புதிய வருஷம்

புத்தாண்டுப் பிறப்பு தமிழகத்துக்கு நன்மையாக அமைய இக்கட்டுரையில் பிரார்த்தனை செய்யும் பாரதி, அதே போக்கில், தேசத்தில் மலர்ந்துவரும் சுதந்திரக் கனலையும் சுட்டிக்காட்டி மகிழ்கிறார். “இயற்கையிலே ஒரு விநோதம் என்னவென்றால் மேற்கொண்டு செல்லாதவர்கள் கீழ்ப்பட்டே தீர வேண்டும். மேலும் போகாமல், கீழும் போகாமல் ஒரே நிலைமையில் நிற்பது சாத்தியமில்லை’ என்று சொல்லி இருப்பதன் தாத்பரியம், விடுதலை உணர்வற்ற ஜந்துக்களாக நமது மக்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தவே.

சென்னை வாசிகளின் நிதானமும் விபின சந்திரபாலரின் சந்நிதானமும்

சென்னையில் பழைய கட்சியாருக்கு (கோகலே கோஷ்டி- நிதானக் கட்சியார்) ஆதரவு குறைந்து புதிய கட்சியாருக்கு (திலகர் கோஷ்டி- தீவிரவாதிகள்) ஆதரவு பெருகியதை பெருமகிழ்ச்சியுடன் செய்தியாகத் தீட்டுகிறார் இதழாளர் பாரதி. ஸர் பட்டம் இனி மரியாதைக்குரியதல்ல என்றும் பகடி செய்கிறார். “ஸர். வி. சி. தேசிகாச்சாரிக்கும் மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்” என்று எழுதும்போது, பாரதியின் அரசியல் நுண்ணுணர்வும், தீவிரக் கொள்கைப் பிடிமானமும் வெளிப்படுகின்றன...

பாரஸீக தேசத்தில் பிரதிநிதி ஆட்சி முறைமை

உலகின் பிற நாடுகள் எவ்வாறு அரசியலில் மாற்றம் அடைந்து வருகின்றன என்பதை போகிற போக்கில் செய்தியாகச் சொல்லி, இந்தியர்களின் மனதில் தேச விடுதலை எண்ணத்தை வளர்க்க, இதழாளர் பாரதி பாடுபட்டதை இச்செய்தி காட்டுகிறது. பாரசீக நாட்டில் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைந்ததை எவ்வளவு குதூகலமாக பாரதி கொண்டாடுகிறார், பாருங்கள்!

இந்தியர்களுக்கு இன்னும் ஒரு ரொட்டித் துண்டம்

அரசியலில் திலகரின் தீவிரவாத கோஷ்டியைச் சார்ந்திருந்த மகாகவி பாரதிக்கு, கோகலே தலைமையிலான நிதானக் கட்சியாரின் மன்றாடல்களும், ஆங்கிலேயரை உயர்த்திப் பேசும் தன்மையும் கசந்ததில் வியப்பில்லை. அதனை தனது ‘இந்தியா’ பத்திரிகையில் அவ்வப்போது கடுமையாகத் தாக்கி வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை. தனக்கு இதழியலில் முகவரி கொடுத்த ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையே ஆயினும், நிதானக்கட்சியாரின் கருத்தை ஆதரித்தால், பாரதியின் கண்டனத்துக்கு ஆட்பட்டே ஆக வேண்டும். இந்த செய்தியில் இதழாளர் பாரதியின் தார்மிக நெறியும், தனது நெஞ்சுக்கு நீதி என்று பட்டதைச் சொல்லும் இதழியல் துணிவும் இருப்பதைக் காண்கிறோம்.

தென்றலுடன் பிறந்த பாஷை

நமது தாய்மொழியாம் தமிழின் மகிமை அறியாமல் இதைத் தூற்றும் கூட்டம் இன்றும் உண்டு; அன்றும் இருந்தது. அப்போது, அத்தகையோரை எள்ளி நகையாடி, தமிழ் மீது பற்றுக் கொண்ட ஜி.யு.போப்பை உதாரணமாகக் காட்டி, மகாகவி பாரதி தந்த செய்தி இது. கூடவே, சுதேசமித்திரன் இதழில் வெளியான செய்தியின் நறுக்கையும் இணைத்துள்ள அவரது பாங்கு மெச்சத் தக்கது...

லார்டு கர்ஸனும் ஹிந்துக்களின் ஒழுக்கமும்

வங்கப் பிரிவினையால் இந்திய மக்களின் ஒட்டுமொத்த விரோதத்தை சம்பாதித்தவர் கர்சன் பிரபு. அவர் கொல்கத்தா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ‘இந்தியர்கள் உண்மைக்கு மாறானவர்கள்’ என்ற பொருளில் பேசியதை மகாகவி பாரதி இச்செய்தியில் கண்டிக்கிறார். தனது செய்திக்கு ஆதாரமாக, ஆங்கிலேயர் ஒருவரே கர்சனின் மோசடித்தனத்தைக் கண்டித்ததையும் எடுத்தாண்டிருக்கிறார். ஓர் இதழாளரின் கடமை என்பது நாட்டு மக்களுக்கு உண்மையை உரைப்பதும் தெளிவான சான்றுகளை முன்வைப்பதும் தான் என்பதை இதழாளர் பாரதி இதன்மூலம் செய்து காட்டி இருக்கிறார்...

பிரிட்டிஷ் அநீதிகளை ப்ரயன் தகர்த்தெறிதல்

அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான வில்லியம் ஜென்னிங் ப்ரெயன் (1860- 1925), சிறந்த நாடாளுமன்றவாதியும் வழக்கறிஞரும் ஆவார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மூன்று முறை (1896, 1900, 1908) போட்டியிட்டு தோல்வியுற்றவர். எனினும் அந்நாட்டின் அரசியலில் ஒரு நிலையான அரசியல் சக்தியாகத் திகழ்ந்தவர். அதிபர் வுட்ரோ வில்சனின் அரசில் அமைச்சரவை செயலராக (1913) பணிபுரிந்தவர். இவர் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி எழுதிய கட்டுரை குறித்து இதழாளர் பாரதி இங்கு சிலாகிக்கிறார்...

ஸ்வாமி அபேதாநந்தர்

சுவாமி அபேதாநந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடி சீடரும், சுவாமி விவேகானந்தரின் சகோதரத் துறவியும் ஆவார். அவரது சென்னை விஜயத்தால் மகிழ்ந்து இதழாளர் பாரதி தீட்டிய செய்தி இது... சுவாமி அபேதாநந்தா குறித்து ஒரு கவிதையும் எழுதி இருக்கிறார் மகாகவி பாரதி.

நமது மகமதிய சகோதரர்கள்

ஹிந்து- முஸ்லிம் மத வேற்றுமைப் பிரச்னை இன்று தோன்றியதல்ல என்பதை மகாகவி பாரதியின் இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்த வேற்றுமையை இல்லை என்று ஒளித்துவைத்துப் பிரயோசனமில்லை என்று கூறும் இதழாளர் பாரதி, ”மேற்கண்டவாறு இருக்கும் நிலைமையை உத்தேசிக்குமிடத்து அநேகர் மனதில் பரதகண்டத்தின் வருங்காலத்தைப் பற்றி பயமேற்படுகின்றது“ என்று விசனப்படுகிறார். நமது மகமதிய சகோதரர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையிலான வேற்றுமை உணர்ச்சியை எவ்வாறாகிலும் சரிப்படுத்த வேண்டும் என்ற அவரது ஆத்மார்த்த விருப்பமும் இச்செய்தியில் தெரிகிறது......

திரான்ஸ்வால் இந்தியரின் கஷ்டம்

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையின நிறவெறிக்கும் இந்தியர்களுக்கு எதிரான பாகுபாட்டிற்கும் எதிராகப் போராடினார் என்று தெரியும். நமது இதே தளத்திலேயே ‘சத்திய சோதனை’ வெளியாகிறது. அதில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் பட்ட கஷ்டங்கள் பதிவாகி இருக்கின்றன. அந்தக் கொடுமைகளை ஓர் இதழாளராக வாசகர் முன்பு செய்தியாக வைத்து அவர்களுக்கு உணர்வூட்டுகிறார் மகாகவி பாரதி...

ரூஸ்வெல்ட் அதிபரும் ஜப்பானும்

அமெரிக்க நாட்டில் என்ன நடக்கிறது? அங்குள்ள அதிபர் ரூஸ்வெல்ட் (1906) அந்நாட்டு மக்களுக்கு செய்யும் கடமை என்ன? (அவர் தேச ஜனங்களின் மனதிற்கு வருத்த முண்டாகுமென்பதற்காக பயந்து உண்மைகளை மறைத்துக் கூறும் வழக்கமுடையவரல்ல). அந்நாட்டில் சில மாகாணங்களில் ஜப்பான் தேசத்தாருக்கு எதிரான மனநிலை இருப்பது கூடாது என்னும் அதிபரின் மனநிலை,... என உலக அரசியலை நம்மப்வர்க்கு வழங்கத் துடிக்கும் மகாகவி பாரதியின் இதழியல் ஆர்வம் இக்கட்டுரையில் வெளிப்படுகிறது...

சென்னை ஹைகோர்ட்

சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதி பதவிக்கான காலியிடம் ஒன்றில் தகுதி வாய்ந்த இந்தியர் ஒருவரை (ஸ்ரீ சங்கரன் நாயர்) நியமிக்க மறுக்கும் ஆங்கிலேய அரசின் பட்சபாதத்தை தனது தர்க்கத் திறனால் கேள்விக்கு உள்ளாக்கும் மகாகவி பாரதியின் இதழியல் கடமையுணர்வு இக்கட்டுரையில் வெளிப்படுகிறது...

புல்லர் செய்யும் மோசம்

புல்லர் என்ற ஆங்கிலேய அதிகாரி தனது நியாயமற்ற நடவடிக்கைகளால் பெங்கால் மாகாண மக்களிடம் கெட்ட பெயர் பெற்றிருந்த நிலையில், அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று ‘இந்தியா’ பத்திரிகையில் மகாகவி பாரதி செய்தி வெளியிட்டார். அது நடைபெறாமல் போன நிலையில், மறுவாரம் வெளியான செய்தி இது. இச்செய்தியில் உள்ள கேலியைக் கவனியுங்கள்!

தமிழில் எழுத்துக் குறை

ப்ரெஞ்ச், இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலும் – உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து செளகர்யப் படுத்திக் கொள்ளுகிறர்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்து நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்....

பஞ்சகோணக் கோட்டையின் கதை

அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்! நமது நாடு ஏன் அடிமைப்பட்டது என்று சிந்தித்த மகாகவி பாரதி, சமூகத்தின் ஒரு பகுதியான அடித்தட்டு மக்களை பஞ்சமர்கள், தீண்டத் தகாதோர் என்று ஒதுக்கி வைத்த பாவமே அடிப்படைக் காரணம் என்று கண்டறிகிறார். ஈனம் என்று கூறப்படும் ஜாதியாரை ஆதரித்து அவர்களை உயர்த்துவதே தேசம் உய்யும் வழி என்கிறர் இக்கட்டுரையில். ஒரு கதை போல எழுதி, இறுதியில் அற்புதமான அறவுரையை முத்தாய்ப்பாக வைத்திருக்கிறார் பாரதி. சுதந்திர நன்னாளில் அவரது அறவுரையை அறிவுரையாக ஏற்போம். நாட்டைக் காப்போம்!