்பது யாருக்கும் தெரியாது!
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்துவிடும்!
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்!

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை!
நடந்ததையே நினைத்திருந்தால், அமைதி என்றுமில்லை!

திரைப்படம்: நெஞ்சில் ஒரு ஆலயம் (1962)
இசை: விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடகர்: பி.பி. ஸ்ரீனிவாஸ்

$$$

Leave a comment