நந்தனார் சரிதம் – 3

“பழகிக் கொண்டவர்களை விடுங்கள். இப்படிப் பழக்கியவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். எந்த மன்னரேனும் ஏதேனும் ஒரு இழிதொழிலையேனும் மாற்ற முயற்சி எடுத்தாரா? எந்த ஐயரேனும் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருத்துவரின் கஷ்டத்தைப் போக்கினாரா? வாந்தியையும் மலத்தையும் ரத்தத்தையும் நிணத்தையும் கையால் தொட்டு சுத்தம் செய்தாக வேண்டிய கொடுமையில் இருந்து விடுவித்தாரா? எந்த வணிகராவது தீட்டுத் துணி துவைக்கும் வண்ணாருக்கு அதில் இருந்து தப்பிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தாரா? எந்தப் பண்ணையாராவது தொழில் குலத்தினராவது இறந்த அழுகிய விலங்கை அப்புறப்படுத்த வழி கண்டுபிடித்துக் கொடுத்தனரா… நம்மவர்களுக்குக் கால காலமாக இதைத் தானே செய்துவர வேண்டியிருந்தது? சின்னஞ்சிறு வயதிலேயே இந்த இழிவுக்குப் பழக்கப்படும் குழந்தைகள் அதைப் பழகிக் கொண்டு வாழ்ந்து மடிவதென்பது எவ்வளவு கேவலம்… கொடுமை. யாரேனும் ஒருவர் இதை மாற்றியிருக்கலாமே…?”

நந்தனார் சரிதம் – 2

“ஐயா… நீவிர் எத்தனைதான் குளம் வெட்டினாலும், அதில் நீவிர் குளிக்க முடியாது. என்னதான் கல் சுமந்து கோயில் கட்டினாலும் அதில் நீவிர் கால் பதிக்க முடியாது. குறுக்கே நிற்கும் நந்திகள் உம்மை எங்குமே கும்பிட விடாது.” “ஆமாம்… இந்தப் பிறவியில் அது முடியாது. அதனாலென்ன?”

நந்தனார் சரிதம் – 1

திருநாளைப்போவார் புராணத்தை புதிய நடையில் வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன். கற்பனை மிகுந்த இனிய வர்ணனைகளும், நீதி உணர்ச்சி மிகுந்த மனதின் தர்க்கங்களும் நிறைந்த இந்த குறும்புதினம், சமூக ஒருமைப்பாட்டுக்கான புதிய முயற்சி…

ஒரு சரித்திரத் தவறு!

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் ‘பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை’ நூலை தமிழாக்கம் செய்தவர் எழுத்தாளர் திரு. பிஆர்.மகாதேவன். அவரது சீரிய சிந்தனை மிளிரும் சிறிய கட்டுரை இது....

இரு சங்கி கவிதைகள்

‘சங்கி’ யார் என்பது குறித்து சமூக ஊடகங்களில் தீவிரமான பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. அது ஏதோ கெட்ட வார்த்தை போல தமிழகத்தில் சிலர் ஏளனமாக எழுதுகிறார்கள். அவர்களுக்கு பதில் அளிக்கும், இரு சங்கிகளின் கவிதைகள் இவை….

புத்தகக் காட்சியில்…

சென்னை புத்தகக் காட்சி நாளை (ஜன. 3) தொடங்கி, ஜனவரி 21 வரை நடைபெறுகிறது. தொடர்ந்து புத்தகக் காட்சிகளைப் பார்த்து வரும் இது குறித்த எழுத்தாளரின் தனிப்பட்ட பார்வை இது...

வாழும் சனாதனம்!- 5

அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டதை எதிர்த்து நாடே கொந்தளித்திருக்கிறது. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடர்கின்றன... இது ஐந்தாவது பதிவு...

வாழும் சனாதனம்!- 1

“ஞாயிற்றை சங்கிலியால் அளக்கலாமோ?” என்று கேட்பார் மகாகவி பாரதி. “சூரியனைப் பார்த்து நாய் குலைப்பதால் சூரியனுக்கு எந்தக் கெடுதியும் இல்லை” என்பது பழமொழி. அண்மையில் பாரத மண்ணின் வேரான சனாதன தர்மம் தமிழகத்தில் சில தற்குறிகளால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு, இழிவு செய்யப்பட்டபோது, இந்த இரண்டும் தான் நினைவுக்கு வந்தன. இத்தருணத்தில் சனாதனம் என்னும் வாழையடி வாழையின் சிறப்புகளைப் பதிவு செய்வது நமது கடமை; சனாதனம் குறித்த தார்மிக குரல்களின் இணையப் பதிவுகள், இங்கே தொடங்குகின்றன...

ஒற்றைக் கொம்பனும் தாமரைத் தடாகமும்

இந்தப் பரந்த உலகம் மானிடனுக்கானது மட்டுமல்ல என்பதை எப்போது உணரப் போகிறோம்? ஒற்றைக் கொம்பன்கள் மின்வேலியில் சிக்கி உயிரை இழப்பதும், மயக்க ஊசியால் மரணிப்பதும் எதைக் காட்டுகின்றன, நமது மனிதநேயத்தையா? எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் கவிதை, ஒற்றைக் கொம்பன்களுக்கானது மட்டுமல்ல....

ஜாம்பிகள் – ஜாக்கிரதை!

அற்புதமான உருவகக் கவிதை. எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் இதயமெங்கும் வீசும் சத்திய அனல் கவிதையில் தெறிக்கிறது. ‘ஜாம்பி’ என்றால் என்ன என்று புரியவில்லையா? ‘ஜாம்பி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘மதவெறி’ என்று போட்டுக் கொள்ளுங்கள்… (எந்த மதவெறி என்று சொல்லி ஜாம்பிக் காவலர்களிடம் கடி வாங்க நான் தயாரில்லை). அப்போது, நீங்கள் வாழும் உலகின் தரையடி மெள்ள உங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக் கொண்டிருப்பது புரியும்.

மன்னித்துவிடு ப்ரிய சகோதரியே!

அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால், தவறான அறுவைச் சிகிச்சையால் காலை இழந்து, உயிரையும் இழந்த, சென்னையைச் சார்ந்த இளம் கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியாவுக்கு (17) நமது கண்ணீர் அஞ்சலி...

சுடரொளி தொடரும்! (கவிதை)

எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதியுள்ள உருவகக் கவிதை இது. சுடரொளி தொடர இறைவனைப் பிரார்த்திப்போம்! சிறு சுடரொளி மட்டுமல்ல, அக்கினிக்குஞ்சு இது.

பாகிஸ்தான்: இந்தியப் பிரிவினை- நூல் அறிமுகம்

டாக்டர் அம்பேத்கர் 1945-ல், பிரிவினைக்கு முன்பாக எழுதிய புத்தகம் THOUGHTS ON PAKISTAN. அதன் தமிழாக்கம், கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி உள்ளது. மொழிபெயர்த்தவர் பி.ஆர்.மகாதேவன். அரிய சரித்திர ஆவணம் இந்நூல்.

அழகிய போராட்டம் (பகுதி- 8)

ஒத்துழையாமையும் சட்டமறுப்பும், ஜனநாயகமும் சுதந்தர நாடும் நன்கு செயல்பட உதவும் விஷயங்களே. இன்னும் சொல்லப்போனால் அவை இறுக்கமான சட்ட அமைப்புகளைவிட மிகவும் முக்கியமானவை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநில அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் அல்லது இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்குள் நடக்கும் மட்டுப்பட்ட விவாதங்கள், பரிசீலனைகள் ஆகியவற்றைவிட அமைதிப் போராட்டங்கள் மிகவும் அவசியமானவையே. சர்வாதிகாரம், அநீதி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இப்படியான அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் உண்மையில் அரசையும் மக்கள் சமூகங்களையும் காப்பாற்றக் கூடியவர்களே. அவர்கள் மட்டும் இல்லையென்றால், சமூகமானது வெறும் இயதிரம் போன்ற ஒன்றாகவே முடங்கிப் போகும். அல்லது சர்வாதிகாரப் போக்கினால் முழுமையான அராஜகம் மற்றும் ஆயுதப் போராட்டம் போல முடியும்.... (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் அத்தியாயம் 4-இன் நிறைவுப் பகுதி)....

அழகிய போராட்டம் (பகுதி- 7)

தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒத்துழையாமை,  சட்ட மறுப்பு போன்ற அமைதியான வழிகளில் போராடுவது என்பது இந்தியப் பாரம்பரியத்தின்  ஓர் அங்கமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.  ....“இந்திய தேசம் முழுவதிலும் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்  அமைதி வழியிலான எதிர்ப்பைக் காட்டுவது தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது.   நமது ஆட்சியாளர்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினால் நாம் அவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பது உண்டு” என்ற காந்திஜியின் கூற்றையும் அது உறுதிப்படுத்துகிறது.  (தரம்பாலின் ‘அழகிய போராட்டம்’ நூலின் 4வது அத்தியாயத்தின் துவக்கப் பகுதி)...