எங்கெங்கு பார்த்தாலும் ஊர்வலங்கள், கடையடைப்பு, பொதுக்கூட்டங்கள், போலீஸ் அடக்குமுறை. அஞ்சலகங்கள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டு தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டன. ஆங்காங்கே ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. இதெல்லாம் விளைவுகளை எண்ணி, இது சரியா தவறா என்று சிந்தித்துச் செய்யும் காரியங்களா என்ன? உணர்ச்சிவசப்பட்ட கூட்டத்தின் ஆவேசம் அப்படிப்பட்டது.
Author: vamumurali
பாஞ்சாலி சபதம்- 2.3.1
பாஞ்சாலி சபதத்தின் இரண்டாம் பாகத்தில், சபதச் சருக்கம் தொடங்குகிறது. அண்ணன் துரியோதனனின் ஆணையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியுடன் செல்கிறான் துச்சாதனன். அவனை மகாகவி பாரதி “இவன் தீமையில் அண்ணனை வென்றவன்” என்று வர்ணிக்கிறார். பாஞ்சாலி இருப்பிடம் சென்று அவளை இழுத்து வர முயல்கிறான் துச்சன்.
இந்திய சுதந்திரத்தின் விடிவெள்ளி சுவாமி விவேகானந்தர்
தினமணி நாளிதழின் ஆசிரியர் திரு. கி.வைத்தியநாதன் திருவண்ணாமலையில் 26.12.2014, வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஸ்ரீ ராமகிருஷ்ணர் பக்தர்களின் 22-ஆவது மாநில மாநாட்டில் பேசியதன் சுருக்கம் இது:
சமஸ்கிருதத்தால் அல்ல, ஆங்கிலத்தால்!
தமிழகத்தில் அடிக்கடி சமஸ்கிருதத்துக்கு எதிராக முழங்குவது, எளிய அரசியல் உத்தியாகத் தொடர்கிறது. அந்த மேதாவிகளுக்காகவே இதனை எழுதி இருக்கிறார் கட்டுரையாளர்.
சுதந்திர தேவியிடம் முறையீடு
புதுவையில் மகாகவி பாரதி நடத்திய ‘இந்தியா’ இதழில் 1909-இல் வெளியான இக்கவிதை, பெரும்பாலான பாரதி கவிதைத் தொகுப்புகளில் காணப்படுவதில்லை.
அனந்தாழ்வாரும் முத்துத் தாண்டவரும்
அனந்தாழ்வான் திருமலைக்கு வந்தார்; பூந்தோட்டம் அமைத்தார்; தண்ணீர்த் தேவைக்காக அவர் வெட்டிய ஏரி ‘அனந்தன் ஏரி’ என்று இன்றும் திருமலையில் உள்ளது. அதற்கு அவர் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் கடப்பாரை கோயில் நுழைவாயிலில் இன்றும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது....
அறிவியலின் பிதாமகரும் ஆன்மிக சூரியனும்
தற்கால தமிழ் ஆய்வாளர்களுள் திரு. அரவிந்தன் நீலகண்டன் குறிப்பிடத் தக்கவர். ஹிந்துத்துவ சிந்தனையுடன் கூடிய இவரது ஆய்வுகளும் நூல்களும் தேசிய அளவில் கவனம் பெற்று வருகின்றன. சுவாமி விவேகானந்தரையும் விஞ்ஞானி ஐன்ஸ்டைனையும் ஒப்பிட்டு இவர் எழுதிய கட்டுரை இங்கே...
பாஞ்சாலி சபதம்- 2.2.9
பாகன் மறுபடியும் அவையில் பாஞ்சாலியின் வாதத்தை வைத்தவுடன், துரியன் மேலும் கோபம் கொள்கிறான். பீமனுக்கு அஞ்சி பாகன் தயங்குவதாகக் கூறும் அவன், “பாஞ்சாலியை அழைத்துவர பாகனால் இயலாது. எனவே நீ சென்று அவளை இழுத்து வா?” என்று தம்பி துச்சாதனனிடம் ஆணையிடுகிறான். இரண்டாம் பாகத்தின் இரண்டாம் சருக்கம் இத்துடன் நிறைவெய்துகிறது...
பாரதியும் பாரதிதாசனும் – 3ஆ
வாழ்க்கையில் ஒருவன் சிறந்த குறிக்கோளைக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வகையான தொழிலில் ஈடுபட்டுத் தன் கடமையை நிறைவேற்று கின்றான். எத்தொழிலைச் செய்தாலும் அஃது இறைவன் பணியாகும் என்ற பேருண்மையைக் கவிஞர் அறியாதவர் அல்லர். இப்பேருண்மையைத் ’தேசமுத்துமாரி' என்ற பாடலில் 'யாதானும் தொழில் புரிவோம்; யாதும் அவள் தொழிலாம்’ என்று பேசுகிறார்.
புஸ்தகத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க!
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான திரு. முரளி சீதாராமன், நகைச்சுவை பொங்க எழுதுவதில் மன்னர். அதேசமயம், விஷயமில்லாமல் இருக்காது. புத்தகக் கண்காட்சி குறித்த இவரது நையாண்டிக் கட்டுரை இது…. சென்னை புத்தகத் திரு விழா தொடங்கி இருக்கிறது, போவோமா ஊர்கோலம்?
என்னே கொடுமை!
சுதேசமித்திரன் இதழில் 1906-இல் வெளியான கவிதை இது. இக்கவிதை எழுதியதற்கான குறிப்பையும் முதலிலேயே குறிப்பிடுகிறார் மகாகவி பாரதி.
நம்மாழ்வாரும் விவேகானந்தரும்
பேராசிரியர் திரு. டி.ஏ.ஜோசப், ‘ஸ்ரீ வைஷ்ணவச்சுடராழி’ என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்; பாண்டிச்சேரியில் வசிக்கிறார். பன்மொழித் தேர்ச்சி மிக்கவர்; கல்வியாளர்; ஆன்மிகச் சொற்பொழிவாளர்; எழுத்தாளர். சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தியின்போது அன்னார் எழுதிய கட்டுரை இது….
பாஞ்சாலி சபதம் – 2.2.8
துரியனின் ஆணையை ஏற்று மீண்டும் தன்னிடம் வந்த பாகனிடம், ”சூதில் தருமன் தோற்ற பின்னர் என்னை மனைவி என்ற முறையில் சூதில் பணயம் வைக்க அவருக்கு உரிமை இல்லை. நான் மன்ன துருபதனின் மகள். இந்த நியாயத்தைச் சொல்ல அரசவையில் ஒருவரும் இல்லையா?” என்று வினவுகிறாள் பாஞ்சாலி. “மன்னர் சௌரியம் வீழ்ந்திடும் முன்னரே- அங்கு சாத்திரஞ் செத்துக் கிடக்குமோ?” என்று பாஞ்சாலி கேட்பதாக கவிதை புனைகிறார் மகாகவி பாரதி. இதனை மீண்டும் அரசவைக்குச் சென்று அவையினரிடம் முன்வைக்கிறான் பாகன்...
உங்க பேர் என்ன? எந்த சேனல்?
பெங்களூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு. ச.சண்முகநாதன், கம்ப ராமாயணத்திலும் இளையராஜாவின் இசையிலும் தோய்ந்தவர். அவரது முகநூல் பதிவே இக்கட்டுரை….
இளசை ஒருபா ஒருபஃது
‘ஒருபா ஒருபஃது’ என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இஃது அகவல், வெண்பா, கலித்துறை என்னும் பாவகைகளுள் ஏதாவது ஒன்றினால், அந்தாதியாக அமையும் பத்துப் பாடல்களைக் கொண்டிருக்கும். இங்கு மகாகவி பாரதி, வெண்பாவில் அந்தாதியாகப் பாடி இருக்கிறார். இப்பாடல்களில் காப்பு, பத்துப்பாடல்கள் ஆகியவை, இளசை எனப்படும் எட்டையபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஈசனைக் குறித்துப் பாடியவையாக உள்ளன. இறுதியாக தனிப் பாடல் ஒன்றும் எட்டப்ப ராஜாவைப் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.