ராஜாஜி (எ) திரு. சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர்; சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டப்பட்டவர்; சிந்தனையாளர்; எழுத்தாளர். அவர் ஸ்வராஜ்யா’வில் எழுதிய சுவாமி விவேகானந்தர் குறித்த கருத்து…
Author: vamumurali
பாஞ்சாலி சபதம் – 2.1.4
அறவுரை கூறி குருகுல இளவரசனைத் திருத்த முயன்ற விதுரன் தன் மீது பொழியப்பட்ட துரியனின் சுடுசொற்களால் மனம் நொந்த விதுரன், “சென்றாலும் நின்றாலும் இனி என்னேடா?” என்று விரக்தியுடன் அவையில் அமைதியாவதாக எழுதுகிறார் மகாகவி பாரதி. மன்னர் திருதராஷ்டிரனும், பீஷ்மரும் இதனைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கையில் நான் நீதி சொல்லி என்ன பயன் என்றும் விதுரன் வருந்துகிறார்...
ஸ்வதந்திர கர்ஜனை- 2(16)
இந்திய சுதந்திரப் போரைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் ‘நேதாஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி விரிவான பல செய்திகளைக் கொடுக்க வேண்டும். ‘பருப்பு இல்லாமல் கல்யாணமா?’ என்பது போல, நேதாஜி இல்லாமல் இந்திய சுதந்திரப் போர் வரலாறா என்று கேட்பார்கள். “இந்தியா உடனடியாக சுதந்திரம் பெற்றாக வேண்டும், அதற்குரிய ஒரே வழி போர்! ஆம், போர் மட்டுமே” என்று முழங்கியவர் நேதாஜி.
இந்தியாவை தலைமிர்ந்து நிற்கச் செய்தவர்
பாரதத்தின் முதல் பிரதமரான திரு. ஜவஹர்லால் நேரு (1889- 1964), சுவாமி விவேகானந்தர் குறித்துக் கூறியவை…
பாஞ்சாலி சபதம்- 2.1.3
முதல் பாக முடிவில், சூதில் பணையமாக நாட்டை வைத்து ஆடுமாறு சகுனி கூறியதைக் கண்டித்து அவையில் விதுரன் ஒருவரே பேசினார். இரண்டாம் பாகத்தின் தொடக்கத்தில், விதுரனுக்கு துரியன் ஆவேச மொழியில் பதில் அளிக்கிறான். “ஐவருக்கு நெஞ்சும் எங்கள் அரண்மனைக்கு வயிறும்” வைத்து, தின்ற உப்பினுக்கே நாசம் தேடும் நனி கெட்ட விதுரன் என்று தனது சிறிய தந்தையும் அமைச்சருமான விதுரனை ஏசுகிறான் துரியன். இப்போதேனும் தருமன் சூதை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் விதி வலியதாயிற்றே?
மாலைப் பொழுதின் மயக்கத்திலே…
குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இளம் விதவையின் மன ஏக்கங்களை அற்புதமான வரிகளில் இப்பாடலாக இழைத்திருக்கிறார் கவியரசர். “இளமை எல்லாம் வெறும் கனவு மயம்... இதில் மறைந்தது சில காலம்! தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்” என்ற வரிகளில் தான் எத்தனை வேதனை?
தேசபக்தியை பெருக்கியவர்!
தேசத்தந்தை மகாத்மா காந்தி சுவாமி விவேகானந்தரால் ஆகர்ஷிக்கப்பட்ட தலைவர்களுள் பிரதானமானவர். அவர் பல இடங்களில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டி இருக்கிறார். அவற்றில் சில துளிகள் இவை….
பாஞ்சாலி சபதம் – 2.1.2
இரண்டாம் பாகம் எழுதத் தொடங்குவதற்கு முன் கலைமகளையும் மகாகவி பாரதி பிரார்த்திக்கிறார். கலைமகளின் பேரருள் இடையின்றிக் கிடைக்க வேண்டும் என்பதே கவிஞரின் வேண்டுதல்...
கங்கை – காவிரி சங்கமம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வாராணசியில், நவம்பர் 17-இல் தொடங்கி ‘காசி தமிழ் சங்கமம்’ டிசம்பர் 16 வரை தொடர்ந்து கலாச்சார பரிமாற்ற விழாவாக நடைபெற்றது. காசியையும் தமிழகத்தையும் இணைக்கும் பாரம்பரிய வேர்களை நினைவுறுத்தும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் பலர் சென்று வந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற ‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரும், ஜோதிட வல்லுநருமான திரு. ஸ்ரீதரம் கு.சிவகுமார் அவர்களின் அனுபவப் பகிர்தல் இது….
மோடியின் தமிழகம் – ஒரு கண்ணோட்டம்
‘மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது’ நூல் நமது தள வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான். இந்நூல் குறித்த கண்ணோட்டத்தை இங்கு பதிவு செய்கிறார், தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...
தனி ஒருவனுக்கு
தீண்டாமையையும் பசிக் கொடுமையையும் போலித்தனங்களும் கண்டு வெட்கி, ஆவேசம் கொள்ளும் புதுமைப்பித்தனின் அக்கால நடையிலான சிறுகதை இது…
ஞானகங்கை
ஸ்ரீ குருஜி கோல்வல்கர் என்று அழைக்கப்படும் பரமபூஜனீய குருஜி மாதவ சதாசிவ கோல்வல்கர், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) இரண்டாவது தலைவராக இருந்தவர்; பெரும் தபஸ்வி; சிந்தனையாளர்; சுவாமி விவேகானந்தர் கனவு கண்ட இயக்கச் செயல்வீரர்; தேசிய மறுமலர்ச்சிப் பணியில் தனது வாழ்வையே அர்ப்பணமாக்கியவர். ‘ஞானகங்கை’ என்ற நூல் தொகுப்பு குருஜியின் சிந்தனைக் களஞ்சியமாகும். இக்கட்டுரை ‘தியாகபூமி’ வார இதழில் வெளியானதாகும்.
சத்திய சோதனை – 5 (36-40)
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு ஞாபகார்த்தச் சின்னம் அமைப்பதென்று காங்கிரஸில் மிகக் குதூகலத்தினிடையே ஒரு தீர்மானம் நிறைவேறியிருந்தது. இதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நிதி திரட்ட வேண்டும். இந்த நிதிக்கு என்னையும் ஒரு தருமகர்த்தாவாக நியமித்தார்கள். பொதுக்காரியங்களுக்குப் பிச்சை எடுப்பதில் மன்னர் என்று பண்டித மாளவியாஜி கீர்த்தி பெற்றிருந்தார். ஆனால், இந்தக் காரியத்தில் அவருக்கு நான் அதிகம் பின்வாங்கியவன் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதுதான் இத்துறையில் எனக்கு இருந்த ஆற்றலைக் கண்டுபிடித்தேன். என்றாலும், சுதேச மன்னர்களிடமிருந்து பெருந்தொகையை வசூலித்துவிடுவது மாளவியாஜிக்கு இருந்த இணையில்லாத ஜாலவித்தை என்னிடம் இல்லை.....
பாஞ்சாலி சபதம்- 2.1.1
யாரை எங்கு வைக்க வேண்டும், எந்த நேரத்தில் எது நடக்க வேண்டும் என்பதெல்லாம் நமது முடிவல்ல; பராசக்தியின் லீலை. அதனைக் குறிப்பிட்டு, இரண்டாம் பாகம் எழுத ஆசி வேண்டுகிறார் மகாகவி பாரதி...
ஸ்வதந்திர கர்ஜனை- 2(15)
1937-இல் சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. கூடிய வரை காந்திஜி சொன்ன செயல் திட்டங்கள் அமல் செய்யப்பட்டன. சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் ராஜாஜி.