முன்னோடி பெண் தொழில் முனைவோரும், நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான செல்வி காம்கேர் கே.புவனேஸ்வரி, சென்னையில் உள்ள, மென்பொருள் தயாரிக்கும் காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் இயக்குநருமாவார். அவர் எழுதி, காம்கேர் சாஃப்ட்வேர் நிறுவனம் வெளியிட்டுள்ள ‘இலக்கில் கரையுங்கள்’ என்ற இ-புத்தகத்தில் (EBook) இருந்து சில பகுதிகள் இங்கே நமக்காக...
Category: சிந்தனைக் களம்
கம்பன் பாடிய ‘குறள்’
பெங்களூரில் வசிக்கும் தகவல் தொழில்நுட்ப நிபுணரான திரு. ஜடாயு, இலக்கிய ஆர்வலர்; ‘தமிழ் ஹிந்து’ இணையதளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர்; கம்பனில் தோய்ந்தவர். வாமனாவதாரம் குறித்த கம்ப ராமாயணச் செய்யுள்களை விளக்கி, தமிழ் ஹிந்து இணையதளத்தில் இவர் எழுதிய அற்புதமான ஆய்வுக் கட்டுரை இங்கே...
மகாத்மா காந்தியும் ஹிந்து தருமமும்
தமிழகத்தின் சமகால பாரதீய சிந்தனையாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத்தக்கவர்; ஆழி பெரிது, ஹிந்துத்துவம்- ஓர் எளிய அறிமுகம், உடையும் இந்தியா, நம்பக்கூடாத கடவுள்- உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்; சமரசமில்லாமல் உண்மைக்குக் குரல் கொடுப்பவர். ‘ஸ்வராஜ்யா’ பத்திரிகையின் ஆசிரியர் குழு உறுப்பினராக இவர், தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதிய கட்டுரை இங்கு மீள்பதிவாகிறது...
சுடரொளி தொடரும்! (கவிதை)
எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவன் எழுதியுள்ள உருவகக் கவிதை இது. சுடரொளி தொடர இறைவனைப் பிரார்த்திப்போம்! சிறு சுடரொளி மட்டுமல்ல, அக்கினிக்குஞ்சு இது.
பொழில்வாய்ச்சியின் எழில் கோயில்
சிற்பக்கலை ஆர்வலரும், கானுயிர் புகைப்படக் கலைஞருமான, பொள்ளாச்சியைச் சார்ந்த திரு. மது.ஜெகதீஷ், கணினிப் பொறியாளரும் கூட. நாடு முழுவதும் உள்ள தொன்மையான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை புகைப்படத்தில் பதிவு செய்யும் அரும்பணி ஆற்றிவரும் இவரது சிற்பக் கட்டுரை இங்கே....
காலந்தோறும் பாரதி
மாணவர்களுக்கு பள்ளிப்பாடம் மட்டும் கற்பிக்காமல், புத்தகத்துக்கு வெளியில் உள்ள ஞானத்தையும் கற்பிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இயங்கும் அரசுப் பள்ளி ஆசிரியரான திரு. ஜி.இ.பச்சையப்பன், சமூக ஊடகத்தில் தீவிரமாகச் செயலாற்றுபவர். மகாகவி பாரதி குறித்த இவரது கட்டுரை இங்கே…
தமிழர்கள் ஹிந்துக்கள் அல்லரா?
முதலில் ஒரு விஷயத்தை தெளிவு செய்துகொள்வோம்: திராவிடம் என்பது இனமல்ல. தமிழ் என்பதைக் குறிக்கும் சம்ஸ்கிருதச் சொல்தான் அது. திராவிடம் தனி இனம் என்றால் அதனைக் குறிப்பிடும் சங்க இலக்கியம் எது?
இது 1962 அல்ல, 2022!
இயக்குநர் மணிரத்னம் இயக்கி வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜசோழனை இந்து அடையாளங்களுடன் காட்டி விட்டதாக, தமிழகத்தில் சிலர் வயிறெரிகிறார்கள். அவர்களில் சிலர் ஒருபடி மேலாகச் சென்று இந்து என்ற மதமே இருந்ததில்லை என்று விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்கள் வாங்கிய காசுக்குக் கூவுகிறார்கள்; தொலையட்டும். எனினும், விழிப்புணர்வுள்ள சமய அறிஞர்களும், ஹிந்து செயல்வீரர்களும் சமூக ஊடகங்களில் தங்கள் வாதங்களால் இந்த அறிவிலிகளுக்கு சம்மட்டி அடி கொடுத்து, பந்தாடி வருகிறார்கள்; இது 1962 அல்ல, 2022 என்பதை அந்த மண்டூகங்களின் மர மண்டையில் ஆணி அடித்தது போலப் புரிய வைக்கிறார்கள். அவற்றில் இரு பதிவுகள் இங்கே…
எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…
ஆறாம் வகுப்பு படித்தபோது மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ துணைப்பாட நூலாக இருந்தது. அதை இரண்டே நாளில் படித்து முடித்துவிட்டேன். தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மோகன்தாஸின் கதையைப் படித்தபோது என்னை அறியாமல் கண்ணீர் உகுத்தேன். காந்தி என்பவர் சாதாரணமானவர் அல்ல என்று மனதில் பதிந்தது. ஆனால், தனது பலவீனங்களையும் அவர் சொல்லிச் செல்வது அந்த வயதில் எனக்கு புரியாத புதிராகவே இருந்தது.
அண்டங்காக்கையும் அமாவாசையும்
நம் நாட்டில் பிரபலமான கேலிச்சித்திரக்காரர் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண். அவர் காக்கைகளை விதம்விதமாக வரைந்துள்ளார். அவரது மனைவி கமலா, “அவருக்கு என்னை விட காக்காயைதான் ரொம்பப் பிடிக்கும்” என்று கிண்டலாகச் சொல்லி உள்ளார். லஷ்மணனுக்கு காக்கையை மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். காக்கை இவருக்கு 'பொன்' குஞ்சு.
எனது முற்றத்தில்- 20
அந்த வழியே நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்த ’துக்ளக்’ ஆசிரியர் சோ ராமசாமி தாமாக அந்த வகுப்பில் பிரவேசித்தார். வகுப்பில் இருந்த 200 பேர் முகத்திலும் ஒரு மலர்ச்சி. "மம நாம ஸ்ரீராம், பவதஹ நாம கிம்?" என்று சோவை நோக்கியும் ஸ்ரீராமன் தன் அஸ்திரத்தை ஏவினார். லாகவமாக அதைக் கையாண்ட சோ, "மம நாம ஏகாக்ஷரம்!" (என் பெயர் ஓர் எழுத்து) என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்.....
மகாகவி பாரதியின் புனித நினைவில்…
பாரதி அமரர் ஆகி 101 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. அந்த மகா புருஷனின் புகழ் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு முறை அவரே தன் சீடனான குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னார்: “கிருஷ்ணா நான் இருநூறு ஆண்டுகள் முன்னதாகப் பிறந்து விட்டேன். என்னைப் பற்றி இவ்வுலகம் புரிந்து கொள்ள பல காலம் ஆகும். ஆங்கிலப் புலவர் ஷேக்ஸ்பியருடைய புகழ்கூட அவர் காலமான பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பரவத் தொடங்கியது”. அந்த மகாகவியின் வாக்கு சத்திய வாக்கு....
அவன் ஒரு தொடர்கதைதான்…
“கண்ணா! நான் நானூறு வருடங்கள் கழித்துப் பிறந்திருக்க வேண்டியவனடா!” என்று குவளை கிருஷ்ணமாச்சாரியாரிடம் சொன்னான். தவறு பாரதி! நவமியில் இராமனும், அஷ்டமியில் கண்ணனும் பிறந்தது போலத்தான், ஒரு துயரமான காலகட்டத்தில், அதைத் தமிழ்க் கவிதையால் துடைக்கும் அருட்கரமாக, சரியான நேரத்தில்தான் பிறந்தாய் நீ. “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்,” என்பதே உனக்கு விதிக்கப்பட்ட கடமைகள் என்று நீ கருதியதும் சரிதான். நாற்பது கூட ஆவதற்கு முன்னே பறந்துவிட்டாயே என்று நாங்கள் இன்றைக்கும் வருந்தினாலும், நீ மறைந்ததும் சரியான நேரத்தில்தான். அதற்குப் பிறகு நீ வாழ்ந்திருந்தால், தாங்கியிருக்க மாட்டாய். உன் உடம்பும், உயிரின் கெடுவும் அத்தனைக்குத்தான்....
பாரதியும் கணபதியும்
பிள்ளையார் என்ற பெயரே கள்ளமிள்ளாத குழந்தைத்தனமான வெள்ளை மனதைத்தான் குறிக்கிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் பெருமையிலும் ஞானத்திலும் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. எவ்வளவு பெரியவரானாலும் அவரிடம் அந்தக் குழந்தைத்தனம் அப்படியே இருக்கிறது. அதனால்தான் குழந்தைகள் பெரியவர் எல்லாருக்குமே பிள்ளையாரைப் பிடித்திருக்கிறது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலும் நாற்றுநடவுத் திருவிழாவும்
உலகத்தில் எங்குமே காண முடியாத முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பொன் ஏர் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நாட்டு நடவும் திருவிழாவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் விவசாயக்குடிகளான மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் ஆகியோர் இவ்விழாவில் பேருவையுடன் பங்கேற்கின்றனர்....