இந்தியா சுதந்திரம் பெற்றபோது 1947 ஆகஸ்ட் 14-இல் திருவாவடுதுறை ஆதீனத்தால் நாட்டின் முதல் பிரதமர் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று (28.05.2023) தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியால் நிறுவப்படுகிறது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. இதனையொட்டி, தமிழ் இலக்கியங்களில் காணப்படும் செங்கோல் குறித்த பதிவுகளைக் காண்போம்...
Author: vamumurali
வேணு முதலி
வேதபுரம் என்று புதுவை நகரத்துக்கு ஒரு மாற்றுப் பெயர் உண்டு. பாரதியார் வேதபுரம் என்ற பெயரைப் பல இடங்களில் உபயோகித்துளளார். வேணு முதலி என்ற நபரைப் பற்றியும் பல கதை, கட்டுரைகளில் குறிப்பிடுகிறார். இக் கதை ‘சுதேசமித்திரனில்’ முதலில் வெளிவந்தது; ‘காளிதாசன் எழுதுகிறார்’ என்ற குறிப்புடன் இக்கதை வெளியாகி இருக்கிறது. பிறகு மித்திரன் அலுவலகம் 1920-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட ‘கதாமாலிகா’ என்ற நூலில் வெளியாயிற்று.
அவதாரம்
அவதாரம் என்றால் மேலிருந்து கீழிறங்குதல் என்று பொருள். இக்கதையில், ஒருவன் கீழிருந்து மேலே செல்கிறான். மனித வாழ்வின் புரிபடாத சிக்கல்களையும் தவிப்புகளையும் பூடகமாகச் சொல்லிச் செல்லும் எழுத்தாளர், இங்கே இசக்கிமுத்துவின் மனமும் உருவமும் சிறிது சிறிதாக மாறி வருவதை அவதாரத்திற்கு முந்தைய கணங்களாக முன்வைக்கிறார். ஆன்மிக வேட்கை கொண்ட இக்கதையை புதுமைப்பித்தன் எழுதிய ஆண்டு 1947...
பாம்புக் கதை
மனிதனைப் பற்றி ஒரு பாம்புக்கும் காக்கைக்கும் பேச்சுப் போல அமைந்துள்ள இந்தக் குட்டிக் கதை, ‘சுதேசமித்திரன்’ தினசரியில், 1919-ஆம் ஆண்டு வெளியாயிற்று. திரு. ரா.அ.பத்மநாபன் தொகுத்த ‘பாரதி புதையல்- முதல் பாகம்’ நூலில் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.
ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்
மானிடப் பிறப்பில் உயர்வு- தாழ்வு இல்லை. அது அவனது குனத்தில் தான் இருக்கிறது என்று அழுத்தம் திருத்தமாக நிறுவுகிறது சிறுகதை வேந்தர் ஜெயகாந்தன் அவர்களின் இக்கதை. எல்லோரும் அம்மாசியாகிவிட முடியாது தான். ஆனால், மனிதம் என்ற கனவை நோக்கிய பயணத்தில் பாசஞ்சர் வண்டிகள் வந்துகொண்டே இருக்கும்.
பஞ்ச கோணக் கோட்டை
‘பஞ்சகோணக் கோட்டை’ என்ற தத்துவார்த்தமான இந்தக் கதை திரு. வ.ரா. புதுவையில் நடத்திவந்த ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிகையில் வெளிவந்தது; பிறகு, 1945 செப்டம்பர் 9-ஆம் தேதி இது சென்னை ‘ஹநுமான்’ வாரப் பதிப்பிலும் வெளியாயிற்று. உண்மையில், சமுதாயத்திற்கு அறிவுரை கூற வந்த மகாகவி பாரதியின் அற்புதமான கட்டுரை இது...
அன்புஜோதியின் அவலமான பின்னணி
“சைவ உணவு விடுதி” என்ற பெயர் தாங்கிய நிறுவனத்தில் புலால் சமைத்துப் பரிமாறப்படுமானால் எப்படி பெயர் பொருத்தம் இல்லையோ, அது போன்றே காப்பகத்தின் பெயருக்கும், அங்கே நடக்கும் சம்பவங்களுக்கும் சற்றும் பொருத்தம் இல்லாத நிலையில் கடந்த 17 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் சின்னஞ்சிறு குக்கிராமத்தில் கொடுமைமிகு காப்பகம் இயங்கி வந்திருக்கிறது.....
ரஸத் திரட்டு
எல்லா மனிதரும் சமமென்ற கொள்கையை ஸமூஹ வாழ்க்கையில் ஸ்தாபனம் செய்யும்வரை மானிடருள்ளே இகல், பொறாமை, வஞ்சனை, போர் முதலிய ஏற்பாடுகள் நீங்க மாட்டாவாதலால் அக்கொள்கையை எப்படியேனும் அனுஷ்டானத்துக்குக் கொணர்ந்து விடவேண்டுமென்று ஐரோப்பிய ஞானிகள் பேராவல் கொண்டிருக்கின்றனர். இந்தியா ராஜாங்க விடுதலை பெற்றுவிடுமானால் தன் அனுஷ்டானத்தாலே உலகத்தாருக்கு இக்கொள்கையின் நலங்களை விளக்கிக் காட்டி உலகமுழுவதும் இதனைப் பரவச் செய்தல் ஸாத்யப்படும்.
திரையுலகம்: மாறுகிறது நெஞ்சம்… மாற்றுவது யாரோ?
இடதுசாரிகள், ஹவாலா கும்பல்கள், லிபரல்களால் கைப்பற்றப்பட்ட இந்திய சினிமாவும், திராவிட, நாத்திகக் கும்பல்களால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ்த் திரையுலகும் மீட்சி பெறுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன என்கிறார், தமிழ்த் திரைப்பட உதவி இயக்குநர் திரு. சின்னப்பா கணேசன். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தையும் அதையொட்டி வெளியான சில படங்களையும் முன்வைத்து, இந்த அவதானிப்பை இவர் முன்வைக்கிறார்….
ஜாம்பிகள் – ஜாக்கிரதை!
அற்புதமான உருவகக் கவிதை. எழுத்தாளர் திரு. பி.ஆர்.மகாதேவனின் இதயமெங்கும் வீசும் சத்திய அனல் கவிதையில் தெறிக்கிறது. ‘ஜாம்பி’ என்றால் என்ன என்று புரியவில்லையா? ‘ஜாம்பி’ என்று வரும் இடங்களில் எல்லாம் ‘மதவெறி’ என்று போட்டுக் கொள்ளுங்கள்… (எந்த மதவெறி என்று சொல்லி ஜாம்பிக் காவலர்களிடம் கடி வாங்க நான் தயாரில்லை). அப்போது, நீங்கள் வாழும் உலகின் தரையடி மெள்ள உங்கள் கால்களுக்குக் கீழே நழுவிக் கொண்டிருப்பது புரியும்.
கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-2
தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட. இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரை (பகுதி- 2) இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..
அகமும் புறமும் – 7
நாட்டை ஆளும் மன்னன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று வரையறுத்த நம் முன்னோர், மன்னனுக்கு உறுதுணை புரியும் அமைச்சனுக்கும் உயர் இலக்கணம் வரைந்துள்ளனர். ஒரு நல்லமைச்சன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கான இயல்புகளை தமிழின் பழமையான இலக்கியங்கள் வழியே இங்கு முன்வைக்கிறார் அமரர் பேரா. அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்.
கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம்-1
தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ. 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி 2023 மே 19-இல் அறிவித்திருக்கிறது. மக்கள் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி செப். 30-ஆம் தேதிக்குள் மாற்று ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்றதல்ல. அதேசமயம், அதன் தொடர்ச்சியான நடவடிக்கையும் கூட. இந்தத் தருணத்தில், 2016 பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 'காண்டீபம்’ காலாண்டிதழில் (தை 2017) வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை நினைவுகூர்வதற்கு உரியதாக உள்ளது. அக்கட்டுரை இங்கே நமது சரித்திரத் தேர்ச்சிக்காக..
பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும் – நூல் மதிப்புரை
இந்திய சமூக வாழ்வில் பசுக்களுக்கு பிரதான இடமுண்டு. அந்நியர் ஆட்சிக்காலத்தில் இந்த அடிப்படை ஆதாரத்தின் மீது கொடூரத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டபோது, அதற்கு எதிராக சமுதாயம் கடுமையாகவும், துணிச்சலாகவும் தொடர்ந்து போராடியிருக்கிறது. அதற்கான சான்றாவணமே ‘பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்’ என்னும் இந்நூல்.
நினைவாலே சிலை செய்து…
‘அந்தமான் காதலி’ படத்தின் பாடல்கள் அன்று முதல் இன்று வரை, செவிக்கு இதமாகவும் மனதைப் பக்குவப்படுத்தும் மருந்தாகவும் இருக்கின்றன. காதலியைப் பிரிந்து அவள் நினைவாகவே வாடும் நாயகன் அவளை தனது இதயத்திலிருந்து ஒருநாளும் அகற்றவில்லை. அதன் அடையாளமாகவே, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்” என்று கூறும் நாயகன், தனது காதலியை “திருக்கோயிலே ஓடி வா?” என்று அழைக்கிறான். எவ்வளவு இனிய உவமை! கவியரசரின் சிந்தையில் மலர்ந்த திரைக்கவிதை இன்று மட்டுமல்ல, என்றும் மணம் வீசும்.