குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-2

அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், இது கட்டுரையின் இறுதிப் பகுதி…

குறளைப் போற்றிய பெரியார்களும், ஓர் அரசியல் பதரும்-1

அண்மையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை எம்.பி. திரு. சு.வெங்கடேசன், “1949இல் பெரியார் நடத்திய திருக்குறள் மாநாட்டிற்குப் பிறகே பள்ளிப் பாடங்களில் திருக்குறள் பாடமாக வைக்கப்பட்டது” என்று பேசியுள்ளார். இதுபோல ஆதாரமில்லாதவற்றைப் பேசுவது அவருக்குப் புதியதல்ல. அவருக்கு இலக்கியங்களின் ஆதாரத்தில் சவுக்கடி கொடுத்திருக்கிறார், நமது ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. கருவாபுரிச் சிறுவன்… இது கட்டுரையின் முதல் பகுதி…

அறிய வேண்டிய அரிய நூல்

வேதாந்தத்தை தமிழில் வழங்கும் நூற்றாண்டுகளுக்கு முன்னர் வெளியான நூல் குறித்து அறிமுகம் செய்கிறார், நூலகரும், எழுத்தாளருமான திரு. ரெங்கையா முருகன்....

சொன்னாலும் விரோதம்! சொல்லாவிட்டாலும் விரோதம்!   

தமிழக அரசு பழனியில் நடத்திய அனைத்துலக முருகன் முத்தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்ட மலரின் குறைகளை சுட்டிக்காட்டி, இக்கட்டுரையை எழுதி இருக்கிறார் திரு கறுவாபுரிச் சிறுவன்...

என் கடன் பணி செய்து கிடப்பதே- 1

அப்பர் சுவாமிகள் கூறியபடி, ’என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற குறிக்கோளுடன் சிலர் தன்னலம் இன்றி வாழ்வதால் தான் நமது சமுதாயமும் நாடும் பல இன்னல்களுக்கிடையிலும் உயிர்ப்புடன் விளங்குகின்றன. அத்தகையவர்களை நமது தளத்தில் அவ்வப்போது அறிமுகம் செய்வோம். இன்று நாம் அறிய வேண்டிய அரியவர்: கம்பபாதசேகரன் திரு. இ.சங்கரன்…

கவிஞரின் அறம்

சிறுகூடல்பட்டி முத்தையா கண்ணதாசன் என்று மாறியதே ஒருவகை அறம்சார்ந்த விஷயம் எனலாம். தமிழர்களுக்கான மொத்த அடையாளம் கவிஞர் என்றால் சற்று மிகையோ என்று நீங்கள் மிரளக்கூடும். ஆனால் தமிழர்களின் பாரம்பரியமான ஐந்திணை ஒழுக்கத்தையும், தமிழர்களின் காதலையும் வீரத்தையும் மீட்டுத் தந்தவன் கண்ணதாசன் என்றால் மிகையாகாது. அகம்- புறம் என்று அவன் தமிழர்களின் அடையாளமாகப் பிரிந்து கிடக்கிறான்.

தேசிய நீரோட்டம்

எழுத்தாளர் திரு. சத்தியப்பிரியனின் முகநூல் பதிவு இது. சிறு பதிவு என்றாலும், இதில் அடங்கியுள்ள விஷயம் பெரிது...

சகல நன்மையருளும் சங்கர சதாசிவ மாலை

வரும் ஆக. 23ஆம் தேதி, சங்கரன்கோவில் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிரது. அதனையொட்டி, எழுத்தாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை இது….

இலக்கியத்தில் ஒரு இணுக்கு…

கோவையைச் சேர்ந்தவரும் பெங்களூரில் விளம்பரவியல் ஆலோசகராக (பிராண்ட் கன்சல்டன்ட்) பணியாற்றுபவருமான திரு. குமார் ஷோபனா, இலக்கியங்களில் மூழ்கி முத்தெடுப்பவர். அவரது சிறு பதிவு இது...

குழமணி தூரம்

பெங்களூரில் பணியாற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான திரு. ச.சண்முகநாதன், கம்பனிலும் பக்தி இலக்கியங்களிலும் தோய்ந்தவர். அவரது சுவையான பதிவு இது...

தேவையான ஞானச் செருக்கு

தேசியகவியாகிய பாரதிக்கு ஒளவையார் பாடல்கள் மீது ஓர் ஒப்பற்ற மதிப்பு, மரியாதை  இருந்தது என்பதை கீழ்க்கண்ட வரிகள் உணர்த்தும்.  “தமிழ் நாட்டில் மற்ற செல்வங்களை எல்லாம் இழந்து விட பிரியமா... அல்லது ஒளவையாரின் பாடல்களை இழக்க பிரியமா என ஒருவர் கேட்டால் நான் சொல்வேன். மற்ற செல்வங்களை எல்லாம் இழந்தாலும் மீண்டும் சாம்பாத்தியம் செய்து கொள்ளலாம். ஆனால் ஒளவை பிராட்டியாரின்  பாடல்களை மட்டும் இழக்க ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன், ஏனென்றால் அவை தமிழ்நாட்டின் தனிப்பெரும் செல்வம்” என்கிறார்.   

ஆடித் தபசும் கோமதி சதரத்ன மாலையும்

சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் கோமதியம்மையின் ஆடித்தபசு விழா நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, எழுத்தாளரும் இலக்கிய ஆய்வாளருமான திருவாளர் கருவாபுரிச் சிறுவன் எழுதிய இக்கட்டுரை இங்கு வெளியாகிறது...

கம்பன் ஏமாந்தானா?

பெண்களின் கண்களை வேல்விழி, மலர்விழி, மைவிழி, மான்விழி, மீன்விழி, சேல்விழி, சுடர்விழி என்று கொண்டாடுவது கவிஞர்களின் இயல்பு. மலர் போன்ற மென்மையைக் கொண்டிருந்தாலும், வேல் போன்ற கூர்மையை உடையவை இக்கண்கள். கவியரசர் கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் நாயகியின் கண்களை அம்புவிழி என்று நாயகன் பாடுவதாக எழுதி இருக்கிறார். அதையொட்டிய சிறு ஆய்வுப் பதிவு இது…. மனம் கனிய, இலக்கியம் பயில்வோம்.

இதுவெல்லாம் ஒரு பிழைப்பா?

நாடாளுமன்ற மக்களவையில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பாரம்பரியச் சின்னமான செங்கோல் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கிறுக்குத்தனமாக உளறியதற்கு தகுந்த பதிலடி அளிக்கிறார் திரு. ச.சண்முகநாதன்.  ‘சீ, சீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு’ என்று வெகுண்டு மகாகவி பாரதி பாடியது இத்தகைய ஈனப் பிறவிகளை நினைந்து தானோ?

கருவையந்தாதிகள் வரலாறும் பெயர்த் திரிபுகளும்

தென்காசி அருகிலுள்ள கரிவலம் வந்த நல்லூர்  ‘திருக்கருவை’ என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் உறையும் ஈசனைப் போற்றி வரதுங்கராம பாண்டிய மன்னர் (தென்காசிப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர்; கருவையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: பொ.யு. 1588- 1612) இயற்றிய மூன்று அந்தாதி நூல்களும்  ‘திருக்கருவை அந்தாதிகள்’ என்று வழங்கப்படுகின்றன. பிற்கால சிற்றிலக்கியங்களில் மொழிவளமும் ஆன்மிக நலமும் கொண்ட இந்த அந்தாதி நூல்களை இயற்றியவர் வரதுங்கராம பாண்டியரின் சகோதர முறையினரான அதிவீரராம பாண்டியர் (இவர் நைடதம், வெற்றிவேற்கை நூல்களை எழுதியவர்; தென்காசியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்; காலம்: 1564- 1610) என்று தமிழ்ப் பாடநூல்களில் தொடர்ந்து பிழையாக கற்பிக்கப்படுகிறது. இந்தப் பிழையை நேர்செய்ய வேண்டி, இதே ஊரைச் சேர்ந்தவரும் இலக்கிய ஆய்வாளருமான திரு. பா.ஸ்ரீராமகிருஷ்ணன் (சிறுவாபுரிச் சிறுவன்) எழுதியுள்ல இனிய ஆய்வுக் கட்டுரை இது…