பாஞ்சாலி சபதம் – 2.1.7

-மகாகவி பாரதி

துரியனின் ஆசை வார்த்தையை ஏற்று, தம்பியரில் இளையவனான சகாதேவனைப் பணயம் வைத்து ஆடிய தருமன் மீண்டும் தோற்கிறான். “தீய சகுனி கெலித்திட்டான்”.

இரண்டாம் பாகம்

2.1. அடிமைச் சருக்கம்

2.1..7. சகாதேவனைப் பந்தயம் வைத்தல்

வேறு

எப்பொழு தும்பிர மத்திலே – சிந்தை
      ஏற்றி உலகமொ ராடல்போல் – எண்ணித்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும் – வகை
      தானுணர்ந் தான்ஸக தேவனாம் – எங்கும்
ஒப்பில் புலவனை ஆட்டத்தில் – வைத்தல்
      உன்னித் தருமன் பணயமென்று – அங்குச்
செப்பினன் காயை உருட்டினார் – அங்குத்
      தீய சகுனி கெலித்திட்டான். 25

$$$

Leave a comment