-கவிஞர் ஸ்ரீ. பக்தவத்சலம்

கடவுளும் நானும்
துயிலெழுந்தார்;
உயிரெடுத்தேன்.
நீராடினார் ;
மழையாடினேன்.
பசியடைந்தார்;
பசியாறினேன்.
காமமெய்தினார்;
கலவிபுரிந்தேன்.
சினந்தார்;
சமரிட்டேன்.
விடைகளாயிருந்தார்;
வினாக்களாயிருந்தேன்.
மௌனமானார்;
தியானமானேன்.
அன்பிலலர்ந்தார்;
இன்புறவடைந்தேன்.
நன்றி பெருக்கினார்;
நாயுடன் இருந்தேன்.
லயித்திருந்தார்;
கவிதைகளாக்கினேன்.
திருவுலாவினார்;
தடம் தேடினேன்.
என்னையறிந்தார்;
தன்னைக் கரைத்தேன்.
இனி என்ன?
இடையிடையே நான்
பயந்தும் துவண்டும்
வாழ்ந்தபோதெல்லாம்
அவரின் நிலையறியாமலேயே
உடல் விடுவேன் – துயிலடைவார்.
$$$