சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 6

பிறகு ஒருநாள் திருகோஷ்டியூரில் குடிகொண்டிருந்த எம்பெருமான் ஆலயச் சுவரில் ஏறி அமர்ந்துகொண்டு “எம்பெருமானின் பரம பக்தர்களே ! அனைவரும் இங்கே வாருங்கள். இந்த அற்ப மானுடப் பிறவி முடிந்த பின்னர் நீங்கள் வைகுந்தம் செல்ல நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தை சொல்லித் தருகிறேன்” என்று அழைத்தார்....

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 5

உண்மையில் அந்த சாதிபேதம் பார்க்கும் குணம் தஞ்சமாம்பாளை அழித்தது என்றே சொல்லலாம்.மீண்டும் ஒருமுறை ஆளவந்தாரின் சீடரான பெரியநம்பியிடமும் இவ்வாறே நடந்துகொள்ள நேரிட அதுகண்டு பொறுக்காமல் இராமானுஜர் தஞ்சமாம்பாளை அவருடைய பிறந்தவீட்டில் கொண்டு விட்டு துறவு மேற்கொள்கிறார்.

சமுதாயச் சிற்பி ராமானுஜர்- 4

தன்னுடைய துவைதக் கோட்பாடுகளை தனியாக ‘விசிஷ்டாத்வைதம்’ என்ற பெயருடன் ஸ்ரீ ராமானுஜர் ஸ்தாபிப்பதற்கு யாதவப்பிரகாசர் ஒரு கருவியாக இருந்தார் என்றுதான் கொள்ள வேண்டும். அப்படி ஸ்தாபிப்பதற்கு ஸ்ரீ ராமானுஜர் தனது உயிரைப் பணயம் வைக்க நேர்கிறது. இந்த உயிர்ப் பணயம் இவரது வாழ்க்கை நெடுகிலும் தொடர்கிறது.....

சமுதாயச் சிற்பி ராமானுஜர் -3

பெரும் மகான்களின் வாழ்க்கையை உற்று நோக்கும்போது அவர்கள் பெரும்பாலும் தமது கோட்பாடுகளை நிறுவ வாதத்திறமையை வளர்த்துக் கொள்வதோடு புத்திசாதுரியத்தால் தங்களது இன்னுயிரையும் காத்துக் கொள்ளும் நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர். அப்படி ஒரு நிர்பந்தம் இராமானுஜர் வாழ்வில் ஏற்பட்டது. அதுவும் தான் பாடம் கற்றுக் கொண்ட குருவிடமிருந்தே வந்தது.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(6)

ராஜ துவேஷ குற்றச்சாட்டின் பேரில் திலகருக்கு 6 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டு இவர் பர்மாவில் இருந்த மாண்டலே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். மாண்டலே சிறைக்கு இவரை ‘ஹார்டிஞ்ச்’ எனும் பெயருடைய கப்பலில் கொண்டு சென்றனர். அதே காலகட்டத்தில் இவருடைய தீவிரவாத காங்கிரசில் அங்கம் வகித்த அரவிந்த கோஷ், வ.உ.சி. ஆகியோரும் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது....

சமுதாயச் சிற்பி ராமானுஜர் -2

குருவை மிஞ்சிய சிஷ்யனாக விளங்கிய ஸ்ரீ ராமானுஜர்,  ஸ்ரீபெரும்புதூரில் பொ.யு. ஆண்டு 1017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி அதாவது கலி ஆண்டு 4118-இல் சக ஆண்டு 938-இல் பிங்கள ஆண்டு சித்திரை மாதம் 12-ஆம் நாள், சுக்லபட்ச பஞ்சமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவருடைய தந்தை ஆசூரி கேசவாச்சாரியார் ஆவார். தாயார் காந்திமதி அம்மையாவார்.

எனது முற்றத்தில் – 28

தென்கோடி எட்டயபுரத்தில் இருந்து காசி மாநகரம் சென்று கல்வி பயின்ற பாரதியாருக்கு 11 மொழிகள் தெரிந்திருந்தது. ஆனால் அவர் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது, தமிழ்க் கவிஞராக. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று தன் தாய்மொழிப் பற்றை அழுத்தம் திருத்தமாக அவர் பிரகடனம் செய்தது ஒருபுறம்; மறுபுறம்  “காசி நகர்ப்புலவர் பேசு மொழிதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்ற பாரதியின் இன்னொரு வரி, காசியின் ஞானமேன்மையை நமக்கு நினைவூட்டுகிறது.

சமுதாயச் சிற்பி ராமானுஜர் – 1

சேலத்தைச் சார்ந்த எழுத்தாளர் திரு. இரா.பிரபாகர், வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ‘சத்தியப்பிரியன்’ என்ற பெயரில் பல இதழ்களில் சிறுகதைகளை எழுதி வருபவர். இறைவனின் முன்பு அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிய வைணவ ஆச்சாரியர் ஸ்ரீமத் ராமானுஜர் குறித்த அவரது கட்டுரைத் தொடர் இங்கே வெளியாகிறது…

ஸ்வதந்திர கர்ஜனை – 2(5)

இந்த காங்கிரசில் காரியக் கமிட்டிக்கு நடந்த தேர்தலில் தோற்ற பின்னர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அதிசயம் நடந்தது. காரியக் கமிட்டிக்கு அந்தந்த மாகாணப் பிரதிநிதிகள் கூடித் தங்கள் பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பார்கள். பம்பாய் மாகாண உறுப்பினர்கள் கூடித் தங்களுடைய இரண்டு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்காக மிதவாதி ஒருவரையும் தீவிர காங்கிரஸ்காரர் ஒருவரையும் முன்மொழிந்தனர். திலகர் ஆதரவு பெற்ற ஒரு பிரதிநிதியும் காந்திஜியின் பெயரும் முன்மொழியப்பட, அதில் காந்தி தோற்றுவிட்டதாகத் தெரிந்த நிலையில், திலகர் உடனடியாக காந்தி வெற்றி பெற்றார் என்று அறிவித்து விட்டார்....

கொன்றைவேந்தன் (86-91)

ஒரு செயலில் உற்சாகமாக இறங்குதல், செயலில் சந்திக்கும் இடையூறுகளை மனவலிமையோடு தாங்கிக் கொள்ளுதல், தோல்விகள் வந்தாலும் சோர்ந்து போய்விடாமல் தொடர்ந்து முயற்சி செய்தல், இலக்கை அடையும் வரை தொய்வின்றி உழைத்தல், வெற்றிக்குப் பின்னரும் ஓய்ந்து விடாமல் புதுப் புது முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுதல் ஆகியவை ஊக்கம் உடைமை ஆகும்.

கொன்றைவேந்தன் (81-85)

திதி என்றால் நாள். பிரதமை, துவிதியை முதல் அமாவாசை, பௌர்ணமி வரையாக கிருஷ்ணபட்சம், சுக்லபட்சம் என இரு 15 தினங்களாக இத் திதிகள் குறிக்கப்படும். அதிதி என்றால், இதுபோன்ற நாள், கிழமையற்ற எனப் பொருள். குறிப்பிட்ட தினத்தில்தான் வருவார்கள் என்று குறிப்பிட இயலாமல், எப்போது வேண்டுமானாலும் வரக்கூடிய புதியவர்களே அதிதிகள். அவர்களைத்தான் ‘விருந்து’ என்கிறது நம் பைந்தமிழ்.

ஸ்வதந்திர கர்ஜனை- 2(4)

காங்கிரஸ் மெல்லத் தன் வழியிலிருந்து மாறி தீவிர அரசியல் இயக்கமாக மாறி வரும் சூழ்நிலையை ஹியூம் கவனித்துக் கொண்டுதான் இருந்தார். தான் எந்தப் பின்னணியில் என்ன காரணத்துக்காக காங்கிரசைத் தொடங்கினாரோ, அந்த நோக்கம் திசைமாறி இப்போது இந்திய சுதந்திரம் எனும் கோஷத்துடன் புத்துணர்வு பெற்று பயணிப்பதை அவர் புரிந்துகொண்டு தன் வேலை இங்கு முடிந்துவிட்டது என்று மூட்டை முடிச்சுக்களுடன் இங்கிலாந்துக்குப் பயணமானார்....

கொன்றைவேந்தன் (76-80)

மௌன நிலையே ஞானத்தின் உச்சம் என்று போதிக்கிறார் ஔவையார். மோனம் என்பது மௌனம் ஆகும். இது பேசாப் பெருநிலை. அமைதியை மட்டும் இது குறிக்கவில்லை. மனத்தை ஒருநிலைப்படுத்தி ஆழ்ந்து சிந்திப்பதையும் குறிக்கிறது.

கொன்றைவேந்தன் (71-75)

நமது வினையே நமது விதியாகி நமக்கான விளைவைத் தீர்மானிக்கிறது. நாம் செய்யும் நன்மைகள், புண்ணியங்கள் அதற்கான சிறந்த பலன்களை நமக்குத் தருகின்றன. அதேபோல, தீமைகளும் பாவங்களும் தீய பலன்களை நமக்குக் கொடுக்கின்றன. நன்மை செய்ய இயலாவிட்டாலும் தீமை செய்யாமல் தவிர்க்கலாம். இதன்மூலம் பிறருக்கு மட்டுமல்ல, நமக்கு வரக்கூடிய தீமையையும் நாம் தடுக்கிறோம்.

எனது  முற்றத்தில்- 27

தெய்வ நம்பிக்கை உள்ள ஹிந்து ஒன்றும் பொதுவாக பணத்துக்குப் பறப்பவன் அல்ல. அவனுடைய கலாச்சாரம் அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது,  ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்று.  செல்வத்திற்குப் பெயரே ஐஸ்வர்யம் (ஈஸ்வர சம்பந்தம் உள்ளது). பேரறிஞர் தீனதயாள் உபாத்யாய குறிப்பிடுவாரே,  “சத ஹஸ்தம் ஸமாஹர,  சஹஸ்ர ஹஸ்தம் வீக்கிற” என்ற உபநிடத வாக்கியத்தை, அதன் பொருள்தான் என்ன? நூறு கரங்களால் விளைவி, ஆயிரம் கரங்களுக்கு  வழங்கு  என்பதுதானே?