இந்நூலில் 15 அத்தியாயங்கள் இதில் உள்ளன. முதல் அத்தியாயம் முருக வழிபாடு கௌமார சமயமாக - முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுவது - தனித்து விளங்கியதையும் பின்னர் பகவத் பாதரால் அது இன்றைய ஹிந்து மதத்தின் ஒரு அங்கமாக ஆனதையும் சொல்கிறது. மற்ற அத்தியாயங்கள் 14 முருக பக்தர்களைப் பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்களையும் கூறுகின்றன.
Category: நூல்வெளி
அர்ச்சகக்குடி காத்த ஆசானின் வரலாறு
ஆலய வழிபாட்டின் அருமை பெருமை உணர்ந்தவர்களுக்கு அர்ச்சகக் குடியின் சிரமங்கள் தெரியும்; அர்ச்சகர்களுக்கு அவர்களும் உடனிருந்து உதவுவார்கள். அதற்கு பழனி ஈசான சிவாசாரியார் போன்றவர்களின் சரிதங்கள் இன்றைய தலைமுறைக்கு சொல்லப்பட வேண்டும். இவரைப் போன்றவர்களின் அரும் முயற்சியால்தான் அர்ச்சகக் குடிகளுக்குத் தேவையான சிவாகமப் பயிற்சியும் அதற்குத் தேவையான அச்சிட்ட நூல்களும் வாழையடி வாழையாகத் தொடர்கின்றன.
ரத்தத்தில் முளைத்த என் தேசம் – ஒரு பார்வை
வரலாற்றை மறந்தவனும் அறியாதவனும் நிகழ்காலத்தில் தவறிழைத்து எதிர்காலத்தை இழந்து விடுகிறார்கள். எனவேதான் வரலாறு முக்கியமானதாகிறது. ஆனால், நாம் பயிலும் வரலாறு உண்மையானதா? வரலாறு என்ற பெயரில் நமது கல்வி நிறுவனங்களில் புகுத்தப்படும் பல பொய்மைகளைத் தோலுரிக்கிறது, திரு. பி.பிரகாஷ் எழுதிய ‘ரத்தத்தில் முளைத்த என் தேசம்’ என்ற இந்த நூல். இதுகுறித்து எழுத்தாளர் திரு. ஆமருவி தேவநாதன் தனது வலைப்பக்கத்தில் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாகிறது....
பாரதியின் கருத்துப்படங்கள்- அற்புதமான அரிய ஆவணம்
மகாகவி பாரதியின் படைப்புகளில் மிகவும் முக்கியமான தொகுப்பு, பாரதியின் கருத்துப் படங்கள் என்ற இந்த அற்புதமான தொகுப்பாகும். ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி அறிமுகம் செய்த கருத்துப்படங்கள் குறித்த விவரங்களுடன், அரிதின் முயன்று சேகரித்த கருத்துப்படங்களைத் தொகுத்து நூலாக்கி இருக்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.
கருணைமிகு திருக்கருவையம்பதி- இனிய தொகுப்பு
கரிவலம்வந்தநல்லூரின் தலப்பெருமைகள், இத்தலம் குறித்து எழுதப்பட்ட இலக்கியங்கள் குறித்துத் தொகுக்கப்பட்டுள்ள இனிய நூல், ‘கருணைமிகு திருக்கருவையம்பதி’. திருக்கருவையம்பதி என்பது கரிவலம்வந்தநல்லூரின் இலக்கியப் பெயர். தங்கள் ஊர் சிவன் கோயிலின் பாரம்பரிய வரலாற்றையும் தற்போதைய நடைமுறைகளையும் சீராகத் தொகுத்து அளித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம்- 3
சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது இறுதிப் பகுதி)…
சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம் -2
சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது இரண்டாம் பகுதி)…
சுவாமி சகஜானந்தரின் வாழ்க்கைப் போராட்டம் -1
சுவாமி சகஜானந்த சரஸ்வதியின் ‘என் வாழ்க்கைப் போராட்டம்’ நூலை முன்வைத்து, நூல் அறிமுகமாக மட்டுமல்லாது, அக்கால சமூக வரலாற்றையும், மூன்று பகுதிகள் கொண்ட இத்தொடரில் எழுதி இருக்கிறார், திரு. திருநின்றவூர் ரவிகுமார்…. (இது முதல் பகுதி)…
ஆத்ம ஞான ரத்தினமும் சில சிந்தனைகளும்…
அன்றாட வாழ்வில் நமக்கு வழிகாட்டக் கூடிய, துணை நிற்கக்கூடிய வகையில், சின்ன சின்னதாக சுவாமிஜியின் 1004 உபதேச மொழிகளைத் தேர்ந்தெடுத்து, தொகுத்து வெளியிட்டுள்ளார் சுப்பிரமணிய சிவா. நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1922இல் இந்த நூலைப் பிரசுரித்தவர் சை.ந.பாலசுந்தரம் என்பவர். ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புஸ்தகசாலை, பார்க் டவுன், சென்னையில் அச்சிடப்பட்டு வெளியாகி உள்ளது.
முகநூலில் இரு நூல் பதிவுகள்
‘பொருள் புதிது’ தளத்தின் இனிய விளைவாக வெளியான இரு நூல்கள் குறித்து முகநூலில் அறிமுகம் செய்திருக்கிறார் அன்பு நண்பர் திரு. ஜடாயு. அவருக்கு நமது நன்றி!
அயோத்தி கோயில்- மேலும் இரு நூல்கள்
அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் தொடர்பாக அண்மையில் வெளிவந்துள்ள மேலும் இரு நூல்களை அறிமுகம் செய்கிறார் எழுத்தாளர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
ஸ்ரீ ராம ஜென்மபூமி – வெற்றி வரலாறு: நூல் அறிமுகம்
ராமருக்கு ஏன் இந்த மகத்துவம், தமிழகத்தில் ராமாயணத்தின் தாக்கம் என்று தொடங்கும் இந்த நூலில், அயோத்தி ராமர் பிறந்த இடத்தில் பாபர் காலத்தில் நடந்தது தொடங்கி இப்பொழுது அமைந்துள்ள பிரம்மாண்டமான கோயிலின் சிறப்பு வரை தொகுக்கப்பட்டுள்ளது.
சநாதன தர்மம்: ஒரு நுண்ணிய பார்வை
மேலாண்மைத் துறையில் பல நூல்களை எழுதியுள்ள பேரா. பா.மஹாதேவன், இந்திய கலாச்சாரம், சநாதன தர்மம், பகவத் கீதை போன்றவை குறித்து ஆராய்ச்சி செய்து, குறிப்பிடத்தக்க நூல்களை எழுதி இருக்கிறார். சநாதனம் குறித்த இவரது அறிமுக நூல், படிப்படியாக, சநாதனத்தின் அம்சங்களையும் சிறப்புகளையும் விளக்குவதுடன், அது குறித்த விமர்சனங்களுக்குத் தெளிவான பதில்களையும் அளிக்கிறது.
பாரதி கருவூலத்தின் அரிய வைரம்
39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த ஓர் அதியற்புத உயர் மானுடர் மகாகவி பாரதி. அதுவும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராளியாக இருந்ததால் அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகி, கடுமையான பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆட்பட்டு, வாழ்க்கையுடன் போராடியே குறுகிய காலத்தில் அமரரானவர் அவர். அவரது போராட்ட வாழ்வுக்கு சான்று பகர்பவையாக அவரது கடிதங்கள் விளங்குகின்றன. இந்நூலில் 23 கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. காசியில் இருந்து தனது இளம் மனைவி செல்லம்மாளுக்கு 1901இல் பாரதி எழுதிய கடிதம், ஒரு சாமானியனாக வாழத் துடித்த ஒரு சுதந்திரப் பறவையை இனம் காட்டுகிறது.
தமிழ் இலக்கியத்தில் செங்கோல்: நூல் அறிமுகம்
தமிழர்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய அற்புதமான தமிழ் இலக்கிய ஞானக் கருவூலங்களிலிருந்து அரிய சான்றுகளை எடுத்து, இனிய மாலை போலத் தொடுத்திருக்கிறார் நூலாசிரியர் திரு. சேக்கிழான். இந்நூல் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், இடையறாத வன்மையையும், பரந்து விரிந்த தன்மையையும், செங்கோலின் நன்மையையும் வெளிப்படுத்துகிறது.