“கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி” என்பது மகாகவி பாரதியின் வாக்கு. எனவேதான் கவிதையையே தனது மனைவிக்கு நிகராக அவரால் வைக்க முடிகிறது. இக்கவிதை, கவிதையின் மகாசக்தியை வியக்கிறது.
Author: vamumurali
சிவகளிப் பேரலை – 60
இறைவனின் திருப்பாதங்களைச் சரண் புகுவதால் அனைத்துவிதத் துன்பங்களில் இருந்தும் நாம் விடுதலை பெறுகிறோம். இறைவன் திருவடித் தாமரை மீதான விருப்பம், அதனை எப்படியும் அடைந்தே தீரூவது என்ற விடாப்படியான முயற்சியுடன், உறுதியுடன் கூடியதாக இருக்க வேண்டும். ஏனோதானோ என்று இருந்தால் அது கைவசமாகாது. நினைப்பே நம்மை உந்தித் தள்ளுகிறது, முன்னேயும் பின்னேயும். ....
ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்
கந்தன் கலியுகவரதன் எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக் குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன. விவேகானந்தரிடத்து மிளிர்கின்ற மகிமைகளுள் சில கந்தனிடமிருந்து பெற்றுள்ள மகிமைகளாகத் தென்படுகின்றன. ஆதலால் முருகக் கடவுளது மகிமைகளையும் மானுடருள் மேலோனாகிய விவேகானந்தரது விபூதிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்ப்போம்....
பாரதியின் தனிப்பாடல் – 11
”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று தொல்காப்பியம் கூறும். அந்தச் சொல் மந்திரமாக வேண்டும் என்பார் மகாகவி பாரதி. ”நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” -என்பதும் தொல்காப்பிய நூற்பா. ”நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்” - என்பார் திருவள்ளுவர். அதனையொட்டி, சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்” என்ற அறிமுகக் குறிப்புடன் இக்கவிதையை எழுதி இருக்கிறார் பாரதி. உள்ளத்தில் தூய்மையும் உறுதியும் பெருகும்போது வெளிப்படும் சொற்களும் மறைமொழியாகின்றன என்பதே இக்கவிதையின் உட்கிடக்கை....
சிவகளிப் பேரலை – 59
கைவல்யம் என்றால் அதற்கிணையாக வேறொன்றும் இல்லாதது என்று பொருள். இறைவனின் திருவடிகளே கைவல்யபதம், அதுவே கைவல்ய சுகத்தை அளிப்பது. கைவல்யம்= மோனப் பெருநிலை= ஒன்றுதல். வேறு நினைப்பு அறுந்துபோய் அதுமாத்திரமே இருத்தல். ....
காற்றிடைச் சாளரம்
உங்கள் வீட்டு குப்பைகளை என் வாசலில் கொட்டுகின்றீர்கள்; அதனை உரமாக்கிக்கொள்ளும் என் வீடு....
இலக்கிய தீபம்- 16
கவிச்சுவை நிரம்பிய தமிழ் நூல்களுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். இது புறத்திரட்டு ஆசிரியர் உபகரித்த தமிழ்ச் செல்வம். நூல் முழுவதும் கிடைக்கவில்லை. அழகுடைய செய்யுட்கள் எனப் புறத்திரட்டின் ஆசிரியர் கருதிய 109 செய்யுட்களே இப்போது நமக்கு அகப்படுவன. பழைய இலக்கண உரைகளில் ஒரு சில செய்யுட்கள் முத்தொள்ளாயிரத்தைச் சார்ந்தன என்று கருத இடமுண்டு....
பாரதியின் தனிப்பாடல்- 10
உலகெங்கும் ஒளீயெனத் திகழ்ந்தாலும், சிறு நெஞ்சத்தில் இருள் கவிகிறதே - என்று தன்னிரக்கம் எழ குமைந்து பாடுகிறார் மகாகவி பாரதி....
சிவகளிப் பேரலை- 58
இறைவனுடைய திருக்காட்சி தெரிந்தும்கூட, கண்ணிருந்தும் குருடர்களாய் சிலர் வீழ்ந்து கிடப்போம். மாயை இருளால், அவன் தெரிந்தும், தெரியாமல் இருக்கிறான். ஆகையால், காட்சியைக் கொடுக்கின்ற அவனே, அதற்குரிய கருத்தையும் கொடுக்க வேண்டும் என்று நம் போன்றோருக்காக சிவபெருமானிடம் இறைஞ்சுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்....
எனது முற்றத்தில் – 11
’பாஞ்சாலி சபத’த்திற்கு பாரதியார் எழுதிய சமர்ப்பணத்தின் பின்வரும் பகுதி, தமிழின் சிரஞ்சீவித் தன்மையில் அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: "தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கு"....
பாரதியின் தனிப்பாடல்- 9
மகாகவி பாரதியின் தனிப் பாடகளில் 9வது கவிதை, அழகுத்தெய்வம் மீதானது....
சிவகளிப் பேரலை- 57
சிவபெருமானின் மகிமையைக் கூறும் ஆனந்தத் தாண்டவத்தை மனக் கண் முன்னர் பக்தர்கள் காண்பது, அவர்களது முற்பிறவிப் பயனால்தான் அமைகிறது. அந்தத் திருக்காட்சியைக் கண்டதும் இறைவன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு இறைவனிடமே அருள் புரிய இறைஞ்ச வேண்டும் என்பதை இந்த ஸ்லோகத்தில் எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர். சாதாரண மனிதரைப்போல் தம்மை பாவித்துக்கொண்டு, நமக்காக இதனை அவர் பாடியுள்ளார்.
பதிவிரதை
ஸ்திரீகள் புருஷர்களிடம் அன்புடன் இருக்கவேண்டினால், புருஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். நம்மைப்போன்றதொரு ஆத்மா நமக்கு அச்சத்தினாலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரசனாயினும்,குருவாயினும், புருஷனாயினும் மூடனைத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் நிறைவேறாது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல் நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும். அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலும் நாற்றுநடவுத் திருவிழாவும்
உலகத்தில் எங்குமே காண முடியாத முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பொன் ஏர் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் நாட்டு நடவும் திருவிழாவில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் விவசாயக்குடிகளான மள்ளர், பள்ளர், தேவேந்திரகுல வேளாளர் ஆகியோர் இவ்விழாவில் பேருவையுடன் பங்கேற்கின்றனர்....
சிவகளிப் பேரலை- 56
ஆடலரசனாகிய நடராஜனின், சிவபெருமானின் பெருமையை இந்த ஸ்லோகமும் எடுத்தியம்புகிறது. ...